மேலும் அறிய

ஒரே நேரத்தில் 8,17,000 கார்களை திரும்பப் பெற்ற டெஸ்லா: ஏன் தெரியுமா?

ஒரே நேரத்தில் 8,17,000 கார்களை டெஸ்லா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. ஏன் தெரியுமா?

ஒரே நேரத்தில் 8,17,000 கார்களை டெஸ்லா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. ஏன் தெரியுமா?

2021-2022 Model S and Model X, 2017-2022 Model 3, and 2020-2022 Model Y, ஆகிய மாடல் வாகனங்கள் ஆக்குப்பேஷன் கேஷ் ப்ரொடக்‌ஷன் விதிமுறையைப் பின்பற்றாதாதால் அது அமெரிக்க மோட்டார் வாகன பாதுகாப்பு நெறிமுறைக்கு உட்பட்டதாக இல்லை என்று தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து டெஸ்லா ஒரே நேரத்தில் 1.8 லட்சம் வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளது.

தொழில்நுட்ப வார்த்தைகளில் அல்லாமல் சாமான்யர்களுக்குப் புரிவது போல் சொல்ல வேண்டுமென்றால், டெஸ்லாவின் மேற்கூறிய மாடல் கார்களை ஒரு வாடிக்கையாளர் ஸ்டார்ட் செய்யும்போது அவர் சீட் பெல்ட் அணிவதற்காக மற்ற அலெர்ட் எதுவுமே அவருக்குக் கேட்காது. இதுதான் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை சரி செய்ய டெஸ்லா over-the-air (OTA) என்ற மென்பொருளை மீண்டும் அப்டேட் செய்து காரில் பொருத்தும் எனத் தெரிகிறது.

இருப்பினும் இந்தப் பிரச்சினையால் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி முடிவடைந்த காலம் வரை ஒரு விபத்து கூட நடக்கவில்லை என டெஸ்லா தெரிவிக்கிறது.

இந்தக் குறைபாட்டை தென் கொரியாவின் ஆட்டோமொபைல் டெஸ்டிங் அண்ட் ரிசேர்ச் இன்ஸ்டிட்யூட்  NHTSA, the South Korea Automobile Testing & Research Institute (KATRI) தான் முதன்முதலாக டெஸ்லாவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
மேலும், காரை ஸ்டார்ட் செய்து மணிக்கு 22 கிமீ வேகத்தைத் தாண்டிவிட்டாலே இந்தக் குறைபாடு தெரிவதில்லை என்றும் டெஸ்லா வாதிடுகிறது. இதனால் தான் டெஸ்லா 8,17,000 கார்களை திரும்பப் பெறுகிறது. 
முன்னதாக செவ்வாய்க்கிழமை டெஸ்லா வெளியிட்ட அறிவிப்பில் அமெரிக்காவில் உள்ள 53,822 டெஸ்லா வாகனங்களை  Full Self-Driving (Beta) மென்பொருள் சர்ச்சையால் திரும்பப் பெறுவதாகக் கூறியது. 

இந்திய வருகை எப்போது?

டெஸ்லா இந்திய வருகை எப்போது? இது இங்குள்ள பணக்காரர்கள் அடிக்கடி எழுப்பும் மில்லியன் டாலர் கேள்வி. பிரபல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தங்களுடைய கார் விற்பனையை சிறப்பாக நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் கால்பதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. எனினும் அதன்பின்னர் இது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. 

இந்நிலையில் இது தொடர்பாக  ட்விட்டர் தளத்தில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எலோன் மஸ்க் பதிலளித்துள்ளார். அதன்படி ஒருவர் ட்விட்டர் தளத்தில்,”டெஸ்லா கார்கள் எப்போது இந்தியாவில் வரும்? அந்த கார்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வேகமாக விற்பனைக்கு வரவேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதவிற்கு எலோன் மஸ்க் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் பதிலளித்துள்ளார். அதில், “இந்தியாவில் எங்களுடைய கார்களை கொண்டு வர இன்னும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” எனக் கூறியிருந்தார். 

இந்தியாவில் என்ன சிக்கல்?

இந்த கார்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு மட்டும் இந்திய வர உள்ளதாக தெரிகிறது. ஆகவே அதற்கான வரி மிகவும் அதிகமாக இருக்கும். இதன்காரணமாக அந்த காரின் விலையும் இந்தியாவில் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். எனவே இதை தவிர்க்க எலோன் மஸ்க் இந்திய அரசிடம் பேசி வருவதாகக் கூறுகிறது.
 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
Embed widget