மேலும் அறிய

போதையில் அட்டகாசம் செய்த தந்தையை கட்டையால் அடித்து கொன்ற வளர்ப்பு மகன்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வளர்ப்பு மகன் தாக்கிய தந்தை இறந்ததை அடுத்து மகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த கணம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் (65). இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது முதல் மனைவி மகாலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் தன்னுடன் சித்தாள் வேலை பார்க்கும் கணவனை இழந்து குழந்தையுடன் இருந்த தனலட்சுமி என்பவருக்கு மனோகர் ஆதரவு கொடுத்து வந்தார். 


போதையில் அட்டகாசம் செய்த தந்தையை கட்டையால் அடித்து கொன்ற வளர்ப்பு மகன்

இந்த தொடர்பு ஊர் முழுவதும் தெரியவர தனலட்சுமி மனோகரை  திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் திருமணம் செய்துகொண்ட தனலட்சுமி என்பவருக்கு தினேஷ் என்கிற ஒரு மகன் உள்ளார். மனைவியை பிரிந்த மனோகரும் கணவனை இழந்த தனலட்சுமியும் திருமணம் செய்துகொண்டு கடம்பூர் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி இரவு மதுபோதையில் இருந்த மனோகர், தனலட்சுமியை தகாத வார்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இரவு முழுவதும் சண்டை ஏற்பட்டதால் பொறுமையை இழந்த தனலட்சுமியின் மகன் மனோகரை கட்டையால் அடித்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் மனோகருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போதையில் அட்டகாசம் செய்த தந்தையை கட்டையால் அடித்து கொன்ற வளர்ப்பு மகன்
மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மனோகர் இறந்துவிட்டார். இந்நிலையில் கட்டையால் தாக்கிய தினேஷ் கைது செய்து வழக்குப்பதிவு செய்து மறைமலைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ப்பு மகன் தந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


போதையில் அட்டகாசம் செய்த தந்தையை கட்டையால் அடித்து கொன்ற வளர்ப்பு மகன்

இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவிக்கையில், தனலட்சுமி, மனோகரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து தினேஷுக்கு ஆரம்பம் முதலே பிடிக்காமல் இருந்து வந்ததுள்ளது. தினேஷின் நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் பலர் தனலட்சுமி மற்றும் மனோகர் ஆகிய இருவரின் உறவை தவறாக பேசி வந்துள்ளனர். இதனால் தினேஷ் மனோகர் மீது கோபத்துடன் இருந்து வந்துள்ளார். இது ஒருபுறமிருக்க மனோகர் அடிக்கடி குடித்து விட்டு வந்து தனலட்சுமியிடம் சண்டை போட்டு வருவது தினேஷுக்கு இன்னும் கோபத்தை அதிகரித்துள்ளது. சம்பவம் நடந்த அன்று மனோகர் குடித்து விட்டு இரவு முழுவதும் சண்டையிட்டதால் கோபமடைந்த தினேஷ் கட்டையால் தாக்கி உள்ளார். அதில் காயமடைந்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடர்ந்து அவரை தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

 

எல்லைக்காக சண்டையிடும் புலிகள்.. புலிகளோடு சண்டையிடும் சிறுத்தைகள்.. ஆச்சர்யத்தில் சுற்றுலா பயணிகள்!

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget