மேலும் அறிய

முன் சீட்டுக்கு தகராறு... தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மகன்! தலைநகரில் அதிர்ச்சி

வடக்கு டெல்லியின் திமார்பூர் பகுதியில் 26 வயது மகன் தனது தந்தையை முன் சீட்டை வழங்க மறுத்ததற்காக துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவமானது அரங்கேறியுள்ளது.

தனக்கு முன் இருக்கை மறுக்கப்பட்டதால் தந்தையை மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

தந்தை கொலை:

வடக்கு டெல்லியின் திமார்பூர் பகுதியில் 26 வயது மகன் தனது தந்தையை முன் சீட்டை வழங்க மறுத்ததற்காக துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவமானது அரங்கேறியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது, குற்றஞ்செய்தவரின் பெயர் தீபக் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் சம்பவத்தில் வைத்தே  கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கி மற்றும் 11 காட்ரிஜில் இருந்த  தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சம்பவம் நடந்து எப்படி?

இந்த சம்பவம் வியாழக்கிழமை(26.06.25) மாலை 7.30 மணி அளவில் திமார் பூர் பகுதியில் உள்ள எம்.எஸ் பிளாக்கில் நடைபெற்றது. அந்த பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கி சத்தம் கேட்டதையடுத்து விரைந்து சென்றுள்ளனர்.

அங்கு ஒரு நபர் ரத்தக் வெள்ளத்தில் கிடந்த நிலையில், பொதுமக்கள் கொலைசெய்த தீபக்கிடம் இருந்த துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளனர்.

முன்னாள் சிஐஎஸ்எப் வீரர்:

அப்போது அவர் 60 வயதான சுரேந்திர சிங் என அடையாளம் காணப்பட்டார். முன்னாள் சிஐஎஸ்எப் (CISF) துணை ஆய்வாளர் என கூறப்படுகிறது. அவரை உடனடியாக அருகிலுள்ள ஹெச்.ஆர்.எச் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, சுரேந்திர சிங் சிஐஎஸ்எப்பில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன் ஓய்வுபெற்றுள்ளார். அதன் பின்னர் குடும்பத்தினர் தங்கள் சொந்த ஊரான உத்தரகண்ட் மாநிலத்திற்கு மாறி செல்லத் திட்டமிட்டுள்ளனர்.

இருக்கைக்கு தகராறு:

இதற்காக குடும்பத்தினர் ஒரு டெம்போ வாடகைக்கு எடுத்து, வீட்டு பொருட்களை ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது தந்தையும், மகனும் முன் சீட்டில் யார் அமர வேண்டும் என்ற விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

சுரேந்திர சிங், ஏற்கனவே பொருட்கள் ஏற்றப்பட்டதால் தாமதம் ஏற்படக்கூடாது என்பதால், தாமாக முன் சீட்டில் அமர விரும்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தீபக் தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துத் தந்தையை நோக்கி சுட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தீபக் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
ஓயோ ரூமுக்கு சென்ற காதல் ஜோடி.. சில நிமிடங்களில் நடந்த ஷாக் சம்பவம்.. நடந்தது என்ன?
ஓயோ ரூமுக்கு சென்ற காதல் ஜோடி.. சில நிமிடங்களில் நடந்த ஷாக் சம்பவம்.. நடந்தது என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
Embed widget