மேலும் அறிய

ரயிலில் செல்லும் பெண்களை குறி வைத்து ஆபாச சில்மிஷம் - சென்னையில் ஆசாமி கைது

ரயிலில் செல்லும் பெண்களை குறி வைத்து ஆசாமி செய்யும் சில்மிஷ செய்கையால் புகார் அளித்த பெண்கள்.

பெண்களிடம் ஆபாச செய்கை

சென்னை வியாசர்பாடி பகுதியில் ரயிலில் செல்லும் பெண்களைப் பார்த்து ஒருவர் ஆபாச செய்கை செய்வதாகவும் நிர்வாணமான நிலையில் ஒருவரை அடிக்கடி அப்பகுதியில் மக்கள் பார்த்ததாகவும் அவ்வப் போது ரயிலில் செல்லும் பெண்கள் தெரிவித்து வந்தனர். இது குறித்து வியாசர்பாடி மற்றும் ஓட்டேரி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், ஓட்டேரி  போலீசார் வியாசர்பாடி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது இவர் வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கும் , பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் மெதுவாக செல்லும் போது ரயில் பெட்டியில் பெண்கள் பெட்டியில் உள்ள பெண்களை பார்த்து ஆபாசமான செய்கை செய்வதும் அவர்களைப் பார்த்து சுய இன்பம் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தது தெரிய வந்தது.

பல பேர் ரயிலில் செல்வதால் இது குறித்து புகார் அளிக்கவில்லை ரயில் வேகமாக செல்லுவது மற்றும் ரயிலில் இருந்து கீழே இறங்கி வர முடியாது என்பதால் தொடர்ந்து இவர் இது போன்று செய்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் முனுசாமிக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒன்றரை வயதில் மகனும் உள்ளார். இவர் கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து முனுசாமி மீது வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

வியாசர்பாடியில் பிரபல ரவுடி வெட்டி கொலை

சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் (எ) தொண்டை ராஜ் (42) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். மூன்று கொலை வழக்கு உட்பட இவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு வழியாக தனது மனைவியுடன் செல்லும் போது இவரை வழிமடக்கிய இரண்டு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது.


ரயிலில் செல்லும் பெண்களை குறி வைத்து ஆபாச சில்மிஷம் - சென்னையில் ஆசாமி கைது

( கொலை செய்யப்பட்ட தொண்டை ராஜ் )

இதில் முகத்தில் பலத்த காயமடைந்த தொண்டை ராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வியாசர்பாடி போலீசார் தொண்டைராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்வரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

தந்தையின் கொலைக்கு பழி தீர்க்க நண்பர்களுடன் சேர்ந்து வெறிச் செயல்

வியாசர்பாடி பகுதியில் இவருக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருந்ததால் கடந்த சில மாதங்களாக மணலி சின்னசேக்காடு பகுதியில் தனது மனைவியுடன் தொண்டை ராஜ் தங்கி வந்துள்ளார். கடைசியாக எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் இவர் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார்.  ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு , மணலியில் இருந்து வியாசர்பாடிக்கு தனது உறவினர் வீட்டிற்கு ஆட்டோவில் தனது மனைவியுடன் வந்துள்ளார்.

வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு நான்காவது தெரு பகுதியில் ஆட்டோவில் இருந்து இறங்கி தொண்டை ராஜ் செல்லும் போது அங்கு நின்றிருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தொண்டைராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த தொண்டை ராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு தொண்டை ராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

2020 ம் ஆண்டு - பழிக்கு பழி

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வியாசர்பாடி பகுதியில் ராஜீ என்பவரை தொண்டை ராஜ் வெட்டி படுகொலை செய்துள்ளார். அதற்கு பழி வாங்குவதற்காக அவரது மகன் சூர்யா தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை யடுத்து துணைக் கமிஷனரின் தனிப்படை போலீசார் மற்றும் வியாசர்பாடி போலீசார் இணைந்து வியாசர்பாடி கூட்செட் பகுதியில் வைத்து நான்கு பேரை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது அவர்கள் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடும் போது கீழே விழுந்ததில் சூர்யாவிற்கு கை மற்றும் கால் உடைந்தது. மேலும் அவரது நண்பர்களான  முருகன். அஜித் என்பவர்களுக்கு கையும் ஸ்ரீராம் என்பவருக்கு காலும் உடைந்தது. இதனை எடுத்து நான்கு பேரையும் அழைத்துச் சென்று மாவு கட்டு போட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வியாசர்பாடி பகுதியில் சேர்ந்த சூர்யா (27) ஸ்ரீராம் (25) அஜித் (எ) சப்பு மூக்கு (25) முருகன் 28 ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சூர்யா தனது தந்தையின் மரணத்திற்கு பழி வாங்கும் விதமாக தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து நான்கு பேர் மீதம் வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!
”எல்லாம் கரெக்ட்டா போகுதா” நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு! அமைச்சர் பிரபு அதிரடி
MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீங்க இருங்க முதல்வரே.. நாங்க பேசிக்குறோம்.. திமுகவை எதிர்க்கும் காங்கிரஸ்.. சரமாரி பதிலடி!
நீங்க இருங்க முதல்வரே.. நாங்க பேசிக்குறோம்.. திமுகவை எதிர்க்கும் காங்கிரஸ்.. சரமாரி பதிலடி!
Gold Silver Rate May 25th: வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ஏறுமுகத்திற்கு மாறிய தங்கம் விலை; இப்போது எவ்வளவு தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ஏறுமுகத்திற்கு மாறிய தங்கம் விலை; இப்போது எவ்வளவு தெரியுமா.?
Virat Kohli: மானம் போகுது..! ஹெட்டின் மனைவி மீது வன்மத்தை கொட்டிய கோலி ரசிகர்கள்- குவியும் கண்டனம்
Virat Kohli: மானம் போகுது..! ஹெட்டின் மனைவி மீது வன்மத்தை கொட்டிய கோலி ரசிகர்கள்- குவியும் கண்டனம்
Tata Tiago 2026 Vs Tiago EV: டியாகோ Vs டியாகோ EV - டாப் 10 அப்டேட்கள் என்ன? எது எப்படி டாப்? முழு விவரங்கள்
டியாகோ Vs டியாகோ EV - டாப் 10 அப்டேட்கள் என்ன? எது எப்படி டாப்? முழு விவரங்கள்
US Iran War: அப்போ, ஈரான் மேல அட்டாக் கன்ஃபார்ம் தானா.? ஏஐ புகைப்படம் மூலம் மிரட்டிய ட்ரம்ப்
அப்போ, ஈரான் மேல அட்டாக் கன்ஃபார்ம் தானா.? ஏஐ புகைப்படம் மூலம் மிரட்டிய ட்ரம்ப்
Top 10 News Headlines: முதல்வர் விஜய் ஆலோசனை, தங்கம் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை சரிவு, ட்ரம்ப் அச்சுறுத்தல் - 11 மணி செய்திகள்
முதல்வர் விஜய் ஆலோசனை, தங்கம் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை சரிவு, ட்ரம்ப் அச்சுறுத்தல் - 11 மணி செய்திகள்
Chennai Corporation: ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
17 வயது சிறுவனை வெட்டிக் கொன்ற கும்பல்..! கொண்டாட்டங்கள் போதும் CM சார் - அண்ணாமலை ஆவேசம்
17 வயது சிறுவனை வெட்டிக் கொன்ற கும்பல்..! கொண்டாட்டங்கள் போதும் CM சார் - அண்ணாமலை ஆவேசம்
Embed widget