மேலும் அறிய

TN Budget 2022: ஈபிஎஸ்க்கும் ஓபிஎஸ்க்கும் சபை எப்படி நடக்கும் என்று தெரியும் ; இது நியாயமா? சபாநாயகர் அப்பாவு கேள்வி

எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் முதல் அமைச்சர்களாக இருந்தவர்கள் இருந்தும் அமல்களில் ஈடுபடுவது ஏன் என்று சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அமளியில் ஈடுபட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.

ஆனால், சபாநாயகர் அப்பாவு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க மறுத்தார். இதனால், அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நிதிநிலை அறிக்கையை படித்து வந்த நிதியமைச்சர் பட்ஜெட் வாசிப்பதை சில நிமிடங்கள் நிறுத்தி அமர்ந்தார்.

அதன்பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முதல் அமைச்சர்களாக இருந்தவர்கள். அவர்களுக்கு இந்த சபை எப்படி நடக்கும் என்று நன்றாகவே தெரிந்திருக்கும். இருந்தும் இது போன்று அமல்களில் ஈடுபடுவது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார். 

அதிமுக வெளிநடப்பு செய்ததால் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாசிக்க தொடங்கி பல்வேறு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்தார். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்பொழுது பேட்டியளித்த அவர், "தமிழக அரசு தாக்கல் செய்த இந்த பட்ஜெட் வெத்துவேட்டாகும். வருவாய் பற்றாக்குறை மதிப்பீடு ரூ. 56 ஆயிரம் கோடி ஏற்பட்டு இருக்கிறது. 2021 - 22 ம் ஆண்டுக்கான கடன் கடந்த ஆண்டு 1,08,175 கோடி ரூபாய் வாங்கி இன்று செலவு செய்து இருக்கிறார்கள். 2022 - 23 ம் ஆண்டுக்கான வருகின்ற ஆண்டு சுமார் 1,20,000 கோடி கடன் வாங்குவதாக அறிவித்து இருக்கிறார்கள். கடந்த 2011 ம் ஆண்டு திமுக அரசு ஆட்சியில் இருந்து விலகும்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றார். அப்பொழுது தமிழ்நாட்டின் கடன் 1,00,000 கோடியே கடனாக இருந்தது. 

அதேபோல், 2021 ம் ஆண்டு அதிமுக அரசு ஆட்சியைவிட்டு செல்லும்போது சுமார் 4,00,000 கோடி கடனாக இருந்தது. அவை அனைத்தையும் மூலதன செலவுகளுக்காக செலவளித்தோம். ஆனால், 2021 திமுக ஆட்சிக்கு பிறகு சுமார் 1,08,000 கோடி கடன் பெற்று இருக்கிறார்கள். இருப்பினும், இதில் எந்தவொரு முக்கியமான திட்டங்களும் இல்லை, அது நிறைவேற்றப்பட்டதாகவும் தெரியவில்லை. 

நடப்பு 22- 23 ம் ஆண்டு சுமார் 1,20,000 கோடி கடன் வாங்குவதாக அறிவித்து இருக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு சுமார் 2,28,000 கோடி ரூபாய் கடன் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. நாங்கள் 10 ஆண்டுகளாக 4,00,000 கோடியே செலவாக பெற்றோம். அதிலும், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோதிலும் வருவாய் எங்களுக்கு குறைவாகவே இருந்தது. அப்பொழுதும் நாங்கள் கடன் குறைவாகவே பெற்றோம். 

திமுக ஆட்சிக்குபிறகு கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழிற்சாலைகள் அனைத்து இயங்கின. வருவாய் அதிகரித்தபோது கடன் குறைந்துதான் இருக்கவேண்டுமே தவிர, அதிகரிக்க கூடாது. இதன்மூலம் பொதுமக்களுக்கு ஏமாற்றம்தான். திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் தரேன் என்று அறிவித்தார்கள் அதுவும் பட்ஜெட் தாக்கத்தில் சாக்கு போக்கு சொல்லி தள்ளி வைத்தார்கள். 

அதேபோல், திமுக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு என்று தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
Embed widget