மேலும் அறிய

பாலியல் ஆசிரியர் ராஜகோபாலனின் கூடுதல் ஆதாரங்கள்; சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி!

பாலியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 2 புகார்கள் வந்துள்ளதாகவும் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்

சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளது இருப்பதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டியளித்துள்ளார். 

 

பாலியல் ஆசிரியர் ராஜகோபாலனின் கூடுதல் ஆதாரங்கள்; சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி!

ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடை அணிந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னையின் பிரபல பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்ஸோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைதாகி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், அவர் மீது மேலும் இரண்டு பாலியல் புகார்கள் வரப்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அசோக் நகர் மகளிர் காவல் நிலைய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மேலும் பல முக்கியத் தகவல்களை பகிர்ந்துள்ளார். 

பாலியல் ஆசிரியர் ராஜகோபாலனின் கூடுதல் ஆதாரங்கள்; சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி!

‛‛ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்கள் காவல்துறையிடம் உள்ளதாகவும், அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு வழக்குகளில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தெரிவித்தார். மேலும் சென்னையில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியில்(மகரிஷி வித்யா மந்திர்) இது போன்ற பாலியல் புகார்களை மாணவிகள் அளித்துள்ளதாகவும், அந்த பள்ளியை சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகளையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களையும்  விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக,’’ கூறினார். ‛‛ஆன்லைன் வகுப்புகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது குறித்து சைபர் கிரைம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்னா’’ சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருவதால், சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலிறுத்தியுள்ளனர். ஆன்லைன் வகுப்புகளில் இவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தால், நேரடியாக நடக்கும் வகுப்பில் எந்த அளவிற்கு தவறுகள் நடைபெறும் என்பதையும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறைபாடு குறித்தும் பல பெற்றோர் கவலை தெரிவித்துள்ளன். ராஜகோபாலனின் குற்றச்சாட்டுகள் மீது மேலும் பல ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக காவல் ஆணையர் தெரிவித்திருக்கும் நிலையில், அவர் மீது மேலும் குவியும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இது இன்று, நேற்றல்ல பல ஆண்டுகளாக நடந்து வரும் பயங்கரம் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. 

பலர் துணிந்து வந்து புகார் தெரிவிக்கின்றனர். இன்னும் சிலர், புகார் அளிக்க மனமிருந்தும் புகார் அளித்தார் பெயர் கெட்டுவிடுமோ என்று அச்சம் அடைகின்றனர். எனவே பள்ளிகளில் எழும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வசதியாக, தனிக்குழு ஒன்றை அரசு நியமிக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள் , மகளிர் ஆணைய பிரதிநிதிகள் ஆகியோர் அதில் இடம் பெற வேண்டும். 

தலைப்பு செய்திகள்

பூவிருந்தவல்லி - வடபழனி மெட்ரோ ரெடி! ஆனா ரயில் ஓடாது... பின்னணியில் பகீர் காரணம்!
பூவிருந்தவல்லி - வடபழனி மெட்ரோ ரெடி! ஆனா ரயில் ஓடாது... பின்னணியில் பகீர் காரணம்!
தவணை முறையில் காலி மனை !! ஏமாறாமல் இருக்க வல்லுநர்களின் வழிகாட்டுதல்
தவணை முறையில் காலி மனை !! ஏமாறாமல் இருக்க வல்லுநர்களின் வழிகாட்டுதல்
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை & செங்கல்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை! முழு விவரம் உள்ளே!
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை & செங்கல்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை! முழு விவரம் உள்ளே!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Embed widget