மேலும் அறிய

Kerala: திருமணத்துக்கு மதுபோதையில் வந்த மணமகன்.. போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து!

திருமணம் என்பது இளம் வயதினர் அனைவருக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும்.இதே திருமணங்கள் சிலருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையிலும் அமைகிறது.

கேரளாவில் மதுபோதையில் மணமகன் ரகளை செய்ததால் திருமணம் நின்றதோடு, விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

திருமணம் என்பது இளம் வயதினர் அனைவருக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சி கண்டு விட்ட சமூகத்தில் எப்படியெல்லாம் வித்தியாசமாக திருமணம் செய்யலாம் என ரூம் போட்டு யோசிக்கும் அளவுக்கு ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு தடபுடலாக திருமணங்கள் நடைபெறுகிறது. இதே திருமணங்கள் சிலருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையிலும் அமைகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடைபெற்றுள்ளது. 

கேரள மாநிலம் பத்தினாம்திட்டா மாவட்டத்தில் கோழஞ்சேரி என்ற நகர் உள்ளது. இங்குள்ள தடியூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தேவாலயத்தில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளது. பெரும் கனவுகளோடு திருமண நாளில் தேவாலயத்துக்கு சென்ற மணப்பெண்ணுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

காரில் வந்திறங்கிய மணமகன் மதுபோதையில் தள்ளாடியபடியே மணமேடையை நோக்கி வந்ததை பார்த்த மணப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போதையில் இருந்த மணமகன் அங்கிருந்த பாதிரியார் மற்றும் பெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனையெல்லாம் முதலில் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்த மணப்பெண், ஒருகட்டத்தில் தனக்கு இந்த திருமணமே வேண்டாம் என பொறுமை இழந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் தடபுடலாக ஏற்பாடுஇ செய்யப்பட்டிருந்த திருமணம் நின்றது. இதனையடுத்து இருவீட்டார்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் பிரச்சினை ஏற்பட்டது. 

உடனடியாக தேவாலயத்தில் இருந்தவர்கள் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து காவல்துறைக்கு புகாரளித்தனர். அங்கு வந்த போலீசார் இருதரப்பினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மணமகளின் குடும்பத்தினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், மணப்பெண் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என உறுதியாக சொன்னார். அதேசமயம் திருமணத்துக்காக செலவு செய்த தொகையை தர வேண்டும் அல்லது மணமகனின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மணமகன் வீட்டார் திருமணத்துக்கான நஷ்ட ஈடாக ரூ.6 லட்சம் தர ஒப்புக்கொண்டனர். இதற்கிடையே மதுபோதையில் தேவாலயத்தில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
Udhayanidhi vs EPS: உதய் Vs ஈபிஎஸ்: அரசியல் நாகரிகம் அடியோடு அழிகிறதா? தனிமனித, தரம்தாழ்ந்த தாக்குதல்கள் தேவையா?
Udhayanidhi vs EPS: உதய் Vs ஈபிஎஸ்: அரசியல் நாகரிகம் அடியோடு அழிகிறதா? தனிமனித, தரம்தாழ்ந்த தாக்குதல்கள் தேவையா?
மனு நிராகரிப்பு... வேட்பாளர் சாலையில் உருண்டு போராட்டம்...
மனு நிராகரிப்பு... வேட்பாளர் சாலையில் உருண்டு போராட்டம்...
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
TN Election 2026: தமிழகத்தில் தேர்தல் நடத்த எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகுது? - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
தமிழகத்தில் தேர்தல் நடத்த எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகுது? - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
டீ போட்டுக் கொடுத்து கவனத்தை ஈர்த்த அப்சரா.. கடலூரில் வீதிவீதியாக அதிமுக பிரச்சாரம்
டீ போட்டுக் கொடுத்து கவனத்தை ஈர்த்த அப்சரா.. கடலூரில் வீதிவீதியாக அதிமுக பிரச்சாரம்
Embed widget