மேலும் அறிய

Watch video: பல்வேறு கோயில்களில் உண்டியல் உடைப்பு.. லட்சக்கணக்கில் கொள்ளை.. கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

”பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல பல்வேறு கோயில்களில் கைவரிசை காட்டிய 3 பேரை கைது செய்தது காவல்துறை”

நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம், ஏர்வாடி, பணகுடி, திருக்குறுங்குடி, நாங்குநேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. இக்கிராமங்களில்  உள்ள மக்கள் ஆங்காங்கே உள்ள இடங்களில்  வழிபாட்டு தலமான கோயில்கள் அமைத்து பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள்  செய்து வருகின்றனர்.  மேலும் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியல்களில் பணம் செலுத்துவது வழக்கம். இந்த சூழலில் கோயில் உண்டியல்களில் பக்தர்களால் செலுத்தப்படும் பணத்தை திட்டமிட்டு கொள்ளை கும்பல் ஒன்று  கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.


Watch video: பல்வேறு கோயில்களில் உண்டியல் உடைப்பு.. லட்சக்கணக்கில் கொள்ளை.. கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

குறிப்பாக 30-க்கும் மேற்பட்ட கோயில்களில் லட்சக்கணக்கான  பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்ததாக தெரிய வந்துள்ளது. கோயிலுக்கு வரும்  பக்தர்கள் இக்கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவித்த நிலையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் உண்டியலில் கொள்ளை போன கோயில்களுக்கு அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதனடிப்படையில் கொள்ளையர்களை தேடி வந்தனர். குறிப்பாக இளம் வயது வாலிபர்கள் இரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கோயில் உண்டியல்களை உடைப்பது பதிவாகி இருந்தது. இதற்காக உதவி காவல் ஆய்வாளர் அருண்ராஜா மற்றும் தலைமைக் காவலர் ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டனர்.

 


Watch video: பல்வேறு கோயில்களில் உண்டியல் உடைப்பு.. லட்சக்கணக்கில் கொள்ளை.. கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

இந்நிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேர் இரவு நேரத்தில் சுற்றி கொண்டிருந்த நிலையில் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பேசிய அவர்களை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது கோயில் உண்டியலில் கொள்ளையடித்து சிசிடிவி காட்சிகள் மூலம் தேடப்பட்டு வந்தவர்கள் என  தெரிய வந்தது. இதையடுத்து பிடிபட்ட கன்னியாகுமரி மாவட்டம் மாதவபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய நபர், லட்சுமிபுரம் தேவராஜ் மகன் ஆண்டனி ராஜ் (28), நெல்லை மாவட்டம் காவல்கிணறு கிருஷ்ணமூர்த்தி மகன் நாகராஜன் (எ) காக்கா (39) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயில்களில் தொடர்ச்சியாக கொள்ளையடித்து வந்த நபர்கள் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்
குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்" - ₹5,000 லஞ்சம் கேட்டு சிக்கிய அரசு ஊழியர்கள்...
EMI பிரச்சினை கொலைவழக்காக மாறியது – கோவை நீதிமன்றம் கடும் தீர்ப்பு
EMI பிரச்சினை கொலைவழக்காக மாறியது – கோவை நீதிமன்றம் கடும் தீர்ப்பு
பேருந்தில் சினிமா ஸ்டைல் திருட்டு... Fevi kwik ஒட்டி ₹5.20 லட்சம் திருட்டு...
பேருந்தில் சினிமா ஸ்டைல் திருட்டு... Fevi kwik ஒட்டி ₹5.20 லட்சம் திருட்டு...
கிருஷ்ணகிரி அருகே ஓடும் ரயிலில் திகில்: ரத்தம் சொட்ட சொட்ட டிடிஆரை தாக்கிய வட மாநில வாலிபர்- நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி அருகே ஓடும் ரயிலில் திகில்: ரத்தம் சொட்ட சொட்ட டிடிஆரை தாக்கிய வட மாநில வாலிபர்- நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
IND vs ENG Semi Final: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
Embed widget