மேலும் அறிய

சென்னையில் கஞ்சா போதையில் ரகளை செய்த இளைஞர்கள்; 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்

ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் அம்பத்தூருக்கு கஞ்சா  கடத்திவந்த அரசூர் கிராமத்தைசேர்ந்த நபர் கையும் களவுமாக கைது. 4 கிலோ கஞ்சா பறிமுதல்.

சென்னை அம்பத்தூரில் கஞ்சா போதையில் இளைஞர்கள் ரகளை செய்வதாக பொதுமக்கள் புகாரளித்த நிலையில் வாகன சோதனை மூலம் கஞ்சா கடத்தல் ஈடுபட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் அம்பத்தூர் காவல்துறையினர்.

சென்னை அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா புழுக்கம் அதிகம் உள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில் ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் ஐபிஎஸ் தலைமையில் அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அம்பத்தூர் ராக்கி சினிமா சிங்கப்பூர் ஷாப்பி  அருகே அம்பத்தூர்  சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராமசாமி இரவு வாகன தணிக்கையில்  ஈடுபட்டிருந்த நிலையில் வழக்கமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாகன தணிக்கை செய்த பொழுது இருசக்கர வாகனத்தில் பொட்டலம் பொட்டலமாக கஞ்சாவை எடுத்து வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர் வ / 25 என்பவர் என  தெரிய வந்தது. பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தியதில் அடையாளம் தெரியாத நபருக்காக ஸ்ரீபெரும்புதூரிலிருந்து கஞ்சாவை இருசக்கர வாகனத்திலேயே எடுத்து வந்ததாக குற்றத்தை ஒப்புகொண்டார். 

மேலும், யாரிடம் கஞ்சாவை கொடுக்க அம்பத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்தார் என விவரம் எதுவும் இல்லையெனவும், இவர் மீது மதுராந்தகம், திண்டிவனம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் கஞ்சா கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் தெரியவந்தது. பின்னர் அவரின் இரண்டு சக்கர வாகனம், செல்போன் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பிரபாகர் மீது வழக்கு பதிவுசெய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: Mayiladuthurai Kidnap: மயிலாடுதுறையில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ..!


 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
ABP Premium

வீடியோ

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Embed widget