Madurai ; மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா: நாட்டு மீன்கள் குவிந்தன.. விவசாயம் செழிக்குமா?
மீன்பிடி திருவிழாவின் மூலம் அதிகமழை பெய்து நீர்நிலைகள் பெறுவதுடன் விவசாயம் செழிக்கும் என்று மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

மேலூர் அருகே பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற மீன்பிடி திருவிழா : பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு பல்வேறு வகையான பெரியவகை நாட்டு மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து மகிழ்ந்தனர்.
மீன்பிடி திருவிழா
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, ஆண்டிபாலகர் கோவிலுக்கு சொந்தமான செம்மணிகம்மாயில் உள்ளது. இக்கண்மாய் மூலம் இப்பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் விவசாய பணிகள் முடிந்தவுடன், இக்கண்மாயில் பாரம்பரிய முறைப்படி நடைபெறும் மீன்பிடி திருவிழா நடைபெறும். அதன்படி, பாரம்பரிய முறைப்படி நடைபெறும் மீன்பிடி திருவிழா இன்று நடைபெறும் என கிராமத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, செம்மணிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழவளவு, கொங்கம்பட்டி சுமதிபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் அதிகாலை முதலே கம்மாயில் வருகை தந்தனர். பின்பு கிராம பெரியவர்கள் கோவிலில் வழிபாடு நடத்தி வெள்ளை வீசி, கண்மாயில் மீன்பிடிக்க அனுமதி அளித்தனர்.
நாட்டுரக மீன்களை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பிடித்து மகிழ்ந்தனர்.
இதனைத்தொடர்ந்து, மீன்பிடி திருவிழாவில் பங்கேற்க வந்திருந்த 500 மேற்பட்ட பொதுமக்கள், தாங்கள் வைத்திருந்த, கச்சா, வலை, உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இதில், கட்லா, ரோகு, சிலேபி, விரால் என பல்வேறு வகையான நாட்டுரக மீன்களை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பிடித்து மகிழ்ந்தனர். பிடிக்கப்பட்ட மீன்களை வீட்டில் கொண்டு சென்று சமைத்து, சாமிக்கு படைத்த பின் தங்கள் உண்பதாகவும், இதுபோன்ற மீன்பிடி திருவிழாவின் மூலம் அதிகமழை பெய்து நீர்நிலைகள் பெறுவதுடன் விவசாயம் செழிக்கும் என்று மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.






















