மேலும் அறிய

சேத்துப்பட்டு; நில பாகப்பிரிவினை தகராறு : தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது

நிலத்தை பாகப்பிரிவினை செய்து தரக்கோரிய தகராறில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் தம்பியை சுட்டுக்கொன்றுள்ளார்

சேத்துப்பட்டு அருகே நிலத்தை பாகப்பிரிவினை செய்து தரக்கோரிய தகராறில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் தனது சொந்த தம்பியை சுட்டுக்கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ராணுவ வீரரை போளூர் அருகே கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த உள்ள கரிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்கு தேவகி இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஜெகதீஷன் வயது (42). இவர் முன்னாள் ராணுவ வீரர். ராணுவத்தில் இருந்து வெளியேற் 3 வருடங்கள் ஆகிறது. இவருக்கு லைசன்சுடன் கூடிய கை துப்பாக்கி ஒன்று வைத்திருந்தார். இவருடைய மனைவி சிவகாமி இவர்களுக்கு ஒரு மகள், ஒருமகன் உள்ளனர். 2-வது மகன் கோதண்டராமன் வயது (31). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர்களுக்கு சொந்தமாக கரிப்பூர் கிராமத்தில் 7 ஏக்கர் நிலமும், அந்த நிலத்திலேயே வீடும் உள்ளது. அண்ணன், தம்பியான இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். ஜெகதீஷன் சரிவர விவசாய வேலை செய்வதில்லை என்று கூறப்படுகிறது.

சேத்துப்பட்டு; நில பாகப்பிரிவினை தகராறு : தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது

இதனால் அடிக்கடி அண்ணன், தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து தேவகியும், அவரது இளைய மகன் கோதண்டராமனும் தேவிகாபுரத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். தற்போது மீண்டும் தாயும் இளைய மகனும் சொந்த கரிப்பூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்.இந்த நிலையில் கோதண்டராமனுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக நிலத்தை பாகப்பிரிவினை செய்து தரக்கோரி அவரது அண்ணனிடம் கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இதனால் அடிக்கடி அண்ணன், தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் இன்று மே (16) மதியம் மீண்டும் நிலம் குறித்து சகோதரர்கள் இருவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றவே ஜெகதீஷன் அவரிடமிருந்த கைத்துப்பாக்கியால் அவரது தம்பி கோதண்டராமனை நோக்கி சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி தோட்டா கோதண்டராமன் நெஞ்சை துளைத்து தூக்கி வீசியது. இதனால் படுகாயம் அடைந்த கோதண்டராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சேத்துப்பட்டு; நில பாகப்பிரிவினை தகராறு : தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது

துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். அவர்கள் வருவதற்க்குள் ஜெகதீஷன் மற்றும் அவருடைய மனைவி சிவகாமி அங்கிருந்து இருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் சேத்துப்பட்டு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளானர். தகவலறிந்த சேத்துப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார், சேத்துப்பட்டு ஆய்வாளர் பிரபாவதி, ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போழுது ரத்த வெள்ளத்தில் இருந்த கோதண்டராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல காவல்துறையினர் முயன்றனர். அப்போது அவருடைய உறவினர்கள் சாலையை மறித்து முள் கம்புகளை வெட்டி போட்டு காவல்துறையினரிடம் உடலைத் தருவதற்கு மறுத்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


சேத்துப்பட்டு; நில பாகப்பிரிவினை தகராறு : தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது

அதன் பிறகு காவல்துறையினர் கோதண்டராமனின் உறவினர்களிடம் சமாதானம் பேசி கோதண்டராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் தலைமறைவாக இருந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெகதீசனை  காவல்துறையினர் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் அண்ணனே தம்பியை சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

"திருமணம் மீறிய உறவு" தந்தையிடம் புகார் கூறியதால் ஆத்திரம் ! பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தாய்
" ஒன்னும் ஆகாது " பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி அலுவலக உதவியாளர்
" தோழிகள் கண்முன்னே பயங்கரம் " பெப்பர் ஸ்ப்ரே அடித்து இளம்பெண் வெட்டிக் கொலை
ஆட்சியர் தொடங்கி வைத்த மாரத்தான் ஓட்டம்; ஆம்புலன்ஸில் முடிந்த அவலம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
ஆட்சியர் தொடங்கி வைத்த மாரத்தான் ஓட்டம்; ஆம்புலன்ஸில் முடிந்த அவலம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக
TVK Govt. Vs Nainar Nagendran: “காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
“காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்
Annamalai: சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
சிஎம் விஜய்யின் 'ரெய்டு' ஆக்ஷன், எ.வ.வேலுவோடு நிறுத்தாதீங்க - ஊழல் வேட்டைக்கு அண்ணாமலை கொடுத்த கிரீன் சிக்னல்
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Minister Sarathkumar: ‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
‘Drug‘ பயன்படுத்தினேனா.? அவசரப்பட்டுட்டீங்களே.! சர்ச்சை வீடியோவிற்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம்
EV Vs CNG Value: EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ
Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
Upcoming Honda Cars: ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா
Embed widget