மேலும் அறிய

Car Price Hike: இனிமே கார் வாங்குறது கொஞ்சம் கஷ்டம்தான்... ஹோண்டாவும் விலையை உயர்த்தி அறிவிப்பு

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு நிறுவனங்களை தொடர்ந்து, ஹோண்டா நிறுவனமும் தனது கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

விலையை உயர்த்திய உற்பத்தி நிறுவனங்கள்:

நடப்பாண்டில் சர்வதேச அளவில் நீடித்த செமிகண்டக்டர்கள் பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகள் போன்ற காரணங்களால், இந்தியாவில் கார் உற்பத்தி நிறுவனங்கள் விலையை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தொடர்ந்து பல்வேறு தகவல் வெளியாகின. அந்த வகையில், உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுசுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவற்றுடன், ஆடி, ரெனால்ட் , எம்ஜி மோட்டார் மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் போன்ற சொகுசு கார் நிறுவனங்கள்,  அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளின் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்யும் வகையில், தங்களது பல்வேறு கார் மாடல்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.

புதிய விலை விவரங்கள்:

அதன்படி ஜீப் இந்தியா நிறுவனம் தனது அனைத்து ஜீப் எஸ்யூவி வகைகளின் விலையையும்  2 முதல் 4% வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ICE மற்றும் EV மாடல் கார்களின் விலை தற்போதைய விலையிலிருந்து இரண்டு சதவீதம் வரை விலை உயர்வைக் காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கியா இந்தியா நிறுவனம் தனது ஆட்டோமொபைல்களின் விலை ரூ.50,000 வரை உயர்த்தப்படும் எனவும், புதிய விலை உயர்வு வரும் ஜனவரி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.

சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான Mercedes-Benz தனது கார் மாடல்களின் விலையை 5% அளவிற்கும், 
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது எஸ்யூவியின் விலையை ரூ.90,000 வரையும் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளன. இதேபோன்று, ஆடி இந்தியா நிறுவனமும் வரும் ஜனவரி 2023 முதல்,  கார் விலையை 1.7% வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்திய ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் மற்றும் தற்போதைய விலை அழுத்தம் ஆகியவை விலையை உயர்த்தும் சூழலுக்கு தள்ளுவதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்து இருந்தாலும், விலைஒ உயர்வு எவ்வளவு என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

விலையை உயர்த்தும் ஹோண்டா நிறுவனம்:

இந்த நிறுவனங்களின் வரிசையில், ஜப்பானிய வாகன உற்பத்தியாளரான ஹோண்டா நிறுவனம் தனது சில கார் மாடல்களின் விலையை ரூ. 30,000 வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில்,  மூலப்பொருட்களின் உள்ளீட்டு விலை மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர உள்ள கடுமையான உமிழ்வு தரநிலைகளை கடைபிடிக்கும் வகையில், செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் காரணமாக குறிப்பிட்ட சில கார் மாடல்களின் விலையை  உயர்த்துவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.30,000 வரையிலான விலை உயர்வு என்பது, கார் மாடலுக்கு ஏற்றவாறு மாறுபடும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கான முக்கிய காரணம்:

நிகழ்நேர ஓட்டுநர் உமிழ்வு அளவைக் கண்காணிக்க வாகனங்களில் சுய-கண்டறியும் சாதனம் இருக்க வேண்டும் என்பது, வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களின் வாகன விலை உயர்வுக்கும், இந்த சாதனத்தை பொருத்துவதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

 
 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget