மேலும் அறிய

பொங்கல் தொகுப்பில் பனங்கிழங்கை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொழிலாளர்கள்

பொங்கல் பரிசு தொகுப்பில் பனங்கிழங்கை வழங்க வேண்டும் என கடந்த ஆண்டே கோரிக்கை விடுத்தோம். எங்களது கோரிக்கை முறையாக சென்றடையவில்லை.

ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி எட்டயபுரம் அருகே வைப்பாற்று பகுதி நிலங்களில் இருந்து பனங்கிழங்குகளை எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவில்பட்டி பகுதியில் ரூ.100-க்கு விற்பனை பொங்கல் பண்டிகையை சிறப்பிக்க பனங்கிழங்குகள் தயார்.


பொங்கல் தொகுப்பில் பனங்கிழங்கை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொழிலாளர்கள்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய அவற்றுக்கு பூஜை செய்து, பணிகளை தொடங்குவார்கள். பூஜையில், நெல் மணிகள், காய்கறிகள், மஞ்சள் குலை ஆகியவற்றுடன் பனங்கிழங்கும் பிரதானமாக இடம்பெற்றிருக்கும். 


பொங்கல் தொகுப்பில் பனங்கிழங்கை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொழிலாளர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி பகுதிகளுக்கு அடுத்தபடியாக எட்டயபுரம் அருகே தாப்பாத்தி, அயன்வடமலாபுரம் மற்றும் வைப்பாற்று கரையோர பகுதியில் சுமார் 2 லட்சம் பனை மரங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் கடைசி முதல் ஆனி வரை பதநீர் சீசன் இருக்கும். அதன் பின்னர் நுங்கு சீசன் 2 மாதங்களுக்கு காணப்படும். தொடர்ந்து முதிர்ந்த நுங்கு பனம்பழமாக மாறிவிடும். பழுத்து உதிரிந்த பனம்பழத்தை சேகரிக்கு பனைத் தொழிலாளர்கள், அதனை குறுமணலில் 2 அடி வரை ஆழம் தோண்டி புதைப்பது வழக்கம். 90 நாட்களில் வடகிழக்கு பருவமழையில் ஏற்படும் ஈரப்பதத்தில், பனை விதை கிழங்காக விளைந்து தைப்பொங்கல் பண்டமாக மாறிவிடும். 


பொங்கல் தொகுப்பில் பனங்கிழங்கை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொழிலாளர்கள்

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில், எட்டயபுரம், அயன்வடமலாபுரம் மற்றும் வைப்பாற்று கரையோர பகுதி நிலங்களில் இருந்து பனங்கிழங்குகளை தோண்டி எடுக்கும் பணியில் பனை தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடைகளில் 25 எண்ணம் கொண்ட ஒரு பனங்கிழங்கு கட்டு ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


பொங்கல் தொகுப்பில் பனங்கிழங்கை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொழிலாளர்கள்

இதுகுறித்து அயன்வடமலாபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை கூறுகையில், “கடந்த ஆவணி மாதம் வைப்பாற்றங்கரையோரம் சுமார் ஒரு லட்சம் பனை விதைகள் விதைத்துள்ளோம். பனங்கிழங்கை பொறுத்தவரை ஈரப்பதமும் தேவை, அதே வேளையில் வெயிலும் தேவைப்படும். ஆனால், இந்தாண்டு சரிவர மழை பெய்யவில்லை. இதனால் பனங்கிழங்கு விளைச்சல் என்பது சுமாராகவே உள்ளது. கரிசல் மண்ணில் விளைவிக்கப்படும் பனங்கிழங்கு என்பதால் தமிழகம் முழுவதில் இருந்து வியாபாரிகள் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாகவே வந்து, தங்களுக்கு தேவையான பனங்கிழக்குகள் முன்வைப்பு தொகையாக அளித்துவிட்டு சென்றுவிட்டனர்.

பனை மரத்தை பொறுத்தவரை வேரில் இருந்து அதன் ஓலைகள் வரை அனைத்துமே பயன்பாடுள்ளது தான். அதிலும் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. எனவே, பொங்கல் பரிசு தொகுப்பில் பனங்கிழங்கை வழங்க வேண்டும் என கடந்த ஆண்டே கோரிக்கை விடுத்தோம். ஆனால், எங்களது கோரிக்கை முறையாக சென்றடையவில்லை. வரும் காலங்களில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் பனங்கிழங்கை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Embed widget