மேலும் அறிய

Crime: தர்மபுரியில் கேரளாவை சேர்ந்தவர்கள் மர்மமான முறையில் கொலை - 6 பேர் கைது..!

நல்லம்பள்ளி வனப் பகுதியில் கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவர் மர்மமான முறையில் சடலமாக கிடந்த சம்பவத்தில், கொலை செய்ததாக, 6 பேரை தருமபுரி காவல் துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பூதனஅள்ளி வனப்பகுதியை ஒட்டியுள்ள பழைய கல்குவாரி பகுதியில் கடந்த 19ந் தேதி 2 ஆண் சடலம் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் அதியம்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன் மற்றும் அதியமான்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அங்கிருந்த சொகுசு கார் ஒன்றை பறிமுதல் செய்தனர். இதில் ஒருவரின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததால், தொடர்ந்து சம்பவ இடத்திற்கு, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பைரவா வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சடலமாக கிடந்தவர்கள் கேராளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சிவக்குமார் பாய், நிவில்ஜார்ஜ் குருஸ் என்பது தெரியவந்தது.
 

Crime: தர்மபுரியில் கேரளாவை சேர்ந்தவர்கள் மர்மமான முறையில் கொலை - 6 பேர் கைது..!
 
இந்த இரட்டை கொலை வழக்கில் தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து, செல்போன் தொடர்புகள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்தும், செல்போன் சிக்னல்களை கொண்டும், கொலையுன்டவர்களின் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்டமாக இருடியம் மோசடி விவாகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என தகவல் வெளியானது. மேலும் சந்தேகத்தின் பேரில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் மற்றும் லட்சுமணன் எ அபு ஆகிய இருவரை பிடித்து அதியமான்கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
 
 
Crime: தர்மபுரியில் கேரளாவை சேர்ந்தவர்கள் மர்மமான முறையில் கொலை - 6 பேர் கைது..!
 
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த ரகு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜோசப், சுரேன்பாபு, விஸ்னுவர்மன் ஆகிய 4 பேரும் நேற்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை உரிமையியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த நிலையில், நீதிமன்றத்தில் சரணடைந்த 4 மற்றும் அதகயமான்கோட்டை காவல் துறையினர் கைது 2 உள்ளிட்ட 6 பேரையும், தருமபுரி மாவட்ட காவல் துறையினர், தருமபுரி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்த இரட்டை கொலை வழக்கு சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வருவதால், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் அவர்களும் கைது செய்யபடுவார்கள், மேலும் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிவகங்கை: மோசடி நிதி நிறுவனங்கள் வலையில் சிக்காதீர்! காவல்துறை எச்சரிக்கை, விழிப்புணர்வு அவசியம்! 🚨
சிவகங்கை: மோசடி நிதி நிறுவனங்கள் வலையில் சிக்காதீர்! காவல்துறை எச்சரிக்கை, விழிப்புணர்வு அவசியம்! 🚨
சாத்தான்குளம் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேரும் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
சாத்தான்குளம் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேரும் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
மனைவியின் நடத்தையில் சந்தேகம்: மது போதையில் கணவன் செய்த கொடூரம்! கரூரில் அதிர்ச்சி சம்பவம்
மனைவியின் நடத்தையில் சந்தேகம்: மது போதையில் கணவன் செய்த கொடூரம்! கரூரில் அதிர்ச்சி சம்பவம்
கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் !! மாணவி அளித்த புகாரால் பரபரப்பு
கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் !! மாணவி அளித்த புகாரால் பரபரப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Candidates: அதிமுக 3ம் கட்ட வேட்பாளர்களை அறிவித்த எடப்பாடி- ஸ்டாலின், உதயநிதிக்கு யார்? திரு.வி.க. நகர் சர்ப்ரைஸ்
ADMK Candidates: அதிமுக 3ம் கட்ட வேட்பாளர்களை அறிவித்த எடப்பாடி- ஸ்டாலின், உதயநிதிக்கு யார்? திரு.வி.க. நகர் சர்ப்ரைஸ்
TN Election 2026: சென்னையின் 16 தொகுதிகள் - திமுக Vs அதிமுக களமிறக்கிய வேட்பாளர்கள் யார்? கைமாறும் தி.நகர்?
TN Election 2026: சென்னையின் 16 தொகுதிகள் - திமுக Vs அதிமுக களமிறக்கிய வேட்பாளர்கள் யார்? கைமாறும் தி.நகர்?
USA Iran War: ”உள்ள வந்துருவிங்களா? நரகத்திற்கு வெல்கம்” ஈரான் அருகே குவியும் அமெரிக்க படைகள் - தெஹ்ரான் வார்னிங்
USA Iran War: ”உள்ள வந்துருவிங்களா? நரகத்திற்கு வெல்கம்” ஈரான் அருகே குவியும் அமெரிக்க படைகள் - தெஹ்ரான் வார்னிங்
US Report on Pak. Terror: இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத குழுக்களுக்கு பாக். இன்னும் ஆதரவு; வெளியான அமெரிக்க அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத குழுக்களுக்கு பாக். இன்னும் ஆதரவு; வெளியான அமெரிக்க அதிர்ச்சி ரிப்போர்ட்
MI Vs KKR: கடப்பாரை Vs வாரியர்ஸ் - மும்பையை தொடரும் 13 வருட சாபம்? பாண்ட்யா டீம் ரூ.25 கோடியை சமாளிக்குமா?
MI Vs KKR: கடப்பாரை Vs வாரியர்ஸ் - மும்பையை தொடரும் 13 வருட சாபம்? பாண்ட்யா டீம் ரூ.25 கோடியை சமாளிக்குமா?
IPL 2026 RCB vs SRH: வெற்றியுடன் தொடங்கிய RCB! கோலி, படிக்கல், ரஜத் ஃபயர் பேட்டிங்!
IPL 2026 RCB vs SRH: வெற்றியுடன் தொடங்கிய RCB! கோலி, படிக்கல், ரஜத் ஃபயர் பேட்டிங்!
MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!
MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!
DMK Candidate List: போஸ் வெங்கட் முதல் ராஜீவ் காந்தி வரை... திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான முக்கிய பெயர்கள்!
DMK Candidate List: போஸ் வெங்கட் முதல் ராஜீவ் காந்தி வரை... திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான முக்கிய பெயர்கள்!
Embed widget