மேலும் அறிய

அதிக பயனை தரும் பனைமரம்... வருங்கால வாரிசுகளுக்கு விதைப்போம் வாங்க!!!

பனையின் வேர் முதல் நுனி வரை பயன்படுகிறது. எனவேதான் இதனை கற்பகத்தரு என்ற அழைக்கின்றனர். இதில் 81 பயன்பாடு பொருள்கள் இருப்பதாக தால விலாசம் என்ற நூல் கூறுகிறது.

தஞ்சாவூர்: பனை மரங்கள் மிகுந்து காணப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தை பெற்றுள்ளது இதன் விதை, கிழங்கு, ஓலை, ஈர்க்கு, மட்டை, நார், சாறு, பழம் மரத்தண்டு என பலதரப்பட்ட பயனை தருகிற பனைமரத்தை வருங்கால வாரிசுகளுக்கு விதைப்போம் என தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஈஸ்வர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் நிலத்தின் அடையாளமாக திகழும் பனைமரம் முந்தைய ஆண்டுகளில் 30 கோடிக்கு மேல் இருந்துள்ளது. ஆனால் இன்று 3 கோடி அளவில் குறைந்து காணப்படுவது கவலை அளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் வெட்டப்படும் அளவிற்கு விதைப்பது குறைந்து காணப்படுகிறது, காலப்போக்கில் காலவாய் எனப்படும் செங்கல் சூளைகளுக்காக பனை மரங்கள் வெட்டப்படுவது வேதனை தருகிறது. பழங்காலத்தில் பனை மரங்கள் விளை நிலங்களின் இயற்கை வேலியாக திகழ்ந்தன. உடலை குளிர்விக்கும் நுங்கு, பதநீர் போன்றவைகளும், இயற்கை இனிப்பான கருப்பட்டிக்கும், நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கிற்கும் மூலப்பொருள் பனைமரம் ஆகும். பனை ஓலைகள் விசிறிகளாகவும், கூடை பெட்டியாகவும், உணவு பரிமாறும் இலைகளாகவும், வேலி தட்டுக்களாகவும் பயன்படுகிறது.

பனை வளர்ப்பு

நன்கு காய்ந்து முற்றிய பனங்கொட்டையை விதைத்தால் மூன்று மாதங்களில் பனங்கன்று உற்பத்தி ஆகும். நட்ட 9 முதல் 10 ஆண்டுகளில் பருவத்திற்கு வந்து விடும். 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் ஆண், பெண் மரத்தினை அடையாளம் காண முடியும். ஆண் பனை அழகு பனை எனவும், பெண் பனை பருவப்பனை எனவும் அழைக்கப்படுகிறது.

பனையின் வேர் முதல் நுனி வரை பயன்படுகிறது. எனவேதான் இதனை கற்பகத்தரு என்ற அழைக்கின்றனர். இதில் 81 பயன்பாடு பொருள்கள் இருப்பதாக தால விலாசம் என்ற நூல் கூறுகிறது. நாம் பயன்படுத்தும் காகிதம் ஆயுள் காலம் 100 ஆண்டுகள். ஆனால் பனை ஓலையின் ஆயுள் காலம் 400 ஆண்டுகள்.

ஒரு மரத்தில் ஒரு ஆண்டுக்கு நாலு புது ஓலைகள் வளரும். நாலு பழைய ஓலைகள் கீழே விழும். 6 -12 பாளைகள் தள்ளும். 100-120 பனம் பழங்கள் காய்க்கும். சராசரியாக ஒரு மரத்தில் ஒரு ஆண்டுக்கு பனை சீசனில் 150 லிட்டர் பதநீர் கிடைக்கும். நுங்கு எட்டு முதல் பத்து குலைகள் இருக்கும் ஒரு குலையில் சராசரியாக 20 பனங்காய்கள் இருக்கும். நுங்கு வெட்டாவிடில் பனம்பழமாக கீழே விழும்.

நாலு மாதத்தில் பனங்கிழங்குகள் கிடைக்கும். ஒரு பனைமரம் ஆண்டுக்கு 5000 முதல் 6000 ரூபாய் வரை வருமானம் கொடுக்கும். தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைவிற்கு பனை மரங்கள் வெட்டப்படுவது ஒரு முக்கிய காரணமாகும். ஏனெனில் பனை மரங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை குறைவடையாமல் காக்கக்கூடியவை. ஒரு கிணற்றை சுற்றி பத்து பனைமரம் இருந்தால் கடும் வறட்சி காலங்களிலும் தண்ணீர் வற்றாது என்பது தமிழக விவசாயிகள் பலரும் உணர்ந்த அனுபவம். பனம் பூவை உலர்த்தி கொளுத்தி சாம்பலாக்கி சலித்து அரை கிராம் அளவு நீரில் கலந்து காலை, மாலை குடித்து வர வாத குன்மம், நீர் எரிச்சல் குணமாகும்.

பனங்கிழங்கை உலர்த்தி, பொடித்து தேங்காய் பால், உப்பு சேர்த்து உண்டு வர உடல் வலிமை பெறும். பனங்கிழங்கை அவித்து தோலும் நரம்பு நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் கரப்பான், தோல் அரிப்பு, சீத கழிச்சல் ஆகியவை கட்டுப்படும். குழந்தைகளுக்கு வெயில் காலங்களில் ஏற்படும் வேர்க்குருவை நீங்குவதற்கு நுங்கை அரைத்து உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் கழித்து குளித்து வர பூரண குணம் கிடைக்கும்.
பனைவெல்லம் உடல் வெப்பம் தணிக்கும். பித்தம் தணிக்கும். பனம் பழம் சாப்பிட்டு வந்தால் கண்களில் அனைத்து நோய்களும் நீங்கி பார்வை பலம் பெறும்.

உபரி வருவாய்

பனைமரம் நம்முடைய உணவு மற்றும் மருந்து கலாச்சாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நுங்கு, பனைவெல்லம், பனங்கற்கண்டு ஆகியவை இன்றும் மக்களின் நேரடி பயன்பாட்டில் இருக்கிறது. எனவே பனை மரங்களை நடுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் பனை மரங்களை வளர்ப்பதை நமது கடமையாக செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும்.

 
 

தலைப்பு செய்திகள்

தஞ்சை  மாவட்டத்தில் 49 கிராம விவசாயிகளுக்கு 25% பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க பரிந்துரை
தஞ்சை  மாவட்டத்தில் 49 கிராம விவசாயிகளுக்கு 25% பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க பரிந்துரை
விழுப்புரம் விவசாயிகளுக்கு குட் நியூஸ்! பயறு சாகுபடிக்கு ரூ.4.53 கோடி சிறப்புத் திட்டம்
விழுப்புரம் விவசாயிகளுக்கு குட் நியூஸ்! பயறு சாகுபடிக்கு ரூ.4.53 கோடி சிறப்புத் திட்டம்
கமிஷன் கேட்டா உடனே வேலை காலி! எச்சரிக்கை விடுத்த அமைச்சர்..!
கமிஷன் கேட்டா உடனே வேலை காலி! எச்சரிக்கை விடுத்த அமைச்சர்..!
Farmers Subsidy : விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.15,000.! அசத்தல் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி .? என்னென்ன ஆவணங்கள் தேவை.?
விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.15,000.! அசத்தல் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி .? என்னென்ன ஆவணங்கள் தேவை.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vanni Arasu:
Vanni Arasu: "முதலமைச்சர் விஜய் கொடுத்த துணிச்சல்லதான் நாங்க செயல்படுகிறோம்.." நெகிழ்ந்து பேசிய அமைச்சர் வன்னியரசு
Vijay PM Candidate : ’பிரதமர் வேட்பாளர் விஜய்? - பதற்றத்தில் காங்கிரஸ்’ டார்கெட் 2034..!
’பிரதமர் வேட்பாளர் விஜய்? - பதற்றத்தில் காங்கிரஸ்’ டார்கெட் 2034..!
CM Vijay: மீண்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
மீண்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
"இனி பொறுக்க முடியாது!" தனிப் பெரும்பான்மைக்கு போட்ட திட்டம்... சீக்ரெட் மூவ் நகர்த்தும் விஜய்!
TASMAC employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! விடுமுறை, பணி உயர்வு, முன் பணம் வெளியான அசத்தல் அறிவிப்புகள் இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! விடுமுறை, பணி உயர்வு, முன் பணம் வெளியான அசத்தல் அறிவிப்புகள் இதோ..
Trump Slams Iran: ஈரான் ஒரு தோல்வியடைந்த நாடு, அது செத்துவிட்டது“; பதில் தாக்குதலால் கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்
ஈரான் ஒரு தோல்வியடைந்த நாடு, அது செத்துவிட்டது“; பதில் தாக்குதலால் கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப்
7 Seater Turbo CNG: பட்டாசான தீபாவளி தான்..! 7 சீட்டரில் டர்போ சிஎன்ஜி - மைலேஜும், ஸ்பீடும் அள்ளப்போகுது - முழு விவரம்
பட்டாசான தீபாவளி தான்..! 7 சீட்டரில் டர்போ சிஎன்ஜி - மைலேஜும், ஸ்பீடும் அள்ளப்போகுது - முழு விவரம்
Novak Djokovic:G.O.A.T-ன் கதை முடிந்ததா..! கதறி அழுத ஜோகோவிச் - US ஓபன் டென்னிஸ் முதல் ரவுண்டிலேயே போராடி தோல்வி
G.O.A.T-ன் கதை முடிந்ததா..! கதறி அழுத ஜோகோவிச் - US ஓபன் டென்னிஸ் முதல் ரவுண்டிலேயே போராடி தோல்வி
Embed widget