மேலும் அறிய

சேத்துப்பட்டு; நில பாகப்பிரிவினை தகராறு : தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது

நிலத்தை பாகப்பிரிவினை செய்து தரக்கோரிய தகராறில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் தம்பியை சுட்டுக்கொன்றுள்ளார்

சேத்துப்பட்டு அருகே நிலத்தை பாகப்பிரிவினை செய்து தரக்கோரிய தகராறில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் தனது சொந்த தம்பியை சுட்டுக்கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ராணுவ வீரரை போளூர் அருகே கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த உள்ள கரிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்கு தேவகி இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஜெகதீஷன் வயது (42). இவர் முன்னாள் ராணுவ வீரர். ராணுவத்தில் இருந்து வெளியேற் 3 வருடங்கள் ஆகிறது. இவருக்கு லைசன்சுடன் கூடிய கை துப்பாக்கி ஒன்று வைத்திருந்தார். இவருடைய மனைவி சிவகாமி இவர்களுக்கு ஒரு மகள், ஒருமகன் உள்ளனர். 2-வது மகன் கோதண்டராமன் வயது (31). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர்களுக்கு சொந்தமாக கரிப்பூர் கிராமத்தில் 7 ஏக்கர் நிலமும், அந்த நிலத்திலேயே வீடும் உள்ளது. அண்ணன், தம்பியான இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். ஜெகதீஷன் சரிவர விவசாய வேலை செய்வதில்லை என்று கூறப்படுகிறது.

சேத்துப்பட்டு; நில பாகப்பிரிவினை தகராறு : தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது

இதனால் அடிக்கடி அண்ணன், தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து தேவகியும், அவரது இளைய மகன் கோதண்டராமனும் தேவிகாபுரத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். தற்போது மீண்டும் தாயும் இளைய மகனும் சொந்த கரிப்பூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்.இந்த நிலையில் கோதண்டராமனுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக நிலத்தை பாகப்பிரிவினை செய்து தரக்கோரி அவரது அண்ணனிடம் கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இதனால் அடிக்கடி அண்ணன், தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் இன்று மே (16) மதியம் மீண்டும் நிலம் குறித்து சகோதரர்கள் இருவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றவே ஜெகதீஷன் அவரிடமிருந்த கைத்துப்பாக்கியால் அவரது தம்பி கோதண்டராமனை நோக்கி சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி தோட்டா கோதண்டராமன் நெஞ்சை துளைத்து தூக்கி வீசியது. இதனால் படுகாயம் அடைந்த கோதண்டராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சேத்துப்பட்டு; நில பாகப்பிரிவினை தகராறு : தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது

துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். அவர்கள் வருவதற்க்குள் ஜெகதீஷன் மற்றும் அவருடைய மனைவி சிவகாமி அங்கிருந்து இருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் சேத்துப்பட்டு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளானர். தகவலறிந்த சேத்துப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார், சேத்துப்பட்டு ஆய்வாளர் பிரபாவதி, ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போழுது ரத்த வெள்ளத்தில் இருந்த கோதண்டராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல காவல்துறையினர் முயன்றனர். அப்போது அவருடைய உறவினர்கள் சாலையை மறித்து முள் கம்புகளை வெட்டி போட்டு காவல்துறையினரிடம் உடலைத் தருவதற்கு மறுத்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


சேத்துப்பட்டு; நில பாகப்பிரிவினை தகராறு : தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது

அதன் பிறகு காவல்துறையினர் கோதண்டராமனின் உறவினர்களிடம் சமாதானம் பேசி கோதண்டராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் தலைமறைவாக இருந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெகதீசனை  காவல்துறையினர் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் அண்ணனே தம்பியை சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Khamenei: சூழும் மரண மேகம்; அரசியல் வாரிசுகளை அறிவித்த காமேனி - லிஸ்ட்டில் வாரிசு மிஸ்ஸிங்
சூழும் மரண மேகம்; அரசியல் வாரிசுகளை அறிவித்த காமேனி - லிஸ்ட்டில் வாரிசு மிஸ்ஸிங்
Indigo Flight 'Mayday' Call: சென்னை சென்றுகொண்டிருந்த விமானத்தில் இருந்து வந்த ‘மேடே‘ அழைப்பு - அதன்பின் நடந்தது என்ன.?
சென்னை சென்றுகொண்டிருந்த விமானத்தில் இருந்து வந்த ‘மேடே‘ அழைப்பு - அதன்பின் நடந்தது என்ன.?
North Korea: உக்ரைனுக்கு தலைவலியை கொடுக்கும் டெரர் கூட்டணி; ரஷ்யாவுக்காக களமிறங்கும் வட கொரியா
உக்ரைனுக்கு தலைவலியை கொடுக்கும் டெரர் கூட்டணி; ரஷ்யாவுக்காக களமிறங்கும் வட கொரியா
Iran Slams US: “அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து எங்களுக்கு எதிராக சதி“; வெளுத்து வாங்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர்
“அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து எங்களுக்கு எதிராக சதி“; வெளுத்து வாங்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓட்டுனருக்கு அடி, உதை அடாவடி செய்த இளைஞர்கள் வெளியான சிசிடிவி காட்சி
”கர்பமா இருக்க என்ன அடிச்சான்” உறைய வைக்கும் ஆதாரம் அஸ்மிதா உருக்கம் |  Shri Vishnu | Ashmitha
பயம் காட்டும் பாஜக தொகுதி மாறும் ஜெயக்குமார் எடப்பாடிக்கு தூது | EPS | ADMK BJP Alliance
எ.வ.வேலு-பாமக அருள் சந்திப்பு! திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி? ரவுண்டு கட்டும் அன்புமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Khamenei: சூழும் மரண மேகம்; அரசியல் வாரிசுகளை அறிவித்த காமேனி - லிஸ்ட்டில் வாரிசு மிஸ்ஸிங்
சூழும் மரண மேகம்; அரசியல் வாரிசுகளை அறிவித்த காமேனி - லிஸ்ட்டில் வாரிசு மிஸ்ஸிங்
Indigo Flight 'Mayday' Call: சென்னை சென்றுகொண்டிருந்த விமானத்தில் இருந்து வந்த ‘மேடே‘ அழைப்பு - அதன்பின் நடந்தது என்ன.?
சென்னை சென்றுகொண்டிருந்த விமானத்தில் இருந்து வந்த ‘மேடே‘ அழைப்பு - அதன்பின் நடந்தது என்ன.?
North Korea: உக்ரைனுக்கு தலைவலியை கொடுக்கும் டெரர் கூட்டணி; ரஷ்யாவுக்காக களமிறங்கும் வட கொரியா
உக்ரைனுக்கு தலைவலியை கொடுக்கும் டெரர் கூட்டணி; ரஷ்யாவுக்காக களமிறங்கும் வட கொரியா
Iran Slams US: “அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து எங்களுக்கு எதிராக சதி“; வெளுத்து வாங்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர்
“அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து எங்களுக்கு எதிராக சதி“; வெளுத்து வாங்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர்
IND Vs ENG Test: 3 சதங்கள் இருந்தும் 471-ல் ஆல்அவுட் ஆன இந்தியா - விக்கெட்டுகளை சாய்த்த பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங்
3 சதங்கள் இருந்தும் 471-ல் ஆல்அவுட் ஆன இந்தியா - விக்கெட்டுகளை சாய்த்த பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங்
Annamalai: ஞானசேகரன் வழக்கு; வாயை விட்ட அண்ணாமலை - கோர்ட்டுக்கு இழுத்த வழக்கறிஞர்
ஞானசேகரன் வழக்கு; வாயை விட்ட அண்ணாமலை - கோர்ட்டுக்கு இழுத்த வழக்கறிஞர்
வால்பாறை எம்.எல்.ஏ கந்தசாமி காலமானார்: அதிமுகவில் எதிர்பாராத இழப்பு.. தொண்டர்கள் சோகம்!
வால்பாறை எம்.எல்.ஏ கந்தசாமி காலமானார்: அதிமுகவில் எதிர்பாராத இழப்பு.. தொண்டர்கள் சோகம்!
அணு ஆயுதத்தை சோதித்ததா ஈரான்.? பூகம்பம் வந்ததால் கிளம்பிய சந்தேகம் - நடந்தது என்ன.?
அணு ஆயுதத்தை சோதித்ததா ஈரான்.? பூகம்பம் வந்ததால் கிளம்பிய சந்தேகம் - நடந்தது என்ன.?
Embed widget