மேலும் அறிய

Subsidy for setting up poultry farm : நாட்டுக்கோழி வளர்க்க ஆர்வமா..? அரசு தருகிறது மானியம் ..! முழு விவரத்தை தெரிந்து கொள்ளுங்க..!

Subsidy for setting up poultry farm : ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.  

நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான, (250 எண்ணிக்கை) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் 50 சதவீதம் மானியம், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளார். 

 நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம் ( Subsidy for setting up poultry farm )

கால்நடை பராமரிப்புத்துறை 2023-24ம் ஆண்டில் மானியக் கோரிக்கை அறிவிப்பு எண். 4-ன்படி  ஒவ்வொரு மாவட்டத்திலும் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறமையும் ஆர்வமும் உள்ள 3 முதல் 6 தொழில் முனைவோர் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முக்கிய தகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது. மேற்காணும் திட்டம் 2023 . 24 ஆம் ஆண்டில் அனைத்து (37) மாவட்டங்களிலும், குறிப்பாக  திட்டம் செயல்படுத்தப்படாத 27 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.

மொத்த  செலவில்  50 சதவீதம் மானியம்


நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு  ( தீவனத்தட்டு  மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு ), மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ( கோழி வளரும் வரை ) ஆகியவற்றிற்கான மொத்த  செலவில்  50 சதவீதம் மானியம் (ரூ.1,50,625)  மாநில அரசால் வழங்கப்படும் .

  • திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ (அ) தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி   திரட்ட வேண்டும். 
  • ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.  
  • பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும்.  இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். 

நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்

  • மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.  விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.  2022 -23ஆம் ஆண்டிற்கான  நாட்டுக்கோழி வளர்ப்பு  திட்டத்தின்  கீழ்  பயனாளிகள் பயனடைந்திருக்கக் கூடாது.
  • கட்டுமானப்பணிகள், தீவனம் (ம) உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும். 
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டத்தின் கீழ் , நாட்டுக்கோழி வளர்ப்பில்  திறமையும் ஆர்வமும் உள்ள 3 முதல் 6 தொழில் முனைவோர் / பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் பயனாளிகளிடமிருந்து  ஆதார் அட்டை நகல்,  பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம் ) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி,  2022 -23ஆம் ஆண்டிற்கான  நாட்டுக்கோழி வளர்ப்பு  திட்டத்தின்  கீழ்   பயனடையவில்லை  என்பதற்கான சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

மாவட்டங்களிலிருந்து பெறப்படும் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளின் பட்டியலிலிருந்து, முன்னுரிமை அடிப்படையில் 100 பயனாளிகள்,  கால்நடை பராமரிப்பு  மற்றும்  மருத்துவப்பணிகள்  இயக்குநர்  அவர்களால் இறுதி செய்யப்படும் .மேற்படி பொருள் குறித்து பொதுமக்கள் அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது
ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது" என்பதே அரசின் முதன்மை நோக்கம் - அண்ணாதுரை..!
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
வாட்டி வதைத்த வெயில்... திடீரென பெய்த மழை: மயிலாடுதுறை மாவட்டத்தை குளிர்வித்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி!
வாட்டி வதைத்த வெயில்... திடீரென பெய்த மழை: மயிலாடுதுறை மாவட்டத்தை குளிர்வித்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி!
சிவகங்கை செட்டிநாடு வேளாண் கல்லூரி: 62 கோடியில் புதிய கட்டடம் திறப்பு.. புதிய வசதிகள் என்ன - முழு விவரம் !
சிவகங்கை செட்டிநாடு வேளாண் கல்லூரி: 62 கோடியில் புதிய கட்டடம் திறப்பு.. புதிய வசதிகள் என்ன - முழு விவரம் !
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget