மேலும் அறிய

ABP Explainer: ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன? எதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூடுகிறது?

தற்போது நடைபெற்று வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்காக ஜிஎஸ்டி பங்கீடு, கூடுதல் வரி விதிப்பு முதலான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1 ஆன்று தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகளைக் கடந்துள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது சந்திப்பு நேற்று சண்டிகரில் தொடங்கியது. 

தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகளில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பான வழிமுறைகள் பல்வேறு மாற்றங்களைக் கடந்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்காக ஜிஎஸ்டி பங்கீடு, கூடுதல் வரி விதிப்பு முதலான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன?

கடந்த 2016ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் இரு அவைகளாலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 122வது சட்டதிருத்த மசோதாவின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. சுமார் 15 மாநிலங்களின் சட்டமன்றங்களில் இந்த சட்டதிருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. 

ABP Explainer: ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன? எதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூடுகிறது?

சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் சட்டப்பிரிவின் 279ஏ(1)-ன்படி குடியரசுத் தலைவரால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான மன்றமாக ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கப்பட்டது. 

ஜிஎஸ்டி கவுன்சிலின் உறுப்பினர்களாக மத்திய நிதியமைச்சர் தலைவராகவும், மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகளாகவும் செயல்படுவர். மேலும், மாநிலங்கள் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக தங்கள் அமைச்சர்களை நியமிக்கலாம். 

ஜிஎஸ்டி கவுன்சில் எதற்காக உருவாக்கப்பட்டது?

இந்திய அரசியலமைப்பின் 279வது சட்டப்பிரிவின்படி, ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி தொடர்பான முக்கிய விவகாரங்களில் பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வெவ்வேறு சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான வரி விதிப்பு குறித்த தீர்மானங்களும் இங்கே முடிவு செய்யப்படுகின்றன. உதாரணமாக, கேசினோக்கள், ஆன்லைன் கேமிங், குதிரை பந்தயம் முதலானவை மீது 28 சதவிகித ஜிஎஸ்டி விதிக்குமாறு அமைச்சர்கள் குழு ஒன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதன்மீதான முடிவு ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்படும். 

ABP Explainer: ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன? எதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூடுகிறது?

ஜிஎஸ்டி கவுன்சிலில் இந்த முறை என்ன மாறியிருக்கிறது?

கடந்த மே மாதம், உச்ச நீதிமன்றம் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் முழு முடிவானவை அல்ல எனக் கூறியதையடுத்து முதல் முறையாக கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இது. 

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கூறியதில், 246ஏ சட்டப்பிரிவு என்பது நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஜிஎஸ்டி தொடர்பான விதிமுறைகளை வகுக்கும் அதிகாரத்தை அளிப்பதாகவும், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் கலந்தாலோசித்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையைத் தமிழ்நாடு, கேரளா முதலான மாநிலங்கள் வரவேற்றதுடன், தங்கள் மாநிலத்திற்கு ஏற்ப பரிந்துரைகளை மாற்றிக் கொள்ளும் உரிமை வேண்டும் எனக் கோரியிருந்தன. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Gold Rate Today : தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஷாக்.. சவரனுக்கு ரூ.1,160 உயர்வு- வெள்ளி விலையும் இவ்வளவு அதிகரிப்பா.!!
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஷாக்.. சவரனுக்கு ரூ.1,160 உயர்வு- வெள்ளி விலையும் இவ்வளவு அதிகரிப்பா.!!
வேண்டாம் என்ற சந்திரசேகரன்... டாடா சன்ஸ் தலைவராக மீண்டும் 5 ஆண்டுகள் - நடந்தது என்ன?
வேண்டாம் என்ற சந்திரசேகரன்... டாடா சன்ஸ் தலைவராக மீண்டும் 5 ஆண்டுகள் - நடந்தது என்ன?
GOLD AND SILVER RATE TODAY : நகை வாங்குவோருக்கு நிம்மதி! மீண்டும் குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகை வாங்குவோருக்கு நிம்மதி! மீண்டும் குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
LIVE | Kerala Lottery Result Today (15.09.2026): கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி குலுக்கல் முடிவுகள் இன்று! ரூ.1 கோடி யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (15.09.2026): கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி குலுக்கல் முடிவுகள் இன்று! ரூ.1 கோடி யாருக்கு?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Morning Breakfast Scheme: காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Durai Vaiko : மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
25,000 வீடுகள் கட்ட அனுமதி வந்தாச்சு.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.! 25,000 வீடுகள் கட்ட அரசு நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி?
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
TASMAC Bars : டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
Embed widget