மேலும் அறிய

மும்பையில் முதலாம் ஆண்டு ஐஐடி மாணவர் ஹாஸ்டல் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை! - காரணம் என்ன?

ஐஐடி மும்பையில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஐஐடி மும்பையில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 18 வயதான அந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை மதியம் விடுதியின் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக போவாய் போலீசார் தெரிவித்தனர், அதன்பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சோலங்கி என்ற மாணவர் மூன்றரை மாதங்களுக்கு முன்பு ஐஐடி பாம்பேயில் சேர்ந்தார் என்றும் பிடெக் மாணவர் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 “ஹாஸ்டல் கட்டிடத்தின் புகலிடப் பகுதியில் இருந்து சோலங்கி குதித்ததை நேரில் பார்த்தவர்கள் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளனர். நாங்கள் அவரது அறை தோழர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறோம், அதற்கான காரணத்தை கண்டறிய முயற்சிக்கிறோம், ”என்று அந்த அதிகாரி கூறினார்.

இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று கூறிய நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர், “இந்த நிறுவனம் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்கிறது” என்றார்.

ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், நிறுவன இயக்குனர் சுபாசிஸ் சவுத்ரி அனைத்து மாணவர்களுக்கும் இந்த செய்தியை மெயிலில் பகிர்ந்து கொண்டார். “இன்று பிற்பகல் நடந்த சோகமான சம்பவத்தில் முதலாம் ஆண்டு மாணவர் மரணமடைந்ததை தெரிவிக்க வருந்துகிறோம். இதுகுறித்து போவாய் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். மாணவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை குடும்பத்தினர் பெற பிரார்த்திக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோலங்கி கெமிக்கல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்தார். அவர் ஹாஸ்டல் 16 இல் வசிப்பவர் மற்றும் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. அதனால் கல்வி சார்ந்த அழுத்தம் இதற்குக் காரணம் என்று வளாகத்தில் உள்ள பலர் சந்தேகித்து வருகின்றனர். இருப்பினும், மேலும் விவரங்கள் வெளிவருவதற்கு முன்பு ஊகிப்பது பொருத்தமாக இருக்காது என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

வளாகத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு மாணவர், “எந்த குறிப்பும் இல்லாததால், அவர் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் குறித்து தெளிவு இல்லை. செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அது மட்டும் ஒரு காரணம் என்று சொல்வது சரியாக இருக்காது. இன்ஸ்டிடியூட்டில் இருந்து மேலும் தகவல் அறிய நாங்கள் காத்திருப்போம்” என்றார்.

 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
9 வாரிசுகளை மறைத்துப் பத்திரப்பதிவு: விவசாயியின் நிலத்தை ஆட்டையைப் போடப் பார்த்த நபர் சிக்கியது எப்படி?
​9 வாரிசுகளை மறைத்துப் பத்திரப்பதிவு: விவசாயியின் நிலத்தை ஆட்டையைப் போடப் பார்த்த நபர் சிக்கியது எப்படி?

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Embed widget