மேலும் அறிய

என் நிலத்தை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை வழங்குங்கள்: ஆட்சியரிடம் விவசாயி கோரிக்கை- காரணம் இதுதான்!

வெள்ளகாலம், வறட்சி காலம் இரண்டிலும் பாதிப்பு ஏற்படுவதால் தனது நிலத்தை அரசு எடுத்து கொண்டு அதற்குறிய தொகையை வழங்க வேண்டும் என்று விவசாயி குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, வேளாண்மைத் துறை  இணை இயக்குநர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்கா பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் தேவைகளையும், குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.


என் நிலத்தை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை வழங்குங்கள்: ஆட்சியரிடம் விவசாயி கோரிக்கை- காரணம் இதுதான்!

அப்போது சீர்காழி தாலுக்கா அகணி கிராமத்தில் உள்ள தனது 5 ஏக்கர் நிலத்தை அரசு எடுத்துகொண்டு அதற்குறிய தொகையை வழங்கிட வேண்டும் என்று கூறி, வீரமணி என்ற விவசாயி பரபரப்பை ஏற்படுத்தினார். அதுகுறித்து அவர் கூறுகையில், ''வெள்ள காலம், வறட்சிக் காலம் இரண்டிலும் பாதிப்பு ஏற்படுவதால் விவசாய பணிகளை தொடர முடியவில்லை என்றும், விவசாயம் செய்வதற்காக கடன் வாங்கி கடனாளியாக கஷ்டப்படுவதை விரும்பவில்லை என்றும், விவசாயத்தில் தொடர் இழப்பை சந்தித்து வருவதால் அகணி கிராமத்தில் உள்ள எனது 5 ஏக்கர் நிலத்தை அரசு எடுத்துக்கொண்டு, அதற்குரிய தொகையை வழங்க வேண்டும்’’ என்று கூறி சீர்காழியை சேர்ந்த வீரமணி என்ற விவசாயி குறைதீர் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். 


என் நிலத்தை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை வழங்குங்கள்: ஆட்சியரிடம் விவசாயி கோரிக்கை- காரணம் இதுதான்!

’’பயிர் பாதிப்படைந்த தனக்கு காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்றும், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சம்பா பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி மற்றும் விவசாயிகளின் பங்களிப்பாக மொத்தம் 2,319 கோடி ரூபாய் செலுத்தப்பட்ட நிலையில், காப்பீட்டு நிறுவனம் 560 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது.

எனவே, வருங்காலங்களில், காப்பீட்டு நிறுவனம் பயிர்ச்சேதம் குறித்த கணக்கெடுப்பை வேளாண் துறை, வருவாய்த்துறை மற்றும் முன்னிலையில் மட்டுமே கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களைப் போன்று தமிழக அரசே காப்பீட்டை ஏற்று நடத்த வேண்டும்’’ என்றும்  அன்பழகன் என்ற விவசாயி கோரிக்கை விடுத்தார்.


என் நிலத்தை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை வழங்குங்கள்: ஆட்சியரிடம் விவசாயி கோரிக்கை- காரணம் இதுதான்!

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, ’’நடப்பு சம்பா, தாளடி பருவ சாகுபடி இலக்காக 74,341 ஹெக்டேர்  பெறப்பட்டுள்ளது. இதில் சம்பா சாகுபடி பரப்பு இலக்காக 36,401 ஹெக்டேரும் மற்றும் தாளடி பருவ சாகுபடி இலக்காக 37,940 ஹெக்டேரும் இலக்காக பெறப்பட்டுள்ளது.

இதில் தற்போது வரை 15,201 ஹெக்டேரில் நேரடி விதைப்பும், 9370 ஹெக்டேரில் சாதா நடவும் மற்றும் 28229 ஹெக்டேரில் திருந்திய சாகுபடி பரப்பளவு ஆக கூடுதலாக 52800 ஹெக்டேர் பரப்பில் சம்பா, தாளடி பருவத்தில் நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும், சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான 445.2 ஹெக்டேர் அளவில் சாதா நாற்றங்காலும், 223.4 ஹெக்டேர் அளவில் திருந்திய நெல் சாகுபடி நாற்றங்காலும் கூடுதலாக 668.6 பரப்பில் சம்பா, தாளடி நாற்றங்காலும் உள்ளது.



என் நிலத்தை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை வழங்குங்கள்: ஆட்சியரிடம் விவசாயி கோரிக்கை- காரணம் இதுதான்!

நடப்பு சம்பா, தாளடி பருவத்திற்கு நீண்டகால மற்றும் மத்திய கால நெல் ரக விதைகளான ஆடுதுறை 51, சி.ஆர்.1009, சப்-1, டி.கே.எம்.13 ஆகிய விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விதை கிராமத் திட்டத்தில் ஒரு கிலோவிற்கு 17.50 ரூபாய் மானியமும் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது வரை விவசாயிகளுக்கு 680.52 மெ.டன் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 222.41 மெ.டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. மேலும், தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் 1562 மெ.டன் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு 406 மெ.டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது’’ என்று தெரிவித்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ration Shop: ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
Rs 1000 Incentive For Rural School Girls: 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500.! 6 ஆம் வகுப்புக்கு ரூ.1000 ஊக்கத்தொகை - அசத்தல் அறிவிப்பு
3 முதல் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500.! 6 ஆம் வகுப்புக்கு ரூ.1000 ஊக்கத்தொகை - அசத்தல் அறிவிப்பு
உங்க பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையா? 75,000 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்!
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ration Shop: ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
Rs 1000 Incentive For Rural School Girls: 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500.! 6 ஆம் வகுப்புக்கு ரூ.1000 ஊக்கத்தொகை - அசத்தல் அறிவிப்பு
3 முதல் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500.! 6 ஆம் வகுப்புக்கு ரூ.1000 ஊக்கத்தொகை - அசத்தல் அறிவிப்பு
உங்க பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையா? 75,000 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Tomato And Onion Price: நீயா.? நானா.? போட்டி போடும் தக்காளி, வெங்காயம் விலை - ஒரு கிலோ இவ்வளவா.?
நீயா.? நானா.? போட்டி போடும் தக்காளி, வெங்காயம் விலை - ஒரு கிலோ இவ்வளவா.?
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
Embed widget