மேலும் அறிய

தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் புதிய பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானைக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நீச்சல் குளம் மற்றும் கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள கருமாரி தெப்பம் உள்ளிட்ட புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலலி நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழா வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் கோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்தார். அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகளிடம் தேர் திருவிழாவுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து திருவிழா காலங்களில் நெல்லையப்பர் கோவிலில் 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார். நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானைக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நீச்சல் குளம் மற்றும் கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள கருமாரி தெப்பம் உள்ளிட்ட புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.


தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் புதிய பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறும் பொழுது, தமிழகத்தில் பல்வேறு கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி வருகிறது. 418 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடக்காத கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் கோவிலில் நாளைய தினம் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நெல்லை நெல்லையப்பர் கோவிலில் நடந்து வரும் பணிகள் அறநிலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோவில் ஸ்தல மரம் அமைந்துள்ள இடத்தில் புதிய கல் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 100 ஆண்டுகளுக்கு பின்னர் நெல்லையப்பர் கோவிலில் மூலிகை தைலம் தயார் செய்யும் பணி தொடங்கி 25 நாட்களாக நடைபெற்று வருகிறது.   கோவிலில் அமைந்துள்ள கருமாரி தெப்பம் புனரமைக்கும் பணி கோவில் பிரகாரங்கள் புனரமைக்கும் பணி உள்ளிட்டவைகள் நடந்து  வருகிறது. நெல்லையப்பர் கோவிலில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து 4 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் விரைவில்  முதல்வரால் தொடங்கப்பட உள்ளது. சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது போன்று நெல்லையப்பர் கோவிலில் திருவிழா காலங்களில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 21 லட்சம் கூடுதல் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேர் வரை அன்னதானம் சாப்பிடும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் புதிய பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

திருவிழா காலங்களில் தேர் உலா வருகின்ற பகுதிகளில் முழுமையாக அறநிலைய துறை சார்ந்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கையளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரியம் மூலம் தேர் உலா வரும் பாதைகளில் புதைவட  மின்தடமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லையப்பர் கோவில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள துணை ஆணையாளர் அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் பக்தர்கள் அதிகம் வரும் கோவில்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை பணிகளான கழிப்பறை குடிநீர் வசதிகளை தனியார் நிறுவனம் மூலம் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநில கோவில்களை போல திருச்செந்தூர் முருகன் கோவில்,  சமயபுரம் மாரியம்மன் கோவில்,  பழனி தண்டாயுதபாணி கோவில்,  திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களின் புதிய பணிகள் இந்த மாத இறுதிக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபாய் 300 கோடி மதிப்பில் திருச்செந்தூர் கோவிலில் செய்யப்பட இருக்கும் மேம்பாட்டு பணிகளுக்கான முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளது. முதலமைச்சர் மூலம் ஆவணி மாதம் அதற்கான பணிகள் தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் 1500 கோவில்கள் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை போன்று கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் புதிய பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

5 ஆண்டுகளில் திருப்பணிகள் நடைபெறாத கோவில்களே இல்லாத நிலை உருவாக்கப்படும். தமிழகத்தில் மூன்று கோவில்களில் புதிய தங்கத்தேர் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று உச்சபட்ச நிலையில் இருக்கும் போதே தமிழக முதலமைச்சர் நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது நோய் பரவல் முதற்கட்டத்தில் தான் உள்ளது. இதனால் கோவில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவதற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. தமிழகத்தில் நோய் பரவல் அதிகரிக்கும் நிலையை ஏற்படாதவாறு முதல்வரின் நடவடிக்கை இருக்கும். முகக்கவசம் அணிந்து கோவிலுக்கு பக்தர்கள் வரும் நிலை இருக்காது என நம்புவோம் என தெரிவித்தார். முன்னதாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பேராத்துசெல்வி அம்மன் கோவிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு யாகசாலை பூஜைகளை தொடங்கி வைத்தார். நாகர்கோவில் செல்லும் வழியில் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோவிலில் சிவன் சன்னதி கட்டும் பணிகளை பார்வையிட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (22-07-2026): மேஷத்துக்கு லாபம்.. கடகத்துக்கு செலவு.. உங்க ராசிக்கு இன்று என்ன நடக்கும்?
Rasi Palan Today (22-07-2026): மேஷத்துக்கு லாபம்.. கடகத்துக்கு செலவு.. உங்க ராசிக்கு இன்று என்ன நடக்கும்?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
Rasi Palan Today (21-07-2026): ஆடி முதல் செவ்வாய்.. இன்று மகரத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (21-07-2026): ஆடி முதல் செவ்வாய்.. இன்று மகரத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (20-07-2026): மேஷத்துக்கு வெற்றி.. கன்னிக்கு ஏமாற்றம்.. உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-07-2026): மேஷத்துக்கு வெற்றி.. கன்னிக்கு ஏமாற்றம்.. உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
Embed widget