மேலும் அறிய

Watch Video: ஹரியானாவில் பக்தர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்..!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து ஹரியானா சென்ற 60 சுற்றுலா பயணிகள் கொண்ட சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பக்தர்கள் உடல் கருதி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் சண்டிகரை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து ஹரியானா சென்ற 60 சுற்றுலா பயணிகள் கொண்ட சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது. எதிர்பாராத இந்த பேருந்து தீப்பிடித்ததில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு நல்ஹாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த விபத்தானது குண்டலி- மனேசர் - பல்வால் (கேஎம்பி) விரைவுச் சாலையில் நேற்று இரவு நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும், அதற்குள் பேருந்து எரிந்து சாம்பலான நிலையில், பயணிகள் மத்தியில் அலறல் சத்தம் கேட்டது. அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் எப்படியோ சுற்றுலா பயணிகளை பஸ்சில் இருந்து மீட்டனர். 

கிடைத்த தகவலின்படி, சுற்றுலா பேருந்தில் சுமார் 60 பேர் இருந்ததாகவும், அவர்கள் பஞ்சாப் மற்றும் சண்டிகரில் வசிப்பவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்து நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பனாரஸ் மற்றும் பிருந்தாவனத்தை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் திரும்பிக் கொண்டிருந்தனர். காயம் அடைந்த பக்தர்கள் சரோஜ் பஞ்ச் மற்றும் பூனம் இத்தகவலை தெரிவித்தனர். காயமடைந்த சுற்றுலா பயணிகளில் பெண்களும் குழந்தைகளும் உள்ளனர். விபத்தை நேரில் பார்த்தவர்கள் சபீர், நசீம் மற்றும் அவர்களது நண்பர்கள் கூறுகையில், ”பேருந்து பின்னால் இருந்து எரிந்து கொண்டிருந்ததாகவும், பயணிகள் அலறி துடித்ததாகவும் தெரிவித்தனர். மேலும், பைக்கில் பேருந்தை பின்தொடர்ந்த அவர்கள், டிரைவருக்கு தகவல் தெரிவித்து பஸ்சை நிறுத்தினர். பயணிகள் இறங்குவதற்குள் பஸ் முழுவதும் தீ மளமளவென எரிந்ததாகவும் தெரிவித்தனர். 

தீயணைப்பு படை வருவதில் தாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு:

தீப்பற்றியதை ஓட்டுநர் கவனிக்கவில்லை என விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்கள் பேருந்தை துரத்திச் சென்று நிறுத்தி, தீயை அணைக்க முயன்றனர். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பயணிகள் பேருந்தில் இருந்து மீட்கப்பட்டனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே, அதிகளவிலான உயிரிழப்பு ஏற்பட்டதாக அந்த பேருந்தில் இருந்தவர்கள் குற்றம் சாட்டினார். அதன்பின், தவாடு சதர் காவல் நிலையம் காயமடைந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையில், போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர பிஜரானியா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். தவாடு எஸ்டிஎம் சஞ்சீவ் குமார், தவாடு சதர் காவல் நிலைய பொறுப்பாளர் ஜிதேந்திர குமார் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் உடல்கள் எரிந்த நிலையில், அவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
Virat Kohli:
Virat Kohli: "நம்பவே முடியல.. எல்லாத்தையும் கொடுத்துருக்கேன்.." கண்கலங்கிய சாம்பியன் விராட் கோலி
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
Virat Kohli:
Virat Kohli: "நம்பவே முடியல.. எல்லாத்தையும் கொடுத்துருக்கேன்.." கண்கலங்கிய சாம்பியன் விராட் கோலி
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
Embed widget