மேலும் அறிய

‛விளம்பரப்படம்... ரூ.30 கோடி கடன்... ரூ.3.50 கோடி கமிஷன்...’ சென்னை ஆடிட்டர் கொலையில் திருப்பம்!

சென்னை ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான் 30 கோடி ரூபாய் கடன் பெற்றுதருவதாக கூறி 3.50 கோடி ரூபாய் ஏமாற்றியதால் கொலைசெய்து புதைத்தோம் என கிருஷ்ணகிரி நகர காவல்நிலையத்தில் கொளையாளி வாக்குமூலம் அளித்துள்ளனர்

சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான் வயது (48). இவர் கடந்த 27ம் தேதி கிருஷ்ணகிரிக்கு காரில் வந்தபோது மாயமானார். அவரதுமனைவி பூர்ணிமா என்னுடைய காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத் தினர். இதில் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானை, பண விவகாரத்தில் சிலர் கொன்று, ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டியில் உள்ள மாந்தோப்பில் புதைத்தது தெரியவந்தது. 

இந்நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர் , இக்கொலையில் தொடர்புடைய பெரம்பலூர் சபரீஷ் வயது (42), மேட்டூர் மாதையன்குட்டை கோபிநாத் வயது (45), பெரம்பலூர் மணிவண்ணன் வயது (34), ஊத்தங்கரை தாலுகா கொடமாண்டப்பட்டி ரேணிகுண்டாஹள்ளி திருமால் வயது (36), பெங்களூருவைச் சேர்ந்த பிரசாத் வயது (45). லோகநாதன் வயது (45), சாமல்பட்டியை சேர்ந்த விசிக பிரமுகர் ஜிம் மோகன் வயது (40), மத்தூர் திருப்பதி வயது (35). சென்னை தி.நகர் வக்கீல் கிருஷ்ண குமார் வயது (43) ஆகிய 9 நபர்களை அழைத்து நேற்று முன்தினம் இரவு கைது  செய்தனர். இச்சம்பவம் குறித்து ஜனார்த்தன பிரதானின் சடலம் சாமல்பட்டி மாந்தோப்பில் மீட்கப்பட்டதால் சாமல்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில் . தற்போது, இந்த வழக்கு கிருஷ்ணகிரி நகர காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

 


‛விளம்பரப்படம்... ரூ.30 கோடி கடன்... ரூ.3.50 கோடி கமிஷன்...’ சென்னை ஆடிட்டர் கொலையில் திருப்பம்!

 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சபரீஷ் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறியது: பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமத்தில் வசித்து வந்த சபரீஷ், கடந்த ஒரு வருடத்திற்கு முன் சென்னைக்கு சென்று வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். அங்கு விளம்பர படங்கள் எடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாகவும். அப்போது அங்குவந்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமாருடன் சபரீசுக்கு நண்பர்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் தனக்கு வங்கியில் ரூ.35 கோடி கடன் வாங்குவதற்கு உதவும் படி சபரீஷிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர், தனது நண்பரான ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இருவரும் ஜனரஞ்சன் பிரதானை சந்தித்த போது, ரூ.30 கோடிக்கு கடன் பெற்று  தருவதாகவும், அதற்கு கமிஷனாக முன்னதாகவே ரூ.3.50 கோடியை தனக்கு தர வேண்டும், எனவும் ஜனரஞ்சன் பிரதான் தெரிவித்துள்ளார். அதன்படி, ரூ.3.50 கோடியை ஜனரஞ்சனிடம் சபரீஷ் கொடுத்துவைத்துள்ளார் என்றுள்ளனர். ஆனால், அவர் கடன் வாங்கிக் கொடுக்கவில்லை. இதையடுத்து சபரீஷ் பெரம்பலூருக்கு வந்துவிட்டார்.


‛விளம்பரப்படம்... ரூ.30 கோடி கடன்... ரூ.3.50 கோடி கமிஷன்...’ சென்னை ஆடிட்டர் கொலையில் திருப்பம்!

 

இந்நிலையில் சென்னை, ஐதராபாத் பகுதியில் பண மோசடியில் ஈடுபட்டதாக, ஜனரஞ்சன் பிரதானை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர் என்ற செய்தியை பார்த்த சபரீஷ், சிறைக்கு சென்று அவரை பார்த்துள்ளார். அப்போது தன்னை ஜாமீனில் எடுத்தால் உண்ணுடைய பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக கூறவே, ஜாமீனில் எடுக்க பண உதவி செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து , பணத்தை தான் தரும்படி கேட்டபோது, ஜனரஞ்சன் பிரதான் தராமல் இழுத்தடித்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகுமாரிடம் சபரீஷ் தெரிவித்துள்ளாராம்.

இந்நிலையில், கிருஷ்ண கிரியில் ஒருவருக்கு சில கோடி ரூபாய் கடன் வேண்டும். என சபரீஷ் தெரிவித்துள்ளார். அவரை பார்க்க செல்லலாம் என ஜனரஞ்சன் பிரதானை அழைத்துக்கொண்டு, சாமல்பட்டிக்கு 3 நபர்களும் வந்தனர். அப்பகுதியை சேர்ந்த திருமால் என்பவரின் வீட்டில் அவர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது ரூ.3.50 கோடி தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ஜனரஞ்சன் பிரதானை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் நண்பர்கள் உதவியுடன், அங்கிருந்து அவரது உடலை மாந்தோப்பில் புதைத்துள்ளனர். இவ்வாறு சபரீஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறினர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 9 நபர்களையும், காவல்துறையினர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபிரபு முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.  கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
TN Pocso: நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
Embed widget