காஞ்சிபுரம் ஆட்சியராக சினேகா IAS: யார் இந்த அதிரடி அதிகாரி? மக்கள் மனதில் இடம் பிடித்த காரணம் என்ன?
Kanchipuram D Sneha IAS Profile : " காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக தி. சினேகா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்."

தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவித்துள்ள நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது, இயல்பான ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக மூன்றாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்த, கலைச்செல்வி மோகன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த சினேகா ஐஏஎஸ் காஞ்சிபுரம் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த தி. சினேகா ஐஏஎஸ் ?
சினேகா 2017 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. புதிய பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் நான்காவது மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்தார். தி.சினேகா தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (TIDCO) மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் செயல் இயக்குநராக பணியாற்றியுள்ளார். TIDCO-வில் இருந்தபோது, தொழில்துறை சார்ந்த திட்டங்களை ஒருங்கிணைப்பது, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சிகளை மேம்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளார்.
டைடல் பூங்காக்கள், டிஜிட்டல் ஹவுஸிங் திட்டங்கள், ஸ்டார்ட் அப் திட்டங்கள் போன்றவையும் அவரது நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வந்தது. இதற்கு முன்னர், அவர் கிரேட்டர் சென்னை மாநகராட்சியில் கல்வித் துறை ஆணையராகவும் (Commissioner of Education) பணியாற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று ஓசூர் மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓசூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றியபோது, மக்களிடம் நெருங்கி பழகும் அதிகாரியாக இருந்து வந்தார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக செய்தது என்ன ?
சினேகா ஐஏஎஸ் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மக்களிடம் நெருங்கி பழகும் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து வந்தார். குறிப்பாக நேரடியாக ஆய்வுக்கு செல்வது, மக்களிடம் குறைகளை நேரடியாக கேட்டு அறிவது என சுறுசுறுப்பாக பணியாற்றி வந்தார். குறிப்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இவர் பணியாற்றிய போது, அரசு கோப்புகள் வேகமாக கையெழுத்திடப்பட்டு மக்கள் பணிகள் தீர்த்து வைக்கப்பட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.























