மேலும் அறிய

LIC IPO: எல்.ஐ.சி ஐபிஓ எப்போது? பங்குச்சந்தை ஒத்துழைக்குமா?

சந்தை மதிப்பை கணக்கிட்ட பிறகு அதனை தொடர்ந்து ஒழுங்குமுறை சார்ந்த அனுமதி வாங்க வேண்டி இருக்கிறது. எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனம் என்பதால் ஐஆர்டிஏவின் அனுமதி தேவைபடும்

பங்குச்சந்தையில் தற்போதைய ஹாட்டாபிக் எல்.ஐ.சி. ஐபிஓதான். நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் (2022 ஜனவரி முதல் மார்ச்) எல்.ஐ.சி. ஐபிஓ வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பல சிக்கல்கள் இருப்பதால் அடுத்த நிதி ஆண்டில்தான் ஐபிஓ வெளியாகும் என ஊடகங்களில் செய்தி வெளியாகின. ஆனால் நடப்பு நிதி ஆண்டிலே ஐபிஓ வெளியாகும் என மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

சொல்லப்படும் காரணங்கள்?

எல்.ஐ.சி.யின் சந்தை மதிப்பு ரூ10 லட்சம் கோடிக்கும் மேல். இதில் ஐந்து முதல் 10 சதவீதம் அளவுக்கு பங்குகளை விலக்கிகொள்ள மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் இதில் பல சிக்கல்கள் இருப்பதாக தெரிகிறது. நிறுவனத்தின் சந்தை மதிப்பை மதிப்பிடுவதில் இன்னும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. பல வகையான புராடக்ட்கள், பல இடங்களில் ரியல் எஸ்டேட் சொத்துகள், துணை நிறுவனங்கள், லாபம் உள்ளிட்ட பல விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டே சந்தை மதிப்பை கணிக்க வேண்டி இருக்கும். மேலும் பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் கணிசமான பங்கு எல்.ஐ.சி.க்கு இருக்கிறது. இதில் சில சிக்கல் இருப்பதாக தெரிகிறது.

சந்தை மதிப்பை கணக்கிட்ட பிறகு அதனை தொடர்ந்து ஒழுங்குமுறை சார்ந்த அனுமதி வாங்க வேண்டி இருக்கிறது. எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனம் என்பதால் ஐஆர்டிஏவின் அனுமதி தேவைபடும். அதனை தொடர்ந்து செபியின் அனுமதி தேவை. பெரிய நிறுவனம், சந்தை மதிப்பிடுவதில் உள்ள சிக்கல், ஒழுங்குமுறை ஆணையங்களின் அனுமதி உள்ளிட்ட காரணங்களால் நடப்பு நிதி ஆண்டில் ஐபிஓ வெளியாகாது என ஊடகங்களில் செய்தி வெளியாது. மேலும் தற்போது வெளியாகும் அனைத்து ஐபிஒகளும் பெரு வெற்றி அடையவில்லை.

LIC IPO: எல்.ஐ.சி ஐபிஓ எப்போது? பங்குச்சந்தை ஒத்துழைக்குமா?

மேலும் நடப்பு ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால் எல்.ஐ.சி.யின் ஐபிஓ வெளியாக வேண்டும். ஆனால் எல்.ஐ.ஓ வெளியாகவில்லை என்றால் பங்கு விலக்கலுக்கான திட்டமிடப்பட்ட இலக்கையும் எட்ட முடியாது என செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை மத்திய அரசு மறுத்திருக்கிறது. எல்.ஐ.சி. ஐபிஓ திட்டமிட்டபடி நடக்கும். அதற்கான பணிகள் நடந்து வருவதாக டிஐபிஏஎம் செயலாளர் ட்விட்டர் மூலம் விளக்கம் அளித்திருக்கிறார்.

37 லட்சம் கோடி சொத்துகள்

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சி திகழ்கிறது. ரூ.37 லட்சம் கோடி சொத்துகளை கையாளுகிறது. இதற்கடுத்து மிகப்பெரிய நிறுவனமான எஸ்பிஐ லைப் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் 2.21 லட்சம் கோடி ரூபாயை அளவுக்கு மட்டுமே கையாளுகிறது. ஒப்பீட்டளவில் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் இது. மேலும் இந்தியாவில் ஒட்டுமொத்த மியூச்சுவல் பண்ட் துறை கையாளும் தொகையை விட எல்.ஐ.சி. கையாளும் தொகை மிக அதிகம். பல நாடுகளின் ஜிடிபியை விட எல்.ஐ.சி. கையாளும் சொத்து மதிப்பு அதிகம்.

LIC IPO: எல்.ஐ.சி ஐபிஓ எப்போது? பங்குச்சந்தை ஒத்துழைக்குமா?

1956-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை இந்தியாவில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. அதனால் காப்பீட்டு சந்தையில் தவிர்க்க முடியாத சக்தியாக எல்.ஐ.சி இருக்கிறது. அதனால் எல்.ஐ.சியின் ஐபிஓவுக்கு சந்தையில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் வெளியாகுமா அல்லது ஊடகங்களில் வெளியானதுபோல அடுத்த நிதி ஆண்டுக்கு செல்லுமா? எல்.ஐ.சி. ஐபிஓக்கு பங்குச்சந்தை ஒத்துழைக்குமா?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Embed widget