மேலும் அறிய

மூலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் யூரியா இல்லாததால் விவசாயிகள் கடும் அவதி

மூலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் யூரியா தட்டுப்பாடு காரணமாக மன்னார்குடிக்கு சென்று தனியார் கடையில் யூரியா வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கனமழையின் காரணமாக நெல் பயிர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் மழை இல்லாத காரணத்தினால் விவசாய நிலத்தில் தேங்கி இருந்த மழை நீரை வடிய வைத்து தற்பொழுது உரம் அடிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மூலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட கமலாபுரம் புனவாசல் எருக்காட்டூர் கருப்பூர் மூலங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது 65 நாட்கள் ஆன சம்பா பயிர்களுக்கு யூரியா இட வேண்டிய நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் யூரியா தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். யூரியா தட்டுப்பாடு காரணமாக மன்னார்குடிக்கு சென்று தனியார் கடையில் யூரியா வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


மூலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் யூரியா இல்லாததால் விவசாயிகள் கடும் அவதி

தனியார் கடையில் யூரியா வாங்க வேண்டுமென்றால் 850 ரூபாய் மதிப்புள்ள இடுபொருள் வாங்கினால் மட்டுமே யூரியா கொடுப்பதாகவும் மேலும் கமலாபுரத்திலிருந்து மன்னார்குடிக்கு வாகனத்திற்கு ஆயிரம் ரூபாய் வாடகை கொடுப்பதால் பல மடங்கு செலவு செய்து யூரியா வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் தடையின்றி யூரியா கிடைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் வைத்துள்ளனர். இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு நாளை மூலங்குடி மற்றும் கொட்டாரக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு 200 மெட்ரிக் டன் யூரியா அனுப்பப்பட இருப்பதாகவும் மாவட்டம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் யூரியா தேவைப்படுகிறதோ அந்த பகுதிகளுக்கு உடனடியாக யூரியா தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மூலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் யூரியா இல்லாததால் விவசாயிகள் கடும் அவதி

இந்த நிலை இந்த ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிலையத்தில் மட்டுமல்ல திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிலையங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக யூரியா தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர் ஒவ்வொரு முறையும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்று அங்கு கேட்டால் யூரியா வரவில்லை என்று திருப்பி அனுப்புகின்றனர் இதனால் தனியார் கடைகளில் அதிக விலைக்கு யூரியா விற்பனை செய்கிறார்கள் ஆகையால் தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு யூரியா தட்டுப்பாட்டை போக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஆசீர் கனகராஜன் உடனடியாக மூலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அங்கே யூரியா தட்டுப்பாடு இருப்பதை கண்டறிந்த அவர் உடனடியாக 10 டன் யூரியா மற்றும் ஐந்து,டன் காம்ப்ளஸ் உரங்களை அங்கு இறக்குவதற்கு ஏற்பாடு செய்தார்.மேலும் விவசாயிகளுக்கு யூரியா காம்ப்ளக்ஸ் போன்ற உரத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வங்கி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BJP ADMK SEEMAN: ஒன்று கூடும் எதிர்காட்சிகள் - சீமான், நிர்மலா, செங்கோட்டையன் சந்திப்பு? ஈபிஎஸ் ஷாக்..! திமுக அவுட்டா?
BJP ADMK SEEMAN: ஒன்று கூடும் எதிர்காட்சிகள் - சீமான், நிர்மலா, செங்கோட்டையன் சந்திப்பு? ஈபிஎஸ் ஷாக்..! திமுக அவுட்டா?
தாயின் நண்பருடன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! – 5 பேர் கைது!
தாயின் நண்பருடன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! – 5 பேர் கைது!
Pamban Bridge: பாம்பன் பாலம் திறப்பு விழா, பிரதமர் மோடி - கடல் மேலே ரயில் பயணம் எப்படி? வீடியோ வைரல்
Pamban Bridge: பாம்பன் பாலம் திறப்பு விழா, பிரதமர் மோடி - கடல் மேலே ரயில் பயணம் எப்படி? வீடியோ வைரல்
Ram Navami 2025: இன்று ராம நவமி: வீட்டிலேயே பூஜை செய்வதற்கான படிப்படியான வழிமுறைகள்!
Ram Navami 2025: இன்று ராம நவமி: வீட்டிலேயே பூஜை செய்வதற்கான படிப்படியான வழிமுறைகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : மெளனம் காக்கும் எடப்பாடிஅச்சத்தில் அமித்ஷா!பின்னணியில் விஜய்?TVK protest: ”நீயெல்லாம் பொதுச்செயலாளரா?” புஸ்ஸியை பொளக்கும் பாஜக! என்னன்னு தெரியாம போராட்டமாStudent Egg Issue On School : முட்டை கேட்ட மாணவன் துடைப்பத்தால் அடித்த ஆயா! வெளியான பகீர் காட்சிகள்Tharshan: 'பார்க்கிங்' பட பாணியில் நீதிபதி மகனுடன் அடிதடி?சிக்கலில் BIGG BOSS தர்ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP ADMK SEEMAN: ஒன்று கூடும் எதிர்காட்சிகள் - சீமான், நிர்மலா, செங்கோட்டையன் சந்திப்பு? ஈபிஎஸ் ஷாக்..! திமுக அவுட்டா?
BJP ADMK SEEMAN: ஒன்று கூடும் எதிர்காட்சிகள் - சீமான், நிர்மலா, செங்கோட்டையன் சந்திப்பு? ஈபிஎஸ் ஷாக்..! திமுக அவுட்டா?
தாயின் நண்பருடன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! – 5 பேர் கைது!
தாயின் நண்பருடன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! – 5 பேர் கைது!
Pamban Bridge: பாம்பன் பாலம் திறப்பு விழா, பிரதமர் மோடி - கடல் மேலே ரயில் பயணம் எப்படி? வீடியோ வைரல்
Pamban Bridge: பாம்பன் பாலம் திறப்பு விழா, பிரதமர் மோடி - கடல் மேலே ரயில் பயணம் எப்படி? வீடியோ வைரல்
Ram Navami 2025: இன்று ராம நவமி: வீட்டிலேயே பூஜை செய்வதற்கான படிப்படியான வழிமுறைகள்!
Ram Navami 2025: இன்று ராம நவமி: வீட்டிலேயே பூஜை செய்வதற்கான படிப்படியான வழிமுறைகள்!
Waqf Bill: ரைட்ரா..! நள்ளிரவில் சட்டமானது வக்பு திருத்த மசோதா..! ஒப்புதல் கொடுத்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
Waqf Bill: ரைட்ரா..! நள்ளிரவில் சட்டமானது வக்பு திருத்த மசோதா..! ஒப்புதல் கொடுத்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
IPL 2025 RR vs PBKS: பஞ்சரான பஞ்சர்! ராஜஸ்தான் ராஜ வெற்றி! பவுலிங்கில் பட்டையை கிளப்பிய சஞ்சு பாய்ஸ்!
IPL 2025 RR vs PBKS: பஞ்சரான பஞ்சர்! ராஜஸ்தான் ராஜ வெற்றி! பவுலிங்கில் பட்டையை கிளப்பிய சஞ்சு பாய்ஸ்!
ராமேஸ்வரம்-தாம்பரம் ரயில் எந்த ஸ்டேசனில் நிற்கும்: கொடியசைக்கும் பிரதமர் மோடி!
ராமேஸ்வரம்-தாம்பரம் ரயில் எந்த ஸ்டேசனில் நிற்கும்: கொடியசைக்கும் பிரதமர் மோடி!
India Srilanka MOU: இந்தியா-இலங்கை ராணுவ உறவில் புதிய அத்தியாயம்.. கையெழுத்தான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
இந்தியா-இலங்கை ராணுவ உறவில் புதிய அத்தியாயம்.. கையெழுத்தான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
Embed widget