மேலும் அறிய

10 பேர் மட்டுமே பயன்பெறுவர்; தமிழக அரசுக்கு நாகை விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை..!

விவசாய பயனாளிகளுக்கு மானிய விலையிலான உரம், விதை உள்ளிட்ட குறுவை தொகுப்பினை ஆட்சியர் அருண்தம்புராஜ், மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் வழங்கினர்.

நாகப்பட்டினத்தில் உரத் தட்டுப்பாடு என்பது முற்றிலும் இல்லை என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். 

நாகை மாவட்டம் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாய பயனாளிகளுக்கு மானிய விலையிலான உரம், விதை உள்ளிட்ட குறுவை தொகுப்பினை ஆட்சியர் அருண்தம்புராஜ், மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் அருண் தம்புராஜ் ஒரு மாதத்திற்கு முன்பாகவே மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நாகை மாவட்ட விவசாயிகள் குருவை சாகுபடி பணி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். 


10 பேர் மட்டுமே பயன்பெறுவர்; தமிழக அரசுக்கு நாகை விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை..!

மேலும், தமிழக அரசு அறிவித்த விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அதேபோல் நாகை மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு என்பது முற்றிலும் இல்லை என்றும்,  குறுவை சாகுபடிக்கு தேவையான 9 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவும், 390 மெட்ரிக் டன் பொட்டாசியமும், 403 மெட்ரிக் டன் டிஏபி உரங்களும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறினார்.

இது தொடர்பாக விவசாயிகள் தெரிவிக்கையில், நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு முன்கூட்டியே தண்ணீர் வந்து சேர்ந்ததால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 61 கோடி ரூபாய் குறுவை தொகுப்பு திட்டம் அரசு அறிவித்துள்ள நிலையில் நாகை மாவட்டத்திற்கு 3000 ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு திட்ட உதவி அறிவித்து திட்டம் தொடங்கி தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும், சுமார் ஐம்பதாயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 3000 ஏக்கர் என்பது ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து முதல் பத்து விவசாயிகள் வரை மட்டுமே பயன்பெறுவார்கள் எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே தொடர்ச்சியாக வெள்ளம், வறட்சி என பாதிக்கப்படும் நாகை மாவட்டத்திலுள்ள விவசாயிகளை பாதுகாக்கும் விதமாக குறைந்தபட்சம் 25 ஆயிரம் ஏக்கர் அளவிற்காவது குறுவை தொகுப்பு திட்ட உதவி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாகை கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கரூர் ரயில்வே பணி: விவசாய நில நீர் வழிக்கு உயர்நீதிமன்றம் பாதுகாப்பு உத்தரவு!
கரூர் ரயில்வே பணி: விவசாய நில நீர் வழிக்கு உயர்நீதிமன்றம் பாதுகாப்பு உத்தரவு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
35 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை... 18 மாவட்ட மக்களின் குடிநீரை காக்க புதிய கதவணைகள் எப்போது?
35 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை... 18 மாவட்ட மக்களின் குடிநீரை காக்க புதிய கதவணைகள் எப்போது?
எகிறுது எதிர்பார்ப்பு... தலைவாழை இலைக்கு புவிசார் குறியீடு எப்போது: திருவையாறு விவசாயிகள் கேள்வி
எகிறுது எதிர்பார்ப்பு... தலைவாழை இலைக்கு புவிசார் குறியீடு எப்போது: திருவையாறு விவசாயிகள் கேள்வி

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
TNEB : மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
Embed widget