மேலும் அறிய

Crime : காசை கொடுக்குறியா? இல்லையா? பட்டா கத்தியுடன் வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியரை மிரட்டிய நபர்..

பீகாரில் பட்டாக் கத்தியுடன் வகுப்பறைக்குள் நுழைந்த நபர் தன் மகளின் சீருடைக்கான காசைத் தராவிட்டால் விபரீதம் நேரும் என எச்சரித்துச் சென்றுள்ளார்.

பீகாரில் பட்டாக் கத்தியுடன் வகுப்பறைக்குள் நுழைந்த நபர் தன் மகளின் சீருடைக்கான காசைத் தராவிட்டால் விபரீதம் நேரும் என எச்சரித்துச் சென்றுள்ளார்.

பீகார் மாநிலத்தில் உள்ளது அராரியா மாவட்டம். இங்குள்ள அரசுப் பள்ளியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசாங்கம் சார்பில் சீருடைக்கு பணம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் தனது மகளுக்கு பணம் வராததைக் கேட்க பட்டாகத்தியுடன் வந்தார் தந்தை ஒருவர். அவரது பெயர் அக்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 24 மணி நேரத்துக்குள் தன் மகளுக்கான சீருடைக்கு உரிய பணத்தைக் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நாளை மீண்டும் வருவேன் என்று அந்த நபர் எச்சரித்துள்ளார். திடீரென்று மேல்சட்டை கூட இல்லாமல் பட்டாக் கத்தியுடன் ஒரு நபர் வந்து மிரட்டியது பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் பீதியில் ஆழ்த்தியது. இதனையடுத்து அக்பர் என்ற அந்த நபர் குறித்து பள்ளி முதல்வர் ஜோகிஹாட் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அக்பர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர். அந்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படியும் ஒரு சம்பவம்:
பீகாரில் இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. மேலே சொன்னது டெரர் ரகம் என்றால் வரப்போகும் செய்தி ஆச்சர்யத்தின் உச்சம். பீகார் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரியில் இந்தி பேராசிரியர் லல்லன் குமார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கல்லூரி விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். ஆனால் அன்று தொட்டு இன்று வரை இவருடைய வகுப்புக்கு மாணவர்கள் யாரும் சரியாக வரவில்லையாம். கொரோனா காலத்தில் கூட ஆன்லைனில் வகுப்பில் 5, 6 பேர் தான் அட்டெண்ட் செய்தார்களாம். இதனால் லல்லன் குமார் மிகுந்த விரக்தியில் இருந்துள்ளார்.

இந்த மாதமும் அவருக்கு வழக்கம் போல் சம்பளம் வந்துள்ளது. இனியும் பொறுக்க முடியாது என நினைத்த லல்லன் குமார் தான் வேலையில் சேர்ந்ததில் இருந்து இது வரை பெற்ற 33 மாதங்களுக்கான ரூ.23 லட்சம் பணத்தையும் ஒரே காசோலையாக அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளருக்கு அனுப்பி வைத்தார். அதைப் பார்த்து பல்கலைக்கழகமே ஆட்டம் கண்டு போனது. 

விளக்கம் சொன்ன வாத்தியார்!

ஏன் இப்படி செய்தீர்கள் என்று ஊடகங்கள் அவரை எறும்புபோல் மொய்த்துக் கொண்டன. அப்போது அவர் சொன்ன விளக்கமும் எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இதுவரை நான் சரிவர வகுப்புகளே எடுக்கவில்லை. என் வேலை வகுப்பெடுப்பது. அதைச் செய்யாமல் நான் எப்படி சம்பளம் வாங்க முடியும். என் மனசாட்சியிடம் கேட்டேன். அது என்ன சொன்னதோ அதையே செய்துள்ளேன். என் மனசாட்சியின் படி நான் வாங்கிய சம்பளத்தை திருப்பி அனுப்பியுள்ளேன். பாடமே எடுக்காமல் இருந்தால் நான் அறிவிழந்து விடுவேன். அதுவும் இறந்துபோவதற்கு சமமானது தான். என் அறிவை நான் இழக்க விரும்பவில்லை என்று கூறினார்.


Crime : காசை கொடுக்குறியா? இல்லையா? பட்டா கத்தியுடன் வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியரை மிரட்டிய நபர்..

லல்லன் குமார் கூறியதைக் கேட்டு, கல்லூரிக்கு ஏன் மாணவர்கள் வரவில்லை என்று கல்லூரி முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒரு நாணயத்துக்கு இருபுறம் என்பதுபோல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget