மேலும் அறிய

அதிக பயனை தரும் பனைமரம்... வருங்கால வாரிசுகளுக்கு விதைப்போம் வாங்க!!!

பனையின் வேர் முதல் நுனி வரை பயன்படுகிறது. எனவேதான் இதனை கற்பகத்தரு என்ற அழைக்கின்றனர். இதில் 81 பயன்பாடு பொருள்கள் இருப்பதாக தால விலாசம் என்ற நூல் கூறுகிறது.

தஞ்சாவூர்: பனை மரங்கள் மிகுந்து காணப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தை பெற்றுள்ளது இதன் விதை, கிழங்கு, ஓலை, ஈர்க்கு, மட்டை, நார், சாறு, பழம் மரத்தண்டு என பலதரப்பட்ட பயனை தருகிற பனைமரத்தை வருங்கால வாரிசுகளுக்கு விதைப்போம் என தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஈஸ்வர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் நிலத்தின் அடையாளமாக திகழும் பனைமரம் முந்தைய ஆண்டுகளில் 30 கோடிக்கு மேல் இருந்துள்ளது. ஆனால் இன்று 3 கோடி அளவில் குறைந்து காணப்படுவது கவலை அளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் வெட்டப்படும் அளவிற்கு விதைப்பது குறைந்து காணப்படுகிறது, காலப்போக்கில் காலவாய் எனப்படும் செங்கல் சூளைகளுக்காக பனை மரங்கள் வெட்டப்படுவது வேதனை தருகிறது. பழங்காலத்தில் பனை மரங்கள் விளை நிலங்களின் இயற்கை வேலியாக திகழ்ந்தன. உடலை குளிர்விக்கும் நுங்கு, பதநீர் போன்றவைகளும், இயற்கை இனிப்பான கருப்பட்டிக்கும், நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கிற்கும் மூலப்பொருள் பனைமரம் ஆகும். பனை ஓலைகள் விசிறிகளாகவும், கூடை பெட்டியாகவும், உணவு பரிமாறும் இலைகளாகவும், வேலி தட்டுக்களாகவும் பயன்படுகிறது.

பனை வளர்ப்பு

நன்கு காய்ந்து முற்றிய பனங்கொட்டையை விதைத்தால் மூன்று மாதங்களில் பனங்கன்று உற்பத்தி ஆகும். நட்ட 9 முதல் 10 ஆண்டுகளில் பருவத்திற்கு வந்து விடும். 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் ஆண், பெண் மரத்தினை அடையாளம் காண முடியும். ஆண் பனை அழகு பனை எனவும், பெண் பனை பருவப்பனை எனவும் அழைக்கப்படுகிறது.

பனையின் வேர் முதல் நுனி வரை பயன்படுகிறது. எனவேதான் இதனை கற்பகத்தரு என்ற அழைக்கின்றனர். இதில் 81 பயன்பாடு பொருள்கள் இருப்பதாக தால விலாசம் என்ற நூல் கூறுகிறது. நாம் பயன்படுத்தும் காகிதம் ஆயுள் காலம் 100 ஆண்டுகள். ஆனால் பனை ஓலையின் ஆயுள் காலம் 400 ஆண்டுகள்.

ஒரு மரத்தில் ஒரு ஆண்டுக்கு நாலு புது ஓலைகள் வளரும். நாலு பழைய ஓலைகள் கீழே விழும். 6 -12 பாளைகள் தள்ளும். 100-120 பனம் பழங்கள் காய்க்கும். சராசரியாக ஒரு மரத்தில் ஒரு ஆண்டுக்கு பனை சீசனில் 150 லிட்டர் பதநீர் கிடைக்கும். நுங்கு எட்டு முதல் பத்து குலைகள் இருக்கும் ஒரு குலையில் சராசரியாக 20 பனங்காய்கள் இருக்கும். நுங்கு வெட்டாவிடில் பனம்பழமாக கீழே விழும்.

நாலு மாதத்தில் பனங்கிழங்குகள் கிடைக்கும். ஒரு பனைமரம் ஆண்டுக்கு 5000 முதல் 6000 ரூபாய் வரை வருமானம் கொடுக்கும். தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைவிற்கு பனை மரங்கள் வெட்டப்படுவது ஒரு முக்கிய காரணமாகும். ஏனெனில் பனை மரங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை குறைவடையாமல் காக்கக்கூடியவை. ஒரு கிணற்றை சுற்றி பத்து பனைமரம் இருந்தால் கடும் வறட்சி காலங்களிலும் தண்ணீர் வற்றாது என்பது தமிழக விவசாயிகள் பலரும் உணர்ந்த அனுபவம். பனம் பூவை உலர்த்தி கொளுத்தி சாம்பலாக்கி சலித்து அரை கிராம் அளவு நீரில் கலந்து காலை, மாலை குடித்து வர வாத குன்மம், நீர் எரிச்சல் குணமாகும்.

பனங்கிழங்கை உலர்த்தி, பொடித்து தேங்காய் பால், உப்பு சேர்த்து உண்டு வர உடல் வலிமை பெறும். பனங்கிழங்கை அவித்து தோலும் நரம்பு நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் கரப்பான், தோல் அரிப்பு, சீத கழிச்சல் ஆகியவை கட்டுப்படும். குழந்தைகளுக்கு வெயில் காலங்களில் ஏற்படும் வேர்க்குருவை நீங்குவதற்கு நுங்கை அரைத்து உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் கழித்து குளித்து வர பூரண குணம் கிடைக்கும்.
பனைவெல்லம் உடல் வெப்பம் தணிக்கும். பித்தம் தணிக்கும். பனம் பழம் சாப்பிட்டு வந்தால் கண்களில் அனைத்து நோய்களும் நீங்கி பார்வை பலம் பெறும்.

உபரி வருவாய்

பனைமரம் நம்முடைய உணவு மற்றும் மருந்து கலாச்சாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நுங்கு, பனைவெல்லம், பனங்கற்கண்டு ஆகியவை இன்றும் மக்களின் நேரடி பயன்பாட்டில் இருக்கிறது. எனவே பனை மரங்களை நடுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் பனை மரங்களை வளர்ப்பதை நமது கடமையாக செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும்.

 
 

தலைப்பு செய்திகள்

நெல் சாகுபடிக்கு மாற்றாக மலர் விவசாயம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் செண்டிப்பூக்கள் 
நெல் சாகுபடிக்கு மாற்றாக மலர் விவசாயம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் செண்டிப்பூக்கள் 
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
Farmers Subsidy : ரூ.25 லட்சம் மானியம்.! உழவர் உற்பத்தியாளர்களுக்கு ஜாக்பாட்- அமைச்சர் வினோத் முக்கிய அறிவிப்பு
ரூ.25 லட்சம் மானியம்.! உழவர் உற்பத்தியாளர்களுக்கு ஜாக்பாட்- அமைச்சர் வினோத் முக்கிய அறிவிப்பு
எச்சரிக்கை..!
எச்சரிக்கை..! "விதிமீறலில் ஈடுபட்டால் உரிமம் ரத்து" உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?
சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?
வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!
வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!
Embed widget