மேலும் அறிய

Crime : சென்னை ரயில் நிலையத்தில் பரபரப்பு...ரயில் முன் பாய்ந்து பெண் வழக்கறிஞர் தற்கொலை..என்ன நடந்தது?

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பார்க் ரயில் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வரும் பயணிகள் பெரும்பாலும் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு மார்க்கமாக செல்ல பார்க் ரயில் நிலையத்தைத்தான் பயன்படுத்துவர்கள். இதனால், எப்போதும், நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை பார்க் ரயில் நிலையத்தில் காணமுடிவும்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பார்க் ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. பயணிகளின் கூட்டமும் அலைமோதியது. மதியம் நேரத்தில்  கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்தது. ரயில் பூங்கா நிலையத்திற்குள் நுழைந்ததும், பயணிகள் அனைவரும் ரயிலில் ஏற அவர்கள் வைத்திருந்த உடமைகளுடன் தயாராக இருந்தனர். அப்போது, யாரும் எதிர்பார்க்காதபோது இளம்பெண் ஒருவர் வேகமாக வந்து  ரயில் முன்பு பாய்ந்தார். அந்த இளம்பெணின் உடல் ரயில் மற்றும் தண்டவாளத்தில் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

பின்பு, விபத்து குறித்து அறிந்த எழும்பூர் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்த இளம்பெண் உடலை மீட்டனர். பின்பு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு இளம்பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில்,கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த ஹேமாவதி (25) என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

மேலும், ஹேமாவதி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தனது தோழிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து, தினமும்  மின்சார ரயில் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்து சென்றது தெரியவந்தது. அதன்படி, நேற்று வழக்கம் போல் ஹேமாவதி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த பணியை முடித்துவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்ல பார்க் ரயில் நிலையத்திற்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் ஹேமாவதியின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஹேமாவதியுடன் தங்கியுள்ள தோழிகளிடமும், போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்ணின் தற்கொலையால் தாம்பரம் கடற்கரை மார்க்கத்தில் அரைமணி நேரத்துக்கு மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
Embed widget