மேலும் அறிய

Crime : ஸ்மார்ட்போன் வாங்கித் தர மறுத்த தாய்...! கழுத்தை நெரித்துக் கொலை செய்த மகன்..!

பெங்களூரில் ஸ்மார்ட்போன் வாங்கித் தராததால் ஆத்திரத்தில் தாயை கழுத்தை நெரித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூர். இங்குள்ள மைலாசண்ராவில் வசித்து வருபவர் பாத்திமா மேரி. இவருக்கு வயது 45. இவருக்கு ஜோய்ஸ் மேரி ( வயது 24), தீபக் ( வயது 26) என்ற மகனும் உள்ளனர். பாத்திமா மேரி தங்களது தோட்டத்தில் வளரும் காய்கறிகளை அருகில் உள்ள மார்க்கெட்டுகளில் விற்பனை செய்து வரும் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி வழக்கம்போல பாத்திமா மேரி தங்களது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அவர் தனது மகள் ஜோய்ஸ் மேரியிடம் மகன் தீபக் எழுந்த பிறகு அவனை தோட்டத்திற்கு அனுப்பி வை என்று கூறியுள்ளார். மதியம் அம்மாவை அழைத்து வருவதற்காக தீபக் சென்றுள்ளார். ஆனால், அம்மா அங்கு இல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து, தனது அம்மாவை காணவில்லை என்று தீபக் தங்கை ஜோய்ஸ் மேரியிடமும், குடும்பத்தாரிடமும், உறவினர்களிடமும் கூறியுள்ளனர்.


Crime : ஸ்மார்ட்போன் வாங்கித் தர மறுத்த தாய்...! கழுத்தை நெரித்துக் கொலை செய்த மகன்..!

இதையடுத்து, அனைவரும் பாத்திமா மேரியை தேடியுள்ளனர். மதியம் 2 மணியளவில் ஜோய்ஸ் மேரிக்கு தீபக் போன் செய்துள்ளார். அப்போது, அவர் என்.ஐ.சி.இ. சாலையில் தங்களது தாய் பாத்திமா மேரி உயிரிழந்து கிடப்பதாகவும், அவரை யாரோ சேலையால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர் என்றும் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதைக்கேட்ட ஜோய்ஸ் மேரி வேதனை அடைந்து கதறி அழுதுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாத்திமா மேரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், பாத்திமா மேரியின் சடலத்தில் இருந்து கிடைத்த கைரேகையை பயன்படுத்தி விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது, பாத்திமா மேரியின் குடும்பத்தாரிடமும் விசாரணையை செய்தபோது தீபக் மட்டும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.


Crime : ஸ்மார்ட்போன் வாங்கித் தர மறுத்த தாய்...! கழுத்தை நெரித்துக் கொலை செய்த மகன்..!

இதனால், தீபக் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தீபக் தனது தாய் பாத்திமா மேரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தாய் பாத்திமா மேரியை பார்ப்பதற்காக தோட்டத்திற்கு சென்ற தீபக் அங்கு தனது தாயிடம் புதியதாக ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்றும், அதற்கு 20 ஆயிரம் பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். ஆனால், தற்போதுள்ள சூழலில் 20 ஆயிரம் தன்னால் தர இயலாது என்று பாத்திமா மறுத்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த தீபக் தாய் பாத்திமாவிடம் சண்டையிட்டுள்ளார். கோபத்தின் உச்சிக்கே சென்ற தீபக் தாய் என்றும் பாராமல் பாத்திமா மேரியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், தாயின் கைப்பையில் இருந்த 700 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார். பின்னர், வீட்டிற்கு சென்ற தீபக் எதுவுமே நடக்காதது போல நடித்துள்ளார். தீபக்கை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.


Crime : ஸ்மார்ட்போன் வாங்கித் தர மறுத்த தாய்...! கழுத்தை நெரித்துக் கொலை செய்த மகன்..!

புதிய ஸ்மார்ட்போன் வாங்கித் தரக்கூறி பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget