மேலும் அறிய

விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட ஐஐடி பிஎச்டி மாணவர் – போலீசிடம் சிக்கிய கடிதம்

கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் 24 வயது பிஎச்டி மாணவர் திங்கள்கிழமை தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

24 வயது ஐஐடி-கான்பூர் பிஎச்டி மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் 24 வயது பிஎச்டி மாணவர் திங்கள்கிழமை தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இறந்தவர் அங்கித் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் நொய்டாவில் வசித்து வருகிறார், வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று வந்தார்.

மாலையில் அங்கித்தின் நண்பர்கள் அவரை அழைத்தபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

அங்கித்தின் விடுதி அறை நீண்ட நேரம் உள்பக்கமாக பூட்டிக்கிடந்துள்ளது. இதையடுத்து அங்கித்தின் நண்பர்கள் கதவை தட்டி அவரை அழைத்துள்ளனர். ஆனால் அங்கித்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து அவர்கள் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது அங்கித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைப்பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சிடைந்தனர். பின்னர் விடுதி கண்காணிப்பாளருக்கும் காவல்துறைக்கும் அவர்கள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கூடுதல் டிசிபி (மேற்கு) விஜேந்திர திவேதி கூறுகையில், “மாலை 5 மணியளவில் தற்கொலை குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது, அதன் பிறகு நாங்கள் உள்ளூர் போலீசாருடன் அங்கு வந்தோம். போலீசார் அங்கு சென்ற நேரத்தில், ஐஐடி-கான்பூர் அதிகாரிகள் கதவை உடைத்து உடலை வெளியே எடுத்து, அதை ஆதாரமாக வீடியோவாக படம்பிடித்துவிட்டனர். போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் ஆதாரங்களை சேகரிக்க தடயவியல் குழு வரவழைக்கப்பட்டது. அறையில் ஒரு தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்பட்டது, அதில் அங்கித் தனது சொந்த விருப்பத்தின் பேரில் தீவிரமான முடிவை எடுத்ததாகவும், அதற்கு யாரையும் குறை சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தற்கொலைக்கான சரியான காரணங்கள் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும். உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இறந்தவரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து ஐஐடி நிறுவனம் தனது அறிக்கையில், "இன்று வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அங்கித் யாதவின் துயரமான மற்றும் அகால மறைவுக்கு ஐஐடி-கே இரங்கல் தெரிவிக்கிறது. யாதவ் ஒரு நம்பிக்கைக்குரிய ஆராய்ச்சி அறிஞராக இருந்தார், அவர் ஜூலை 2024 இல் யுஜிசி பெல்லோஷிப்புடன் இந்த நிறுவனத்தில் சேர்ந்தார். அவரின் மரணம் குறித்து விசாரித்து வரும் போலீசாருக்கு ஐஐடி முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மேலும் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நிறுவனம் உறுதிபூண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், ஐஐடி-காரக்பூரில் பயிலும் மாணவர் ஒருவர் தனது விடுதி அறைக்குள் இறந்து கிடந்தார். இறந்த ஷான் மாலிக், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார், அவரைச் சந்திக்க வந்த அவரது பெற்றோர் அவரை அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget