மேலும் அறிய

முப்போகம் விளைந்த பூமி- ஒரு போகத்துக்கே தள்ளாடும் தூத்துக்குடி மாவட்டம்

தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதாலும், முப்போகம் விளைந்த பூமியில் ஒருபோகம் மட்டுமே விளைகிறது.

முப்போகம் விளைந்த தூத்துக்குடி மாவட்டம் ஒருபோகம் விளைச்சலுக்கே தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. முப்போகம் விளைந்த பூமியில், அவ்வப்போது விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் வடக்கே மானாவாரியும், தெற்கே வளமான ஆற்றுப்பாசனத்துடனும் விவசாயம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் தெற்கே வற்றாத ஜீவநதியான தாமிரபரணியும், வடக்கே வைப்பாறும் ஓடுகிறது. ஆனால் தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தில் நன்செய் விவசாயம் சிறப்பாக நடைபெற்று வந்தது. 


முப்போகம் விளைந்த பூமி- ஒரு போகத்துக்கே தள்ளாடும் தூத்துக்குடி மாவட்டம்

தாமிரபரணி ஆற்றில் மருதூர் அணைக்கட்டில் இருந்து மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து வடகால், தென்கால் ஆகிய 4 கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்களின் மொத்த நீளம் 78 கிலோ மீட்டர் ஆகும். இந்த கால்வாய்கள் மூலம் நேரடியாக 53 குளங்கள் நிரப்பப்படுகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 651 குளங்கள் உள்ளன. அதே போன்று 22 ஆயிரத்து 549 கிணறுகள், ஆழ்துளை கிணறுகளும் விவசாயத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


முப்போகம் விளைந்த பூமி- ஒரு போகத்துக்கே தள்ளாடும் தூத்துக்குடி மாவட்டம்

இதனால் மாவட்டத்தில் நெல் சாகுபடி வழக்கமாக 14 ஆயிரத்து 386 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படும். கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 477 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு 16 ஆயிரம் எக்டேர் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் பிசானம் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். 


முப்போகம் விளைந்த பூமி- ஒரு போகத்துக்கே தள்ளாடும் தூத்துக்குடி மாவட்டம்

இந்த சூழ்நிலையில் வயல்வெளிகளுக்கு சீராக தண்ணீர் பாய்ந்து செல்வதற்கும், வயல்களில் இருந்து தண்ணீர் வடிந்து செல்லவும் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கால்வாய்கள் அனைத்தும் முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் விவசாயிகள் ஒப்படி சங்கம் மூலம் வயல்களுக்கு நடுவே செல்லும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. தற்போது அந்த முறை பல இடங்களில் காணாமல் போய் இருக்கிறது. இதனால் அரசே நிதி ஒதுக்கி அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. 


முப்போகம் விளைந்த பூமி- ஒரு போகத்துக்கே தள்ளாடும் தூத்துக்குடி மாவட்டம்

இது குறித்து தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரை சேர்ந்த விவசாயி தமிழ்மணி கூறும் போது, இந்த ஆண்டு விவசாய பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்கு வசதியாக ஏற்கனவே தனியார் பங்களிப்புடன் சில கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சிரமைக்கப்பட்டன. அதே நேரத்தில் மருதூர் கீழக்கால் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டும் பணி தொடங்கப்படவில்லை.


முப்போகம் விளைந்த பூமி- ஒரு போகத்துக்கே தள்ளாடும் தூத்துக்குடி மாவட்டம்

வயல்களுக்கு இடையே செல்லும் வடிகால்கள், முன்பு ஒப்படி சங்கங்கள் மூலம் சீரமைக்கப்பட்டு வந்தன. இடையில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் கால்வாய்கள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு அந்த பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதே நேரத்தில் விவசாய சங்கத்தின் மூலம் மேற்கொள்ளும் பணிகளும் தொய்வை சந்தித்து உள்ளன. விவசாயிகளுக்கு, அவர்களின் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்கும் போது, இது போன்ற பணிகளை ஆர்வமுடன் மேற்கொள்வார்கள். தற்போது அந்த நிலை இல்லாததாலும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருக்கலாம். அதே போன்று கால்வாய்கள் தற்காலிகமாக தூர்வாரும் பணிகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு உள்ளன. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.


முப்போகம் விளைந்த பூமி- ஒரு போகத்துக்கே தள்ளாடும் தூத்துக்குடி மாவட்டம்

விவசாய திட்டங்களுக்கு எம்.எல்.ஏ நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும். முன்பு வேளாண்மை துறை மூலம் கால்வாய்களின் கரைகள் காங்கிரீட்டால் அமைக்கப்பட்டது. தற்போது அந்த திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. முறையாக தண்ணீர் வீணாகாமல் சேமித்து வைத்து பயன்படுத்தியதாலும், கால்வாய்கள் தூர்வாரப்பட்டதாலும் போதுமான தண்ணீர் கிடைத்தது. இதனால் முப்போகம் விளைந்தது. தற்போது இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டதாலும், தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதாலும், முப்போகம் விளைந்த பூமியில் ஒருபோகம் மட்டுமே விளைகிறது என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முத்தெடுக்கும் சோளத்தில் முளைத்த முட்களாய் படைப்புழு: மீட்கும் வழிகள் என்ன?
முத்தெடுக்கும் சோளத்தில் முளைத்த முட்களாய் படைப்புழு: மீட்கும் வழிகள் என்ன?
Madurai Flower Market ; மதுரை மல்லிகைப் பூவின் இன்றைய விலை என்ன.. மாட்டுத்தாவணி மார்கெட் நிலவரம் !
Madurai Flower Market ; மதுரை மல்லிகைப் பூவின் இன்றைய விலை என்ன.. மாட்டுத்தாவணி மார்கெட் நிலவரம் !
Sivagangai ; 17 ஆண்டுகளுக்கு பின் அரங்கேறிய மீன்பிடித் திருவிழா... கிராம மக்கள் உற்சாகம் !
Sivagangai ; 17 ஆண்டுகளுக்கு பின் அரங்கேறிய மீன்பிடித் திருவிழா... கிராம மக்கள் உற்சாகம் !
சத்து சேர்ந்தால் செழிக்கும் பருத்தி… செல்வம் தரும் விவசாயம்: வேளாண்துறை அட்வைஸ்
சத்து சேர்ந்தால் செழிக்கும் பருத்தி… செல்வம் தரும் விவசாயம்: வேளாண்துறை அட்வைஸ்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

NS Raja Subramani : தமிழருக்கு தலைமை பொறுப்பு! முப்படைக்கும் ஒற்றைத் தலைவன்..யார் இந்த ராஜா சுப்ரமணி?
”குதிரை பேரம் நடத்திய விஜய்” இமேஜை காலி செய்த TTV! அமமுகவின் MASTERPLAN
கிங்மேக்கராக மாறிய திருமா! CM ஆகப் போவது யார்? தவெகவுக்கு ஆதரவு தருமா
Kanimozhi | ”காங். பக்கத்துல உட்காரணுமா! சீட்டை மாத்தி கொடுங்க” ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம்
’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: 'U‘ டர்ன் அடித்த விஜய்; ஆளுநர் மாளிகைக்கு கிளம்பி, பாதியில் திரும்பினார்; மீண்டும் தள்ளிப்போகும் பதவியேற்பு
'U‘ டர்ன் அடித்த விஜய்; ஆளுநர் மாளிகைக்கு கிளம்பி, பாதியில் திரும்பினார்; மீண்டும் தள்ளிப்போகும் பதவியேற்பு
Thirumavalan: விஜய்க்கு ஆதரவு அளித்தது ஏன்? திமுக கூட்டணியில் இருந்து விலகலா? திருமாவளவன் பேட்டி
Thirumavalan: விஜய்க்கு ஆதரவு அளித்தது ஏன்? திமுக கூட்டணியில் இருந்து விலகலா? திருமாவளவன் பேட்டி
MK Stalin: புதிய அரசுக்கு வாழ்த்து.! ஆனா, இத மட்டும் கவனத்தில் வச்சுக்கோங்க.. திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
புதிய அரசுக்கு வாழ்த்து.! ஆனா, இத மட்டும் கவனத்தில் வச்சுக்கோங்க.. திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
Vijay to Meet Governor: கிடைத்த விசிகவின் ஆதரவு கடிதம்; மாலையில் ஆளுநரை சந்திக்கும் விஜய்; ஆட்சி அமைக்க அழைப்பாரா.?
கிடைத்த விசிகவின் ஆதரவு கடிதம்; மாலையில் ஆளுநரை சந்திக்கும் விஜய்; ஆட்சி அமைக்க அழைப்பாரா.?
ஒருவழியாக ஆதரவை அறிவித்த விசிக; அரியணை ஏறும் விஜய்- ’’ஆசான் திருமா’’ ஆதவ் அர்ஜூனா பேட்டி!
ஒருவழியாக ஆதரவை அறிவித்த விசிக; அரியணை ஏறும் விஜய்- ’’ஆசான் திருமா’’ ஆதவ் அர்ஜூனா பேட்டி!
TVK Vs VCK: சில மணி நேரங்களில் கேரளா செல்லும் ஆளுநர்; முடிவை சொல்லாமல் இழுத்தடிக்கும் திருமா.? டென்ஷனில் தமிழ்நாடு
சில மணி நேரங்களில் கேரளா செல்லும் ஆளுநர்; முடிவை சொல்லாமல் இழுத்தடிக்கும் திருமா.? டென்ஷனில் தமிழ்நாடு
AIADMK EPS: குழப்பங்களை முடித்து வைத்த எடப்பாடி... புதிய ஆட்சிக்கு வாழ்த்துக்கள்! முற்றுப்புள்ளி வைத்த அதிமுக
AIADMK EPS: குழப்பங்களை முடித்து வைத்த எடப்பாடி... புதிய ஆட்சிக்கு வாழ்த்துக்கள்! முற்றுப்புள்ளி வைத்த அதிமுக
விஜய் மாமனா, மச்சானா? தவெக போலி கடிதம்; அசல் எங்கே, யார் எடுத்தது? டிடிவி சரமாரி கேள்வி!
விஜய் மாமனா, மச்சானா? தவெக போலி கடிதம்; அசல் எங்கே, யார் எடுத்தது? டிடிவி சரமாரி கேள்வி!
Embed widget