மேலும் அறிய

Arunachaleswarar Temple: முதன் முதலில் பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலின் சிறப்புகள்

முதன் முதலில் பிரம்ம தேவரால் பிரதீசை செய்யப்பட்ட திருதலம் அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் திருத்தலம் உருவான வரலாறு 

திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கிலோமீட்டர் கொண்டது. இதில் ஏழுவது கிலோமீட்டரில் மைய பகுதியான அடி அண்ணாமலை கிராமத்தில்  அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி அருணாசலேஸ்வரர் திருத்தலம் ஆகும்.
இந்த திருத்தலத்தில் தினம்தோறும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது. இறைவியின் திருநாமம் உண்ணாமுலையம்மாள். பிரம்மதேவர் பிரதிஷ்டை செய்த மூலவர் இந்தக் கோவிலில் அமைந்திருப்பது சிறப்பானது. நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகர்  திருவெம்பாவை பாடிய திருத்தலமாகவும் இது திகழ்கிறது. அண்ணாமலையாரின் முதல் திருத்தலம் இதுவாகும். அதாவது ஆதி திருத்தலம் அதனால் ஆதி அண்ணாமலையார் திருக்கோவில் என போற்றப்படுகிறது .

Arunachaleswarar Temple: முதன் முதலில் பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலின் சிறப்புகள்
 
அணி அண்ணாமலை என்றும் சொல்வார்கள். படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தனது புதல்வரும் சனகாதி முனிவர்களில் ஒருவருமான சனகரிடம், வேறெங்கும் களைய முடியாத பாவங்கள் அணி அண்ணாமலையார் திருக்கோவிலில் களையப்படும் என்று கூறியதாக புராணத் தகவல் சொல்கிறது.
 
சிவபெருமாளின் அடி முடி காணாத விஷ்ணு,பிரம்மா 
 
ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் பெரியவர் என்ற  போட்டி நிலவியது. இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான் அவர்கள் முன்பாகத் தோன்றினார். என்னுடைய அடி அல்லது முடிகளில் ஏதாவது ஒன்றை யார் முதலில் கண்டு திரும்புகிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார் சிவபெருமாள்; இருவரும் ஒப்புக்கொண்டனர். 
மகாவிஷ்ணு, சிவபெருமானின் அடியைக் காண  வராக  உருவம் எடுத்து  பூமியைக் குடைந்து கொண்டு சென்றார். பின்னர் பிரம்மதேவன் சிவபெருமானின் முடியைக் காண அன்னப் பறவை வடிவம் எடுத்து மேல்நோக்கி பறந்து சென்றார். வெகு உயரம் சென்ற பிறகும் சிவபெருமானின் முடியைக் காண முடியவில்லை. அப்போது சிவபெருமானின்  முடியில் இருந்து விழுந்த தாழம்பூ கீழ் நோக்கி வந்து  கொண்டிருந்தபோது தாழம்பூவைக் கண்ட பிரம்மன் அதனிடம் தான்  சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக சொல்லும்படி கூறினார். அதே சமயம்  அடியைக் காண சென்ற பெருமாள்  காண முடியாமல்  திரும்பி தன்னுடைய  தோல்வியை சிவபெருமானிடம்  ஒப்புக்கொண்டார். பிரம்மனோ தான் முடியைக் கண்டு திரும்பியதாக பொய்  தெரிவித்தார்  அவருக்கு தாழம்பூ  பொய்சாட்சி கூறியது.

Arunachaleswarar Temple: முதன் முதலில் பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலின் சிறப்புகள்
 
 
அனைத்தும் அறிந்த சிவபெருமான் செய்த தவறுக்கு தண்டனையாக பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் வழங்கியதாக புராணம் கூறுகிறது. பிரம்மனுக்கு பூவுலகில் திருக்கோவில் எதுவும் இருக்காது  எனவும்  மற்றும் பொய் சாட்சி உரைத்த தாழம்பூவை சிவபூஜையில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாழம்பூ ஆனது ஆண்டுக்கு ஒரு முறை அதாவது சிவ ராத்திரி தினத்தன்று சிவபெருமானின் பூஜையில் வைக்கப்படுகிறது. சிவபெருமானிடம் முறையிடுவதற்கு முன், சிவ பூஜையில் ஈடுபட எண்ணிய பிரம்மதேவர், தன் திருக்கரங்களால் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த லிங்கத் திருமேனியை இன்றும் நாம், ஆதி அண்ணாமலையார் திருக்கோவிலில் மூலவராக தரிசிக்கலாம்.

Arunachaleswarar Temple: முதன் முதலில் பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலின் சிறப்புகள்
 
நால்வரான மாணிக்க வாசகரின் தனி கோவில் அமைந்த சிறப்பு 
 
அப்பர் , சமந்தர் , சுந்தரர் , மாணிக்கவாசகர் இதில் ஒருவரான மாணிக்க வாசகர் சிவபெருமானுக்கு அடி அண்ணாமலை என்றும் இப்பெரிய கோவிலும் மாணிக்க வாசகப் பெருமானுக்கு ஒரு கோவிலும் ஒரு குளம் உள்ளன. திருநாவுக்கரசின் தேவாரத்தில் 7 பாடல்கள் அடி பாடல்,
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் 
ஜோதியை யாம்பாட கேட்டேயும் 
வாள்தடங்காண்
 மாதே வருதியோ வன் செவலியோ நின் செவிதான் 
மாதேவன்  வார்கழல்கள் வாழ்திய வாழ்தொலி போய் 
வீதிவாய் கேட்டாலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து 
போதார் அமலியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன் 
ஏதேனும் ஆகாள் கிடந்தால் என்னே என்னே 
ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பவாய் 
மாணிக்க வாசகப்பெருமான் ஆதி அண்ணாமலையார் திருக்கோவிலில் திருவெண்பாவை இயற்றி பாடியதால் அவ்விடத்திலேயே அவருக்கு கோவில் கட்டியுள்ளனர். மாணிக்க வாசகருக்கு எந்த திருத்தலத்திலும் தனியாக கோவில் கட்டபடவில்லை திருவண்ணாமலை அடி அண்ணாமலையில் மட்டுமே கட்ட பட்டுள்ளது என்பது சிறப்புகுறியது. 
பிரம்ம தேவருக்கும் பெருமாளுக்கும் அக்னி சொரூபமாக சிவபெருமான் காட்சி கொடுத்த தலத்தில் மலையாக குளிர்ந்து இன்றளவும் அருள்பாலிக்கின்றார். அடி முடி காணா அண்ணாமலையார் என போற்றப்படுகிறார். இதுமட்டுமின்றி இந்த ஆதி அண்ணாமலையார் திருத்தலத்திற்கு யாராலும் அவ்வளவு சுலபமாக வரமுடியாது. அய்யனாக நினைத்து அழைத்தால் மட்டுமே உங்களால் வரயியலும் எனவும் புராணங்களிள் குறிப்பிட்டுள்ளது .

Arunachaleswarar Temple: முதன் முதலில் பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலின் சிறப்புகள்
 
ஆதி அண்ணாமலையார் கோவிலின் சிறப்பு 
 
அடி அண்ணாமலை சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் விமோசனம் கிடைக்கும். பாவ நிவர்த்திக்காக பிரம்மாவின்னால் சபிக்கப்பட்டு மற்றும் பூஜிக்கப்பட்ட லிங்கம் ஆதி அண்ணாமலையார் ஆதி  அருணாச்சலேஷ்வரர் அடி அண்ணாமலையார் என்னும் திருத்தலம்மாகும் . நினைத்தலே முக்தி தரும் இத்தளத்தினை தரிசித்தால் முன் ஜென்ம வினைகள் பிரம்மஹத்தி தோஷங்கள் நீங்கும் விவாக பிராப்தி கைகூடும் மற்றும் சகல சௌபாக்கியங்களும் கைகூடும் இத் திருத்தலத்தில் தரிசித்தால் என்கிறது ஐதீகம்.
 
இது போன்ற ஆன்மீக சிறப்பு கொண்ட திருத்தலங்களின் வரலாற்றை www.abpnadu.com என்ற ABP நாடு இணையதளத்தில் காணலாம்.  
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Sani Peyarchi 2026: 6ம் தேதி சனிப்பெயர்ச்சி! யாருக்கு ஜென்ம சனி? எந்த ராசிக்கு பாத சனி? விரய சனி எவருக்கு?
Sani Peyarchi 2026: 6ம் தேதி சனிப்பெயர்ச்சி! யாருக்கு ஜென்ம சனி? எந்த ராசிக்கு பாத சனி? விரய சனி எவருக்கு?
DMK Cuddalore : ‘கடலூர் தொகுதிக்கு புது முகம்’ திமுக இளைஞரணிக்கு எம்.எல்.ஏ சீட்..?
‘கடலூர் தொகுதிக்கு புது முகம்’ திமுக இளைஞரணிக்கு எம்.எல்.ஏ சீட்..?
Mesha Rasi Sani Peyarchi Palan: மேஷராசி - சனி பெயர்ச்சி 2026 ( வாக்கியப்படி)  பொறுமை-உழைப்பு-வெற்றி
மேஷராசி - சனி பெயர்ச்சி 2026 ( வாக்கியப்படி)  பொறுமை-உழைப்பு-வெற்றி
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
Embed widget