மேலும் அறிய

சாப்பிட வராத 8 வயது மகனை அடித்துக் கொன்ற தந்தை!

குஜராத்தில் சாப்பிட மறுத்த மகனைத் தந்தை தாக்கியதால், 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தந்தை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் 8 வயது சிறுவனைத் தொடர்ந்து சாப்பிடுவதற்கு அழைத்தும், வர மறுத்தமையால் ஆத்திரத்தில் அவரது தந்தை உருட்டுக்கட்டையில் தாக்கியுள்ளார். சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அழைத்துச்சென்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாவினை விட இந்த உலகில் குழந்தையினை பெற்ற தந்தைக்கூட பொறுமையாக பார்க்க முடியாது என்பது தான் நிதர்சன உண்மை. சாப்பிட மறுப்பது தொடங்கி எதாவது ஒரு பொருளைக் கேட்டு அடம்பிடிப்பது வரை தந்தையால் குழந்தையினை சமாளிக்க முடியாது. ஆத்திரத்தில் அடிக்கத்தான் செய்வார்கள். அப்படி ஒரு நிகழ்வு தான் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால் தந்தைத்தாக்கியதில் இங்கு சிறுவன் உயிரிழந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது.  குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் கலாவாட் சாலையில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் பணிபுரிந்து வருபவர் தான் நேபாளத்தைச்சேர்ந்த சித்ராஜ். பல ஆண்டுகளாக இப்பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு 8 வயதில் சவுரப் என்ற மகன் உள்ளார்.

  • சாப்பிட வராத 8 வயது மகனை அடித்துக் கொன்ற தந்தை!

  இச்சிறுவன் எப்பொழுதும் துறுதுறுவென இருப்பான் என கூறப்படும் நிலையில் தான், சம்பவம் நடந்த அன்று ஏதோ ஒரு பொருளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தாராம். இவரது தந்தை  மாலை நேரத்தில் ஏதாவது சாப்பிடுவதற்காக பல முறை அழைத்துள்ளார். ஆனால் சிறுவன் எனக்கு சாப்பாடு வேண்டாம் என தெரிவித்து வர மறுத்துள்ளார். கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பார்த்த 8 வயது சிறுவனின் தந்தை, நான் இவ்வளவு நேரம் கூப்பிட்டும் என்னை மதிக்கவும் இல்லை, சாப்பிட வரவும் இல்லை என்று ஆத்திரத்தில் திட்டியுள்ளார். இதோடு மட்டுமில்லாமல் உருட்டுக்கட்டையால் தாக்கியதோடு, தலையினை பிடித்து ஆத்திரம் தீரும் வரை சுவற்றில் வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அழுதுக்கொண்ட இருந்த சிறுவன் அறைக்கு சென்று தூங்கியுள்ளார்.

மறுநாள் காலையில் எழுந்த சிறுவன், தந்தை அடித்த வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்துள்ளார். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். சிறுவனில் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தமையால் என்ன நடந்தது? என மருத்துவர்கள் கேட்டப்பொழுது, சிறுவன் கீழே விழுந்து விட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தப்பொழுதும், சிகிச்சையில் எந்தவித பலனும் இன்றி உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொண்டப்பொழுது சிறுவனின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதும், தாக்கியதும் தெரிந்துள்ளது.

  • சாப்பிட வராத 8 வயது மகனை அடித்துக் கொன்ற தந்தை!

இதனையடுத்து சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்த சிறுவனின் தந்தையிடம் விசாரணை நடத்தியப்போது, “ நான் தான் மகனைத் தாக்கியதாக ஒப்புக்கொண்டார். பின்னர் மகனைக்கொன்றதாக தந்தையின் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் சிறந்த செயல்திறன் வழங்குவது எது.? ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் சிறந்த செயல்திறன் வழங்குவது எது.? ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Embed widget