மேலும் அறிய

Crime : காசை கொடுக்குறியா? இல்லையா? பட்டா கத்தியுடன் வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியரை மிரட்டிய நபர்..

பீகாரில் பட்டாக் கத்தியுடன் வகுப்பறைக்குள் நுழைந்த நபர் தன் மகளின் சீருடைக்கான காசைத் தராவிட்டால் விபரீதம் நேரும் என எச்சரித்துச் சென்றுள்ளார்.

பீகாரில் பட்டாக் கத்தியுடன் வகுப்பறைக்குள் நுழைந்த நபர் தன் மகளின் சீருடைக்கான காசைத் தராவிட்டால் விபரீதம் நேரும் என எச்சரித்துச் சென்றுள்ளார்.

பீகார் மாநிலத்தில் உள்ளது அராரியா மாவட்டம். இங்குள்ள அரசுப் பள்ளியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசாங்கம் சார்பில் சீருடைக்கு பணம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் தனது மகளுக்கு பணம் வராததைக் கேட்க பட்டாகத்தியுடன் வந்தார் தந்தை ஒருவர். அவரது பெயர் அக்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 24 மணி நேரத்துக்குள் தன் மகளுக்கான சீருடைக்கு உரிய பணத்தைக் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நாளை மீண்டும் வருவேன் என்று அந்த நபர் எச்சரித்துள்ளார். திடீரென்று மேல்சட்டை கூட இல்லாமல் பட்டாக் கத்தியுடன் ஒரு நபர் வந்து மிரட்டியது பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் பீதியில் ஆழ்த்தியது. இதனையடுத்து அக்பர் என்ற அந்த நபர் குறித்து பள்ளி முதல்வர் ஜோகிஹாட் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அக்பர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர். அந்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படியும் ஒரு சம்பவம்:
பீகாரில் இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. மேலே சொன்னது டெரர் ரகம் என்றால் வரப்போகும் செய்தி ஆச்சர்யத்தின் உச்சம். பீகார் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரியில் இந்தி பேராசிரியர் லல்லன் குமார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கல்லூரி விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். ஆனால் அன்று தொட்டு இன்று வரை இவருடைய வகுப்புக்கு மாணவர்கள் யாரும் சரியாக வரவில்லையாம். கொரோனா காலத்தில் கூட ஆன்லைனில் வகுப்பில் 5, 6 பேர் தான் அட்டெண்ட் செய்தார்களாம். இதனால் லல்லன் குமார் மிகுந்த விரக்தியில் இருந்துள்ளார்.

இந்த மாதமும் அவருக்கு வழக்கம் போல் சம்பளம் வந்துள்ளது. இனியும் பொறுக்க முடியாது என நினைத்த லல்லன் குமார் தான் வேலையில் சேர்ந்ததில் இருந்து இது வரை பெற்ற 33 மாதங்களுக்கான ரூ.23 லட்சம் பணத்தையும் ஒரே காசோலையாக அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளருக்கு அனுப்பி வைத்தார். அதைப் பார்த்து பல்கலைக்கழகமே ஆட்டம் கண்டு போனது. 

விளக்கம் சொன்ன வாத்தியார்!

ஏன் இப்படி செய்தீர்கள் என்று ஊடகங்கள் அவரை எறும்புபோல் மொய்த்துக் கொண்டன. அப்போது அவர் சொன்ன விளக்கமும் எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இதுவரை நான் சரிவர வகுப்புகளே எடுக்கவில்லை. என் வேலை வகுப்பெடுப்பது. அதைச் செய்யாமல் நான் எப்படி சம்பளம் வாங்க முடியும். என் மனசாட்சியிடம் கேட்டேன். அது என்ன சொன்னதோ அதையே செய்துள்ளேன். என் மனசாட்சியின் படி நான் வாங்கிய சம்பளத்தை திருப்பி அனுப்பியுள்ளேன். பாடமே எடுக்காமல் இருந்தால் நான் அறிவிழந்து விடுவேன். அதுவும் இறந்துபோவதற்கு சமமானது தான். என் அறிவை நான் இழக்க விரும்பவில்லை என்று கூறினார்.


Crime : காசை கொடுக்குறியா? இல்லையா? பட்டா கத்தியுடன் வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியரை மிரட்டிய நபர்..

லல்லன் குமார் கூறியதைக் கேட்டு, கல்லூரிக்கு ஏன் மாணவர்கள் வரவில்லை என்று கல்லூரி முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒரு நாணயத்துக்கு இருபுறம் என்பதுபோல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Automatic CNG Cars: ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
Classic 350 on EMI: மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
Embed widget