மேலும் அறிய

மரம் வெட்ட மறுத்ததால் அடி உதை : குழந்தைகள் முன்பாகவே கர்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை

ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது குழந்தைகள் மற்றும் மாமியாரின் முன்பாகவே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது குழந்தைகள் மற்றும் மாமியாரின் முன்பாகவே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு, அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சடர்புர் என்ற மாவட்டம். இந்த மாவட்டத்தில் ஒரு கர்ப்பிணி பெண். அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோர் கடத்தப்பட்டு, அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்ட தலித் சமுதாயத்தை சேர்ந்த அந்த பெண்னின் கணவர் அவர் வேலை பார்க்கும் பண்ணை ஒன்றில் மரத்தை வெட்ட மறுத்ததால் அந்த பண்ணையின் முதலாளி இவ்வாறு செய்ததாக போலீசார் கூறியுள்ளனர்.


மரம் வெட்ட மறுத்ததால் அடி உதை : குழந்தைகள் முன்பாகவே கர்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை

பங்கஜ் ஷர்மா என்ற அந்த முதலாளி, 32 வயது மதிக்கத்தக்க தனது வேலையாள் ஒருவரை பண்ணையில் உள்ள மரத்தை வெட்டுமாறு கூறியுள்ளார். ஆனால் அவரோ உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அதை மறுத்துள்ளார். இந்நிலையில் கோபமடைந்த ஷர்மா அவரை அடித்து துன்புறுத்த, அவ்விடத்தில் இருந்து அந்த வேலையாள் தப்பியோடியுள்ளார். அதன் பிறகு வேலையாள் வீட்டிற்கு சென்ற பங்கஜ் ஷர்மா, வீட்டில் இருந்த அவரது கர்ப்பிணி மனைவியை அடித்து துன்புறுத்தி அதன் பிறகு கடத்திச்சென்றுள்ளார்.   


மரம் வெட்ட மறுத்ததால் அடி உதை : குழந்தைகள் முன்பாகவே கர்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை

இந்நிலையில் கடத்தப்பட்ட அந்த நால்வரும் கடந்த வியாழன்று மீட்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் போலீசாருக்கு அளித்த ரகசிய தகவலின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டதோடு அந்த தாதாவும் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் தப்பிவிட்டதாகவும் போலீசார் அவர்களை தேடிவருவதாகவும் அந்த மாவட்ட போலீஸ் அதிகாரி சச்சின் சர்மா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.  

பாலியல் ஆசிரியர் ராஜகோபாலனின் கூடுதல் ஆதாரங்கள்; சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி!

கடந்த வியாழன்று செய்தியாளர்களை சந்தித்த அப்பெண், பண்ணையின் சொந்தக்காரரான அந்த தாதா தன்னை தனது குழந்தைகள் முன்பாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும். ஆனால் முதல் தகவல் அறிக்கையில் இந்த தகவலை போலீசார் குறிப்பிடவில்லை என்றும் கூறினார். அந்த முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேர் மீதும், காயம் ஏற்படுத்துதல், கடத்தல், ஆபாசமாக பேசுதல் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பாதுகாப்பு சட்டத்தில் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மரம் வெட்ட மறுத்ததால் அடி உதை : குழந்தைகள் முன்பாகவே கர்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை

இந்நிலையில் அம்மாவட்ட அதிகாரி, ஊடகத்தின் முன் அந்த பெண் கூறிய தகவல்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறினார். அந்த பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், ஆனால் முதலில் அந்த பெண் தான் தாக்கப்பட்டதை மட்டுமே போலீசிடம் தெரிவித்ததாகவும், தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் குறித்து அவர் போலீசிடம் தெரிவிக்கவில்லை என்றும் சச்சின் கூறியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

தலைப்பு செய்திகள்

Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
Embed widget