மேலும் அறிய

விவசாயிகளே உடனே விஏஓ அலுவலகம் செல்லுங்கள் - இல்லைன்னா அப்புறம் வருத்தப்படாதீங்க..!

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை புதிய செயலி மூலம் கணக்கெடுக்கும் பணி மயிலாடுதுறை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை: டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ 20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதன் தொடக்கமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய செயலி (App) மூலம் விளைநிலங்கள் கணக்கெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புயல் மழையால் 55,000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த நவம்பர் 28ஸ-ஆம் தேதி இரவு முதல் 30-ஆம் தேதி வரை டிட்வா புயலின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மிதமான முதல் கனமழை வரை கொட்டித் தீர்த்தது. இந்த இடைவிடாத மழையால், மாவட்டத்தில் சுமார் 55,000 ஏக்கருக்கும் அதிகமான சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் பாதிப்புக்குள்ளாகின.

நேற்று முதல் மழை ஓய்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், விளைநிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய செயலி மூலம் கணக்கெடுப்பு 

இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி, மழையால் சம்பா பயிர்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில், குத்தாலம், கொள்ளிடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வேளாண் அதிகாரிகள், பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட புதிய செயலி (New App) மூலம் கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

 

முதற்கட்டமாக, சீர்காழி தாலுகா நாங்கூர் பகுதியில் புதிய செயலி மூலம் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட மொழையூர் ஊராட்சி காளிங்கராயன் ஓடை பகுதியில், வேளாண் இணை இயக்குனர் சேகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பயிர் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடமும் கேட்டறிந்தனர்.

ஜிபிஆர்எஸ் கேமரா மூலம் ஆவணப்படுத்துதல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் முழுவதுமாகப் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து, சம்பந்தப்பட்ட வேளாண் அலுவலர்கள் ஜிபிஆர்எஸ் கேமரா மூலம் புகைப்படம் எடுத்து, அவற்றை உடனடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்து கணக்கெடுப்பு பணிகளைத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு முதல், பயிர் சேத மதிப்பீடு புதிய செயலி மூலம், அதிகாரிகள் விவசாயிகளின் நிலத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் கோரிக்கை & அதிகாரிகளின் விளக்கம்

விவசாயிகள் கோரிக்கை

"வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு கிராமத்திலும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து முழுமையாகவும், முறையாகவும் கணக்கெடுப்பு செய்ய வேண்டும். சாலையோரங்களில் உள்ள பாதிப்புகளை மட்டும் பார்க்காமல், குக்கிராமங்களில் மழையால் பல இடங்களில் முழுமையாகச் சேதமடைந்துள்ள பயிர்களையும் கணக்கெடுப்பு செய்து, அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வேளாண்மை இணை இயக்குனர் விளக்கம்

இதுகுறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர் கூறுகையில்:

* மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 68,000 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன.

* டிட்வா புயல் மழையால் 18,189 ஹெக்டேர் (சுமார் 45,000 ஏக்கர்) விளைநிலங்களில் மழை நீர் சூழ்ந்து தற்போது வடிந்து வருகிறது.

* இதில் கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாகத் தண்ணீர் தேங்கியிருந்த சுமார் 10,000 ஹெக்டேரில் (சுமார் 25,000 ஏக்கர்) நெற்பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன.

* தமிழக அரசின் உத்தரவின் பேரில், 33 சதவீதத்துக்கு மேல் அழிந்த பயிர்களுக்கு கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களால் தொடங்கப்பட்டுள்ளது.

* இன்னும் ஐந்து தினங்களுக்குள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவு பெற்று, உரிய கருத்துரை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

* பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும், அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் தகுந்த ஆவணங்களைக் கொடுத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். உடனடியாக அவர்கள் வயல்கள் ஆய்வு செய்யப்பட்டு கணக்கெடுப்பு பணியில் சேர்க்கப்படும் என்றார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்; கடைநிலை ஊழியர் சஸ்பெண்ட் வெறும் கண் துடைப்பு! – வெளுத்து வாங்கிய அன்புமணி!
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்; கடைநிலை ஊழியர் சஸ்பெண்ட் வெறும் கண் துடைப்பு! – வெளுத்து வாங்கிய அன்புமணி!
600 ஏக்கர் நெற்பயிர்கள் கருகின... அதிர்ச்சியில் உறைந்துள்ள பந்தநல்லூர் விவசாயிகள்: காரணம் என்ன?
600 ஏக்கர் நெற்பயிர்கள் கருகின... அதிர்ச்சியில் உறைந்துள்ள பந்தநல்லூர் விவசாயிகள்: காரணம் என்ன?
தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த உயிரியல் தொழில்நுட்பம்
தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த உயிரியல் தொழில்நுட்பம்
தஞ்சையில் பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தஞ்சையில் பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac cigarettes ban : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Letter to MKS : ‘மு.க.ஸ்டாலின் இருட்டில் வைக்கப்பட்டார் – அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
'அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
Creta Finance Plan EMI: இந்தியாவோட ஃபேவரைட் ஹூண்டாய் கிரெட்டாவ லோன்ல வாங்கணுமா.? முன்பணம், EMI என்ன.? தெரிஞ்சுக்கோங்க
இந்தியாவோட ஃபேவரைட் ஹூண்டாய் கிரெட்டாவ லோன்ல வாங்கணுமா.? முன்பணம், EMI என்ன.? தெரிஞ்சுக்கோங்க
Parandur Airport : ’பரந்தூர் விமான நிலைய இடம்’ திமுக எழுப்பிய கேள்வியால் வெளியான உண்மை..!
’பரந்தூர் விமான நிலைய இடம் மாற்றமா?’ மத்திய அரசு அதிரடி பதில்..!
Enfield Hunter 350 on EMI: என்ஃபீல்டின் ஹார்ட்டை கவரும் ஹண்டர் 350 பைக்க வாங்க முன்பணம் எவ்ளோ வேணும்.? EMI எவ்வளவு வரும்.?
என்ஃபீல்டின் ஹார்ட்டை கவரும் ஹண்டர் 350 பைக்க வாங்க முன்பணம் எவ்ளோ வேணும்.? EMI எவ்வளவு வரும்.?
Embed widget