மேலும் அறிய

‛விளம்பரப்படம்... ரூ.30 கோடி கடன்... ரூ.3.50 கோடி கமிஷன்...’ சென்னை ஆடிட்டர் கொலையில் திருப்பம்!

சென்னை ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான் 30 கோடி ரூபாய் கடன் பெற்றுதருவதாக கூறி 3.50 கோடி ரூபாய் ஏமாற்றியதால் கொலைசெய்து புதைத்தோம் என கிருஷ்ணகிரி நகர காவல்நிலையத்தில் கொளையாளி வாக்குமூலம் அளித்துள்ளனர்

சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான் வயது (48). இவர் கடந்த 27ம் தேதி கிருஷ்ணகிரிக்கு காரில் வந்தபோது மாயமானார். அவரதுமனைவி பூர்ணிமா என்னுடைய காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத் தினர். இதில் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானை, பண விவகாரத்தில் சிலர் கொன்று, ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டியில் உள்ள மாந்தோப்பில் புதைத்தது தெரியவந்தது. 

இந்நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர் , இக்கொலையில் தொடர்புடைய பெரம்பலூர் சபரீஷ் வயது (42), மேட்டூர் மாதையன்குட்டை கோபிநாத் வயது (45), பெரம்பலூர் மணிவண்ணன் வயது (34), ஊத்தங்கரை தாலுகா கொடமாண்டப்பட்டி ரேணிகுண்டாஹள்ளி திருமால் வயது (36), பெங்களூருவைச் சேர்ந்த பிரசாத் வயது (45). லோகநாதன் வயது (45), சாமல்பட்டியை சேர்ந்த விசிக பிரமுகர் ஜிம் மோகன் வயது (40), மத்தூர் திருப்பதி வயது (35). சென்னை தி.நகர் வக்கீல் கிருஷ்ண குமார் வயது (43) ஆகிய 9 நபர்களை அழைத்து நேற்று முன்தினம் இரவு கைது  செய்தனர். இச்சம்பவம் குறித்து ஜனார்த்தன பிரதானின் சடலம் சாமல்பட்டி மாந்தோப்பில் மீட்கப்பட்டதால் சாமல்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில் . தற்போது, இந்த வழக்கு கிருஷ்ணகிரி நகர காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

 


‛விளம்பரப்படம்... ரூ.30 கோடி கடன்... ரூ.3.50 கோடி கமிஷன்...’ சென்னை ஆடிட்டர் கொலையில் திருப்பம்!

 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சபரீஷ் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறியது: பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமத்தில் வசித்து வந்த சபரீஷ், கடந்த ஒரு வருடத்திற்கு முன் சென்னைக்கு சென்று வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். அங்கு விளம்பர படங்கள் எடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாகவும். அப்போது அங்குவந்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமாருடன் சபரீசுக்கு நண்பர்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் தனக்கு வங்கியில் ரூ.35 கோடி கடன் வாங்குவதற்கு உதவும் படி சபரீஷிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர், தனது நண்பரான ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இருவரும் ஜனரஞ்சன் பிரதானை சந்தித்த போது, ரூ.30 கோடிக்கு கடன் பெற்று  தருவதாகவும், அதற்கு கமிஷனாக முன்னதாகவே ரூ.3.50 கோடியை தனக்கு தர வேண்டும், எனவும் ஜனரஞ்சன் பிரதான் தெரிவித்துள்ளார். அதன்படி, ரூ.3.50 கோடியை ஜனரஞ்சனிடம் சபரீஷ் கொடுத்துவைத்துள்ளார் என்றுள்ளனர். ஆனால், அவர் கடன் வாங்கிக் கொடுக்கவில்லை. இதையடுத்து சபரீஷ் பெரம்பலூருக்கு வந்துவிட்டார்.


‛விளம்பரப்படம்... ரூ.30 கோடி கடன்... ரூ.3.50 கோடி கமிஷன்...’ சென்னை ஆடிட்டர் கொலையில் திருப்பம்!

 

இந்நிலையில் சென்னை, ஐதராபாத் பகுதியில் பண மோசடியில் ஈடுபட்டதாக, ஜனரஞ்சன் பிரதானை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர் என்ற செய்தியை பார்த்த சபரீஷ், சிறைக்கு சென்று அவரை பார்த்துள்ளார். அப்போது தன்னை ஜாமீனில் எடுத்தால் உண்ணுடைய பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக கூறவே, ஜாமீனில் எடுக்க பண உதவி செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து , பணத்தை தான் தரும்படி கேட்டபோது, ஜனரஞ்சன் பிரதான் தராமல் இழுத்தடித்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகுமாரிடம் சபரீஷ் தெரிவித்துள்ளாராம்.

இந்நிலையில், கிருஷ்ண கிரியில் ஒருவருக்கு சில கோடி ரூபாய் கடன் வேண்டும். என சபரீஷ் தெரிவித்துள்ளார். அவரை பார்க்க செல்லலாம் என ஜனரஞ்சன் பிரதானை அழைத்துக்கொண்டு, சாமல்பட்டிக்கு 3 நபர்களும் வந்தனர். அப்பகுதியை சேர்ந்த திருமால் என்பவரின் வீட்டில் அவர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது ரூ.3.50 கோடி தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ஜனரஞ்சன் பிரதானை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் நண்பர்கள் உதவியுடன், அங்கிருந்து அவரது உடலை மாந்தோப்பில் புதைத்துள்ளனர். இவ்வாறு சபரீஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறினர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 9 நபர்களையும், காவல்துறையினர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபிரபு முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.  கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி - வாலிபர் கைது
கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி - வாலிபர் கைது
தூத்துக்குடி பெண் நெல்லையில் வெட்டிக் கொலை !! தம்பி மற்றும் நண்பர்கள் செய்த பயங்கர காரியம்
தூத்துக்குடி பெண் நெல்லையில் வெட்டிக் கொலை !! தம்பி மற்றும் நண்பர்கள் செய்த பயங்கர காரியம்
₹10 எக்ஸ்ட்ரா வாங்குவது ஏன்? - சீக்ரெட் லிஸ்ட்டை உடைத்த டாஸ்மாக் ஊழியர்கள்!
₹10 எக்ஸ்ட்ரா வாங்குவது ஏன்? - சீக்ரெட் லிஸ்ட்டை உடைத்த டாஸ்மாக் ஊழியர்கள்!
கோவையை அதிரவைத்த கள்ள நோட்டு கும்பல் – 1998 குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்பு ?
கோவையை அதிரவைத்த கள்ள நோட்டு கும்பல் – 1998 குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்பு ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay Reels | அதிகாரியா? FAN BOY-ஆ?முதல்வர் மீட்டிங் LEAKED! REELS எடுத்த நபர் யார்?
Twisha Sharma : MISS புனே திடீர் மரணம்! சிக்கிய EX.நீதிபதி குடும்பம்..வரதட்சணை கொடுமை?
Tasmac Issue | ’’பாட்டிலுக்கு 10 ரூபாய்!’’TASMAC ஊழியர்கள் STRIKE..மயிலாடுதுறையில் பரபரப்பு
Kanimozhi Santhosh issue | ”மகாராணி-னு நினைப்போ
யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் நாளை மருந்துகள் கிடைக்குமா? - அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு பேட்டி
தமிழ்நாட்டில் நாளை மருந்துகள் கிடைக்குமா? - அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு பேட்டி
TVK New Ministers: புதிய அமைச்சர்கள் லிஸ்ட் ரெடி! ஆளுநர் வந்தவுடன் பதவியேற்பு விழா - வேகம் எடுக்கும் விஜய் அரசு
TVK New Ministers: புதிய அமைச்சர்கள் லிஸ்ட் ரெடி! ஆளுநர் வந்தவுடன் பதவியேற்பு விழா - வேகம் எடுக்கும் விஜய் அரசு
CM Vijay: முதலமைச்சர் விஜய் ஆலோசனை கூட்டத்தில் செல்ஃபி வீடியோ எடுத்தது யார்? வெளியான உண்மை!
CM Vijay: முதலமைச்சர் விஜய் ஆலோசனை கூட்டத்தில் செல்ஃபி வீடியோ எடுத்தது யார்? வெளியான உண்மை!
Honda SUV: புதுசா.. மாஸா.. ரூ.10 லட்சத்துக்கும் குறைவா- ஹோண்டாவின் புதிய எஸ்யூவி கார்!
Honda SUV: புதுசா.. மாஸா.. ரூ.10 லட்சத்துக்கும் குறைவா- ஹோண்டாவின் புதிய எஸ்யூவி கார்!
CV Shanmugam : தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Vijay: தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
Annamalai : ’அவர் மீண்டும் வரனும் – பாஜகவில் எழத் தொடங்கியது கலக குரல்’ தலைவராகிறாரா அண்ணாமலை..?
’அண்ணாமலைக்கு ஆதரவாக எழும் குரல்கள்’ மீண்டும் பாஜக தலைவர் ?
Embed widget