மேலும் அறிய

ABP Explainer: ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன? எதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூடுகிறது?

தற்போது நடைபெற்று வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்காக ஜிஎஸ்டி பங்கீடு, கூடுதல் வரி விதிப்பு முதலான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1 ஆன்று தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகளைக் கடந்துள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது சந்திப்பு நேற்று சண்டிகரில் தொடங்கியது. 

தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகளில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பான வழிமுறைகள் பல்வேறு மாற்றங்களைக் கடந்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்காக ஜிஎஸ்டி பங்கீடு, கூடுதல் வரி விதிப்பு முதலான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன?

கடந்த 2016ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் இரு அவைகளாலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 122வது சட்டதிருத்த மசோதாவின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. சுமார் 15 மாநிலங்களின் சட்டமன்றங்களில் இந்த சட்டதிருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. 

ABP Explainer: ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன? எதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூடுகிறது?

சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் சட்டப்பிரிவின் 279ஏ(1)-ன்படி குடியரசுத் தலைவரால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான மன்றமாக ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கப்பட்டது. 

ஜிஎஸ்டி கவுன்சிலின் உறுப்பினர்களாக மத்திய நிதியமைச்சர் தலைவராகவும், மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகளாகவும் செயல்படுவர். மேலும், மாநிலங்கள் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக தங்கள் அமைச்சர்களை நியமிக்கலாம். 

ஜிஎஸ்டி கவுன்சில் எதற்காக உருவாக்கப்பட்டது?

இந்திய அரசியலமைப்பின் 279வது சட்டப்பிரிவின்படி, ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி தொடர்பான முக்கிய விவகாரங்களில் பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வெவ்வேறு சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான வரி விதிப்பு குறித்த தீர்மானங்களும் இங்கே முடிவு செய்யப்படுகின்றன. உதாரணமாக, கேசினோக்கள், ஆன்லைன் கேமிங், குதிரை பந்தயம் முதலானவை மீது 28 சதவிகித ஜிஎஸ்டி விதிக்குமாறு அமைச்சர்கள் குழு ஒன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதன்மீதான முடிவு ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்படும். 

ABP Explainer: ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன? எதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூடுகிறது?

ஜிஎஸ்டி கவுன்சிலில் இந்த முறை என்ன மாறியிருக்கிறது?

கடந்த மே மாதம், உச்ச நீதிமன்றம் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் முழு முடிவானவை அல்ல எனக் கூறியதையடுத்து முதல் முறையாக கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இது. 

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கூறியதில், 246ஏ சட்டப்பிரிவு என்பது நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஜிஎஸ்டி தொடர்பான விதிமுறைகளை வகுக்கும் அதிகாரத்தை அளிப்பதாகவும், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் கலந்தாலோசித்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையைத் தமிழ்நாடு, கேரளா முதலான மாநிலங்கள் வரவேற்றதுடன், தங்கள் மாநிலத்திற்கு ஏற்ப பரிந்துரைகளை மாற்றிக் கொள்ளும் உரிமை வேண்டும் எனக் கோரியிருந்தன. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Flipkart அலறவிட வரும் Nothing Phone 4b... ! ரூ.5000 தள்ளுபடி, 6000 mAh அசுர பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
Flipkart அலறவிட வரும் Nothing Phone 4b... ! ரூ.5000 தள்ளுபடி, 6000 mAh அசுர பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
Puducherry budget : புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் பச்சைக்கொடி! ரூ.14,300 கோடி ஒப்புதல்
Puducherry budget : புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் பச்சைக்கொடி! ரூ.14,300 கோடி ஒப்புதல்
பட்ஜெட் ஒப்புதலில் தாமதம்... நிதிச்சுமை குறித்து கேள்வி எழுப்பிய டெல்லி: புதுச்சேரி அரசு கொடுத்த அதிரடி ரிப்போர்ட்!
பட்ஜெட் ஒப்புதலில் தாமதம்... நிதிச்சுமை குறித்து கேள்வி எழுப்பிய டெல்லி: புதுச்சேரி அரசு கொடுத்த அதிரடி ரிப்போர்ட்!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Minister Ramesh warning : ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
Carens Clavis EV: 490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
Embed widget