மேலும் அறிய

Crime: பெண்ணுக்கு விஷம் கொடுத்து கொலை; கள்ளக் காதலனை கைது செய்ய கோரி போராட்டம்

அரூர் அருகே கள்ளக் காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக, தலைமறைவான கள்ளக் காதலனை கைது செய்ய வலியுறத்தி, இறந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டம்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த குடுமியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்கர் மனைவி வைத்தீஸ்வரிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ராமராஜன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக கள்ளத்தனமாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வைத்தீஸ்வரிக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளது. இதேபோல் ராமராஜனுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராமராஜனும், வைத்தீஸ்வரியும் கடந்த ஐந்து வருடங்களாக கள்ளத்தனமாக உறவு வைத்து வந்துள்ளனர். இந்த உறவு இரு வீட்டிற்கும் தெரிந்து பல்வேறு பிரச்சனைகள் வந்த நிலையிலும் கூட இவர்களின் கள்ளத்தனமான உறவு நிறுத்தப்படவில்லை. 
 

Crime: பெண்ணுக்கு விஷம் கொடுத்து கொலை; கள்ளக் காதலனை கைது செய்ய கோரி போராட்டம்
 
மேலும் ராமராஜன் திருட்டு சம்பவங்களில் அதிகமாக ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் பல்வேறு இடங்களில் கடன் பெற்று அதை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருந்ததாக தெரிகிறது. கடந்த மாதம் தீபாவளி அன்று வைத்தீஸ்வரியை தனியாக வரவழைத்து நாம் இருவரும் செத்து விடலாம் என்று சொல்லி மதுபானத்தில் விஷத்தை கலந்து கொடுத்திருக்கிறார். “நான் குடிக்கின்றேன் நீயும் குடி” என்று வைத்தீஸ்வரி கூறியதற்கு, “நான் ஏற்கனவே குடித்து விட்டேன் நீ குடி” என்று சொல்லி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. பின்பு வைத்தீஸ்வரியை அழைத்துச் சென்று வீட்டின் அருகாமையில் விட்டு விட்டு இவர் வெளியூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வைத்தீஸ்வரி மயக்க நிலையில் இருந்ததை கண்ட உறவினர்கள், அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கே மருத்துவர்கள் உயிர்பிழைப்பது கடினம் தான் என்று சொல்லியதால், வைத்தீஸ்வரியை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வைத்தீஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இதனை தொடர்ந்து சடலத்தை அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து வந்துள்ளனர். Crime: பெண்ணுக்கு விஷம் கொடுத்து கொலை; கள்ளக் காதலனை கைது செய்ய கோரி போராட்டம்
 
அப்பொழுது வைத்தீஸ்வரியை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு  தலைமறைவாக உள்ள கள்ளக் காதலன் ராமராஜனை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அரூர் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ராமராஜன் என்பவர், பல குடும்ப பெண்களிடம் கள்ளத்தனமான உறவு வைத்து கொண்டு, இதுவரை மூன்று குடும்பங்கள் சீரழிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget