மேலும் அறிய

Digital Arrest: மகனை வைத்து டிஜிட்டல் மோசடி.. ரூ.2 கோடியை இழந்த பெண்.. வீட்டையும் விற்ற அவலம்!

இந்த விவகாரத்தில் உங்கள் மகன் சிறையில் இருப்பான் என சொல்லியே அப்பெண்ணை மிரட்டியுள்ளனர். ஜூன் 19 முதல் நவம்பர் 27 வரை அந்தப் பெண், எதிராளிகளின் உத்தரவின் பேரில் பலமுறை பணம் அனுப்பியுள்ளார்.

பெங்களூருவில் டிஜிட்டல் மோசடியில் சிக்கிய பெண் ஒருவர் ரூ.2 கோடிக்கும் மேல் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

சமூக வலைத்தளங்கள், தொழில்நுட்பங்கள் என அனைத்தும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டு விட்டது. நினைத்த விஷயத்தை நினைத்த இடத்தில் இருந்தே நிறைவேற்றும் அளவுக்கு சமூகம் மாறி விட்டது. அதேசமயம் மோசடிகளும் டிசைன் டிசைனாக அரங்கேறி கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு விஷயம் தான் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றுள்ளது. 

அங்கிருக்கும் நியூ திப்பசந்திரா பகுதியில் பெண் ஒருவர் தனது 10 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி,  வைட்ஃபீல்ட் CEN காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த ஜூன் 19ம் தேதி ப்ளூ டார்ட் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் தொடர்பு கொண்டார். அவர் போதைப்பொருள் அடங்கிய பார்சல் ஒன்று உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது. உங்களை கைது செய்ய மும்பை போலீசார் வருவார்கள் என கூறி இணைப்பை துண்டித்தார். 

இதனால் பயந்துபோன அந்த பெண் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியுள்ளார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எதிர்த்தரப்பு மும்பை காவல்துறை அதிகாரிகளாக பேசியுள்ளனர். அப்போது தங்கள் கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவரை மிரட்டியுள்ளனர். அப்பெண்ணும் சரி என சம்மதம் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து சில மொபைல் அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்ய  வேண்டும் எனவும், விசாரணைகள் முடியும் வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். யாருடனும் எந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் அப்பெண் மிரட்டப்பட்டிருக்கிறார். அப்பெண் பற்றிய விவரம் சேகரிக்கும்போது அவருக்கு ஒரு 10 வயது மகன் இருப்பதை எதிராளிகள் கண்டுபிடித்தனர்.

இந்த விவகாரத்தில் உங்கள் மகன் சிறையில் இருப்பான் என சொல்லியே அப்பெண்ணை மிரட்டியுள்ளனர். ஜூன் 19 முதல் நவம்பர் 27 வரை அந்தப் பெண் எதிராளிகளின் உத்தரவின் பேரில் பலமுறை பணம் அனுப்பியுள்ளார். இதற்காக விக்னன் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை மிகக் குறைந்த விலைக்கு விற்றிருக்கிறார். மேலும் மாலூரில் தனக்கிருக்கும் இரண்டு பிளாட்களை குறைந்த விலைக்கு விற்றார்.

அதுமட்டுமல்லாம வங்கிக் கடனும் பெற்றுள்ளார். தேவையான பணம் பறித்த பிறகு அந்த கும்பல் தடையில்லா சான்றிதழ் பெற காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து வைட்ஃபீல்ட் காவல் நிலையத்திற்கு சென்ற அப்பெண் நடந்த சம்பவத்தை கூற அப்போது தான் அவர் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த பெண் சுமார் ரூ.2 கோடியை தன்னை மிரட்டியவர்களுக்கு அனுப்பியிருக்கிறார். ஒரே தவணையாக அதிகப்பட்சமாக ரூ.70 லட்சம் வரை அனுப்பியுள்ளார். இதன் பின்னர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Embed widget