மேலும் அறிய

Crime : வேலைக்கு அமர்த்தப்பட்ட 14 வயது சிறுமி... சித்ரவதை செய்த தம்பதியினர்... ஜார்க்கண்டில் கொடூரம்

சரியாக வேலை செய்யாத ஆத்திரத்தில் 14 வயது சிறுமியை சித்ரவதை செய்த தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர்.

Crime : சரியாக வேலை செய்யாத ஆத்திரத்தில் 14 வயது சிறுமியை சித்ரவதை செய்த தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் குர்கான் பகுதியைச் சேர்ந்த தம்பதினர் 14 வயது சிறுமியை 5 மாதங்களுக்கு முன் வேலைக்கு அமர்த்தினர். இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக 14 சிறுமியை வேலைக்கு அமர்த்தினர். 

இந்நிலையில், அந்த சிறுமி சரியாக வேலை செய்யாததால், சிறுமியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. உணவு கொடுக்காமல் கடுமையாக அடித்து, சூடு வைத்ததாக தெரிகிறது. மேலும்  அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து  ராஜ்சி உதவி மையம், காவல்நிலையத்தில் புகார் அளித்தது. புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், " குர்கான் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த தம்பதியினர். இவர்கள் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். இவர்கள் வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்த்துக் கொள்ள 14 வயது சிறுமியை வேலைக்கு அமர்த்தினர். அந்த சிறுமி முறையாக வேலை செய்யாததால் அவரை சித்ரவதை செய்துள்ளனர்.

அதன்படி, தினமும் ஈவு இரக்கமின்றி அடித்தனர். இரவு முழுவதும் சிறுமியை தூங்க விடாமல் செய்ததுடன், உணவும் அளிக்கப்படவில்லை. அதே சமயம் சிறுமியின் கை, கால், வாய் என உடல் முழுவதும் காயங்கள் இருந்தன.  பலத்த காயமடைந்த அந்த சிறுமிக்கு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக" போலீசார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர். வேலைக்கு அமர்த்தப்பட்ட 14 வயது சிறுமி சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் குற்றங்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்துக்கு  சுமார் 31 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் இதுவே அதிமாகும். கடந்த 2014ல் 30,906 புகார்கள் மகளிர் ஆணையத்தில் பதிவாகி உள்ளது. நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் 16,876  புகார்கள் கிடைக்கப் பெற்றன. இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 3,004 புகார்கள் கிடைக்க பெற்றன.  மூன்றாவது இடமாக மகாராஷ்ராவில்  1,381 புகார்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க

Crime : கோவை: ரூ. 33 லட்சம் மதிப்பு: தங்க நகைகளுடன் எஸ்கேப் ஆன நகைக்கடை தொழிலாளி: பறந்து சென்று பிடித்த காவல்துறை

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: தேர்தலில் சீட் இல்லை, கல்தா கொடுத்த கட்சி; பாஜக அண்ணாமலை பரபரப்பு ட்வீட்!
Annamalai: தேர்தலில் சீட் இல்லை, கல்தா கொடுத்த கட்சி; பாஜக அண்ணாமலை பரபரப்பு ட்வீட்!
BJP Candidate List: 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு - யார்? எங்கு? போட்டி - அண்ணாமலை அவுட்
BJP Candidate List: 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு - யார்? எங்கு? போட்டி - அண்ணாமலை அவுட்
BJP Candidate List: பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன?
பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன?
Budget Hybrid Cars: பேட்டரிலயும் ஓடும்.. பெட்ரோலயும் ஓடும்! இந்தியாவின் டாப் 4 ஹைப்ரிட் கார்கள் இதான்!
Budget Hybrid Cars: பேட்டரிலயும் ஓடும்.. பெட்ரோலயும் ஓடும்! இந்தியாவின் டாப் 4 ஹைப்ரிட் கார்கள் இதான்!
Annamalai: ”நேரில் ஆஜராகனும், உடனே சென்னை வாங்க” அண்ணாமலைக்கு BJP ஆர்டர் - மோடி தலைமையில் ஆலோசனை
Annamalai: ”நேரில் ஆஜராகனும், உடனே சென்னை வாங்க” அண்ணாமலைக்கு BJP ஆர்டர் - மோடி தலைமையில் ஆலோசனை
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முடிவுகள் எப்போது? வெளியான முக்கியத் தகவல்- பதிவிறக்கம் செய்வது எப்படி?
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முடிவுகள் எப்போது? வெளியான முக்கியத் தகவல்- பதிவிறக்கம் செய்வது எப்படி?
Iran Strikes Israel: பாலத்தையா அடிக்குற, நான் ரயில் நிலையத்த காலி பண்றேன்.! இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை வீச்சு
பாலத்தையா அடிக்குற, நான் ரயில் நிலையத்த காலி பண்றேன்.! இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை வீச்சு
CUET UG 2026: விரைவில் தொடங்கும் விண்ணப்பப்பதிவு; க்யூட் தேர்வு எப்போது? கால அட்டவணை
CUET UG 2026: விரைவில் தொடங்கும் விண்ணப்பப்பதிவு; க்யூட் தேர்வு எப்போது? கால அட்டவணை
Embed widget