மேலும் அறிய

போலீஸ் வாகனத்தில் இருந்து தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி வாகனம் மோதி பலி

தேனி பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வேடசந்தூர் பகுதி நூற்பாலைகளில் பணி செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டும் பொன்னுச்சாமி  விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

திண்டுக்கலில் போலீஸ் வாகனத்தில் இருந்து தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கூம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்ற நபர் விருதலைபட்டி என்ற கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இருவரும் அங்குள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இதனிடையே தேனி பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வேடசந்தூர் பகுதி நூற்பாலைகளில் பணி செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டும் பொன்னுச்சாமி  விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணி செய்து வந்த தனிப்பிரிவு காவலர்  குமாரசாமி மற்றும் காவல்நிலைய எழுத்தாளர் முத்துக்குமார் ஆகிய இருவரும் பொன்னுசாமியை கையும், களவுமாக பிடித்துள்ளனர்.

அவரிடம் சோதனை செய்ததில் 15க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பொன்னுசாமியை விசாரணைக்காக இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்துள்ளார்கள். அப்போது அரவக்குறிச்சி தாலுகா மஞ்சுவெளி ஊராட்சிக்குட்பட்ட கடம்பன்குறிச்சி மற்றும் எல்லப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது பொன்னுச்சாமி இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த தனியார் நூல் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்த இடம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட மையப்பகுதியில் உள்ளதால் போலீசாருக்கு விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. பின் சம்பவ இடம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்டது என தெரிய வந்ததால் பொன்னுசாமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் தனது கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி கலையரசி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது கணவர் பொன்னுசாமிக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை எனவும், அவர் எந்த தவறும் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கலையரசி கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஆர்.கோம்பையைச் சேர்ந்த விஜயகுமாரை போலீசார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கடற்கரையில் கொடூரம் ; கல்லூரி மாணவியை சீரழித்த 3 பேர் !! திருட்டு நகையை பதுக்கிய தாய்
கடற்கரையில் கொடூரம் ; கல்லூரி மாணவியை சீரழித்த 3 பேர் !! திருட்டு நகையை பதுக்கிய தாய்
உறவினர் வீட்டில் நடந்த கொடூரம்… 2 வயது குழந்தை பாலியல் வழக்கில் 20 ஆண்டு சிறை...
உறவினர் வீட்டில் நடந்த கொடூரம்… 2 வயது குழந்தை பாலியல் வழக்கில் 20 ஆண்டு சிறை...
கோவையை சுற்றி ‘டிஜிட்டல் பாதுகாப்பு வளையம்’… 1500 கேமராக்கள் ஒரே மையத்தில் இணைப்பு...
கோவையை சுற்றி ‘டிஜிட்டல் பாதுகாப்பு வளையம்’… 1500 கேமராக்கள் ஒரே மையத்தில் இணைப்பு...
வைக்கோலுக்குள் மறைந்திருந்த போதை சரக்கு… திருவையாறில் அதிரடி பறிமுதல்
வைக்கோலுக்குள் மறைந்திருந்த போதை சரக்கு… திருவையாறில் அதிரடி பறிமுதல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Officers Transfer: வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
Trump Vs Iran: “ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
“ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
US Iran War: செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
Eps vs Sp Velumani : எப்பவும் எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி டீம்- அடுத்தது என்ன.?
எப்பவும் எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி டீம்- அடுத்தது என்ன.?
Samsung Rollable Phone: மொபைல் சந்தையை கதறவிட தயாராகும் சாம்சங்; ஸ்லைட், சுருட்டி வைக்கும் டிஸ்ப்ளே மாடலுக்கு காப்புரிமை
மொபைல் சந்தையை கதறவிட தயாராகும் சாம்சங்; ஸ்லைட், சுருட்டி வைக்கும் டிஸ்ப்ளே மாடலுக்கு காப்புரிமை
Embed widget