மேலும் அறிய

போலீஸ் வாகனத்தில் இருந்து தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி வாகனம் மோதி பலி

தேனி பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வேடசந்தூர் பகுதி நூற்பாலைகளில் பணி செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டும் பொன்னுச்சாமி  விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

திண்டுக்கலில் போலீஸ் வாகனத்தில் இருந்து தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கூம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்ற நபர் விருதலைபட்டி என்ற கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இருவரும் அங்குள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இதனிடையே தேனி பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வேடசந்தூர் பகுதி நூற்பாலைகளில் பணி செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டும் பொன்னுச்சாமி  விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணி செய்து வந்த தனிப்பிரிவு காவலர்  குமாரசாமி மற்றும் காவல்நிலைய எழுத்தாளர் முத்துக்குமார் ஆகிய இருவரும் பொன்னுசாமியை கையும், களவுமாக பிடித்துள்ளனர்.

அவரிடம் சோதனை செய்ததில் 15க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பொன்னுசாமியை விசாரணைக்காக இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்துள்ளார்கள். அப்போது அரவக்குறிச்சி தாலுகா மஞ்சுவெளி ஊராட்சிக்குட்பட்ட கடம்பன்குறிச்சி மற்றும் எல்லப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது பொன்னுச்சாமி இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த தனியார் நூல் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்த இடம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட மையப்பகுதியில் உள்ளதால் போலீசாருக்கு விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. பின் சம்பவ இடம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்டது என தெரிய வந்ததால் பொன்னுசாமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் தனது கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி கலையரசி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது கணவர் பொன்னுசாமிக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை எனவும், அவர் எந்த தவறும் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கலையரசி கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஆர்.கோம்பையைச் சேர்ந்த விஜயகுமாரை போலீசார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget