மேலும் அறிய

தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் புதிய பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானைக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நீச்சல் குளம் மற்றும் கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள கருமாரி தெப்பம் உள்ளிட்ட புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலலி நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழா வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் கோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்தார். அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகளிடம் தேர் திருவிழாவுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து திருவிழா காலங்களில் நெல்லையப்பர் கோவிலில் 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார். நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானைக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நீச்சல் குளம் மற்றும் கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள கருமாரி தெப்பம் உள்ளிட்ட புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.


தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் புதிய பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறும் பொழுது, தமிழகத்தில் பல்வேறு கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி வருகிறது. 418 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடக்காத கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் கோவிலில் நாளைய தினம் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நெல்லை நெல்லையப்பர் கோவிலில் நடந்து வரும் பணிகள் அறநிலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோவில் ஸ்தல மரம் அமைந்துள்ள இடத்தில் புதிய கல் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 100 ஆண்டுகளுக்கு பின்னர் நெல்லையப்பர் கோவிலில் மூலிகை தைலம் தயார் செய்யும் பணி தொடங்கி 25 நாட்களாக நடைபெற்று வருகிறது.   கோவிலில் அமைந்துள்ள கருமாரி தெப்பம் புனரமைக்கும் பணி கோவில் பிரகாரங்கள் புனரமைக்கும் பணி உள்ளிட்டவைகள் நடந்து  வருகிறது. நெல்லையப்பர் கோவிலில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து 4 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் விரைவில்  முதல்வரால் தொடங்கப்பட உள்ளது. சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது போன்று நெல்லையப்பர் கோவிலில் திருவிழா காலங்களில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 21 லட்சம் கூடுதல் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேர் வரை அன்னதானம் சாப்பிடும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் புதிய பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

திருவிழா காலங்களில் தேர் உலா வருகின்ற பகுதிகளில் முழுமையாக அறநிலைய துறை சார்ந்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கையளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரியம் மூலம் தேர் உலா வரும் பாதைகளில் புதைவட  மின்தடமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லையப்பர் கோவில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள துணை ஆணையாளர் அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் பக்தர்கள் அதிகம் வரும் கோவில்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை பணிகளான கழிப்பறை குடிநீர் வசதிகளை தனியார் நிறுவனம் மூலம் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநில கோவில்களை போல திருச்செந்தூர் முருகன் கோவில்,  சமயபுரம் மாரியம்மன் கோவில்,  பழனி தண்டாயுதபாணி கோவில்,  திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களின் புதிய பணிகள் இந்த மாத இறுதிக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபாய் 300 கோடி மதிப்பில் திருச்செந்தூர் கோவிலில் செய்யப்பட இருக்கும் மேம்பாட்டு பணிகளுக்கான முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளது. முதலமைச்சர் மூலம் ஆவணி மாதம் அதற்கான பணிகள் தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் 1500 கோவில்கள் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை போன்று கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் புதிய பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

5 ஆண்டுகளில் திருப்பணிகள் நடைபெறாத கோவில்களே இல்லாத நிலை உருவாக்கப்படும். தமிழகத்தில் மூன்று கோவில்களில் புதிய தங்கத்தேர் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று உச்சபட்ச நிலையில் இருக்கும் போதே தமிழக முதலமைச்சர் நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது நோய் பரவல் முதற்கட்டத்தில் தான் உள்ளது. இதனால் கோவில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவதற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. தமிழகத்தில் நோய் பரவல் அதிகரிக்கும் நிலையை ஏற்படாதவாறு முதல்வரின் நடவடிக்கை இருக்கும். முகக்கவசம் அணிந்து கோவிலுக்கு பக்தர்கள் வரும் நிலை இருக்காது என நம்புவோம் என தெரிவித்தார். முன்னதாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பேராத்துசெல்வி அம்மன் கோவிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு யாகசாலை பூஜைகளை தொடங்கி வைத்தார். நாகர்கோவில் செல்லும் வழியில் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோவிலில் சிவன் சன்னதி கட்டும் பணிகளை பார்வையிட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Lunar Eclipse 2026: சந்திர கிரகணம் எப்போது? எங்கெல்லாம் தெரியும்? என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? - முழு விவரம்
சந்திர கிரகணம் எப்போது? எங்கெல்லாம் தெரியும்? என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? - முழு விவரம்
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
மிதுன ராசி - 2026 சுக்ர பெயர்ச்சி “ஆழமான காதலும் இனிய உறவுகளும்”
மிதுன ராசி - 2026 சுக்ர பெயர்ச்சி “ஆழமான காதலும் இனிய உறவுகளும்”
ரிஷப ராசி - 2026 சுக்ர பெயர்ச்சி ”தொழில் வளர்ச்சியும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும்”
ரிஷப ராசி - 2026 சுக்ர பெயர்ச்சி ”தொழில் வளர்ச்சியும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும்”
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK KATPADI CANDIDATE : துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
ICC T20 World Cup: நாலாபக்கமும் அணை கட்டிட்டாங்க..! கட்டம் சொல்வது என்ன? இந்தியாவிற்கான வாய்ப்புகள், ஆப்ஷன்கள்
ICC T20 World Cup: நாலாபக்கமும் அணை கட்டிட்டாங்க..! கட்டம் சொல்வது என்ன? இந்தியாவிற்கான வாய்ப்புகள், ஆப்ஷன்கள்
Renault Duster: ஒரு வழியா தேதி சொல்லிட்டாங்க..! மார்ச் 17 முதல் டஸ்டர் - டெலிவெரி எப்போது? ரெனால்ட் அறிவிப்பு
Renault Duster: ஒரு வழியா தேதி சொல்லிட்டாங்க..! மார்ச் 17 முதல் டஸ்டர் - டெலிவெரி எப்போது? ரெனால்ட் அறிவிப்பு
Edappadi Palaniswamy: நாங்க ஜீரோவா? - தேர்தல் முடிவுல தெரியும்.. திமுகவுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palaniswamy: நாங்க ஜீரோவா? - தேர்தல் முடிவுல தெரியும்.. திமுகவுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
TN Roundup: தேர்தல் ஆணையம் ஆய்வு, வேட்புமனு தாக்கல் தொடக்கம், விஜய்க்கு ஆதரவு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: தேர்தல் ஆணையம் ஆய்வு, வேட்புமனு தாக்கல் தொடக்கம், விஜய்க்கு ஆதரவு - தமிழகத்தில் இதுவரை
Chennai Metro Free Travel: சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்.! சூப்பர் அறிவிப்பு- யாருக்கெல்லாம் தெரியுமா.?
சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்.! சூப்பர் அறிவிப்பு- யாருக்கெல்லாம் தெரியுமா.?
Embed widget