மேலும் அறிய

உடனே ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது அவசியம்: பிரபல தொழிலதிபரின் ஐடியா!

இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாகவே இருப்பதால் இப்போது புதிதாக நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுவது நல்ல முடிவே. இது திணறிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்துக்கு ஆக்சிஜன் அளிக்கும் செயல். குறுகிய கால ஸ்டீராய்டு என்று கூட சொல்லலாம் என்கிறார் உதய் கோட்டாக்.

இந்தியப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்க ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது அவசியம் என ஆலோசனை கூறுகிறார் தனியார் வங்கித் தலைவரும் தொழிலதிபருமான உதய் கோட்டக். இப்போதைக்கு நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட உத்தரவிடுவது தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிக்கு ஸ்டீராய்டு அளிப்பது போன்று அவசியமானது என்று அவர் கூறியிருக்கிறார்.
கோட்டக் மகிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநரும், நிறுவனரும், சிஐஐ எனப்படும் இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவருமான கோட்டக் ஆங்கில தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார்.
அவரது நீண்ட பேட்டியிலிருந்து சில முக்கியத் துளிகள்...

உடனே ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது அவசியம்: பிரபல தொழிலதிபரின் ஐடியா!
 
 
இந்தியப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்க ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது அவசியம். அதேவேளையில், பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். ஏழை மக்கள் அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் அரசாங்கம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிதியுதவி செலுத்த வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியளிக்க வேண்டும். ஏழை எளிய மக்களின் கைகளில் பணம் புரள்வதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தத் தருணத்தின் ரிசர்வ் வங்கியின் உதவி அவசியமாகிறது. இந்தியப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்க ஆர்பிஐ புதிதாக நோட்டுகளை அச்சடிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான காலகட்டம். அடுத்த ஓராண்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் காலம். 
 

உடனே ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது அவசியம்: பிரபல தொழிலதிபரின் ஐடியா!
கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 முதல் 8 சதவீதம் வரை குறைந்தது. கொரோனா இரண்டாவது அலைக்கு முன்னதாக பொருளாதார வளர்ச்சியானது 10 சதவீதமாக இருந்தது. உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் இருந்தது. ஆனால் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பெருந்தொற்று பரவலுக்கு முன்னதாக நாட்டின் பணவீக்கம் எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்துவிட்டது. 2010ம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக (மொத்த விலைக் குறியீடு) wholesale price index 10.5 சதவீதமாக அதிகரித்தது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.4 சதவீதமாகவும், ஏப்ரலில் 10.5 சதவீதமாகவும் அதிகரித்தது.
இந்நிலையில் இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாகவே இருப்பதால் இப்போது புதிதாக நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுவது நல்ல முடிவே. இது திணறிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்துக்கு ஆக்சிஜன் அளிக்கும் செயல். குறுகிய கால ஸ்டீராய்டு என்று கூட சொல்லலாம்.
 

உடனே ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது அவசியம்: பிரபல தொழிலதிபரின் ஐடியா!
பொருளாதாரத்தின் அடித்தளத்தில் இருப்பவர்கள், சிறு, குறு தொழில்களை நேரடி நிதியுதவி மூலம் மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே நான் உணர்கிறேன்.
Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) போன்ற திட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கம் பல சிறு, குறு தொழில்களின் மீட்சிக்கு உதவ முடியும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்த அவசர கால கடன் உதவி (இசிஎல்ஜிஎஸ்) திட்டத்தினை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்.
ஒருவேளை அரசாங்கமும் நான் யோசிக்கும் இதே பாதையின் சாத்தியத்தை ஆராய்ந்து கொண்டிருக்கலாம். இரண்டாவது அலையின் நெருக்கடி சற்றே குறைய அரசாங்கம் காத்திருக்கலாம்.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கிறது. முதல் அலையில் எனது வங்கி ஊழியர்கள் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இரண்டாவது அலையில் இதுவரை 45 முதல் 50 ஊழியர்கள் வரை உயிரிழந்துள்ளனர். 

உடனே ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது அவசியம்: பிரபல தொழிலதிபரின் ஐடியா!
 
கொரோனாவால் தொழில்துறையில் இருவித பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒன்றை சரிசெய்துவிடலாம். இரண்டாவது வகையான துறையை சரிவிலிருந்து மீட்பது கடினம். நான் எனது நிறுவனத்தில் இந்த ஆண்டு சம்பளக் குறைப்பு, ஆட் குறைப்பு நடவடிக்கைகளை செய்யவில்லை. ஊழியர்களுக்கான ஊதிய உயர்வையும் நிறுத்தவில்லை. எனது ஊழியர்களின் நிதி இருப்பு நிலையை உறுதி செய்வது தேசத்தின் நிதி இருப்பு நிலையை உறுதி செய்வதற்கு சமமாக முக்கியமானதே. எனது வங்கு ஊழியர்கள் பலரும் வீட்டிலிருந்துதான் பணி புரிகிறார்கள். எந்தெந்தப் பகுதிகளில் பாசிட்டிவிட்டி ரேட் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறதோ அங்குமட்டுமே ஊழியர்கள் வங்கிக்கு வந்து பணி புரிகின்றனர்.
கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசியே பேராயுதம். இப்போதைக்கு தடுப்பூசி விநியோகத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மூன்றாவது அலையில் சிக்காமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். அதேவேளையில், மருத்துவ ஆக்சிஜன், படுக்கை வசதிகள், அத்தியாவசிய மருந்துகள் போன்ற மருத்துவ கட்டமைப்பை சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். நமது இலக்கு எப்போதும் மிகப்பெரிய சிக்கலை சமாளிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட வேண்டுமே தவிர சராசரிப் பிரச்சினைகளுக்கான தீர்வாக இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget