மேலும் அறிய

குருத்துப்பூச்சி தாக்குதலால் கைக்கொடுக்காத மக்காச்சோளம்.. பப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்!

மானாவாரி விவசாயிகளும் பப்பாளி சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். எனவே அரசு பப்பாளி சாகுபடியை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பொருளாதார ரீதியாக உதவ வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஐந்து இலட்சம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து, பாசி,கம்பு, மக்கா, சூரியகாந்தி, கொத்தமல்லி, வெங்காயம், போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிட்டனர். இதில் 30% மக்காச்சோளம் சாகுபடியாகும். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு மிகவும் கைகொடுத்தது. இதற்கு பராமரிப்பு பணி சுலபமாகும்.


குருத்துப்பூச்சி தாக்குதலால் கைக்கொடுக்காத மக்காச்சோளம்.. பப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்!

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக மக்காச்சோளம் பயிரில் குருத்துப்பூச்சி எனப்படும் அமெரிக்கன்படைப்புழு பயிர் முளைத்து இருபத்தைந்தாவது நாளில் குருத்துப்பகுதியில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து தண்டுப் பகுதியை முழுவதும் அழித்து தின்று விடுகிறது.இதனால் குருத்துப்பூச்சியை அழிக்க இருபத்தைந்து மற்றும் நாற்பதாவது நாளில் விலை உயர்ந்தமருந்து தெளிக்க வேண்டி உள்ளது. தவிர இரண்டு முறை களைபறிக்க வேண்டி உள்ளது. களை பறிக்க, மருந்து தெளிக்க, ஒரே சமயத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் கூலி ஆட்கள் தேவைப்படுவதால் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை என விவசாயிகள் சிரமப்பட வேண்டி உள்ளது விளைவித்த மக்காச்சோளம் மகசூல் விலையும் சீராக இருப்பதில்லை. அரசும் குறைந்த ஆதார விலையை நிர்ணயம் செய்வதில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பயிர் சாகுபடி தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது


குருத்துப்பூச்சி தாக்குதலால் கைக்கொடுக்காத மக்காச்சோளம்.. பப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்!

இந்நிலையில் தோட்டப் பாசன விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடிக்கு  மாற்றாக இந்தாண்டு பப்பாளி சாகுபடிக்கு மாறிவருகின்றனர். தவிர பப்பாளி சாகுபடி மற்றும் பராமரிப்பு சுலபம் என்பதால் சில கிராமங்களில் பப்பாளி சாகுபடி செயள்ளனர்.ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் வீதம் நடுகின்றனர். பப்பாளி பத்தாவது மாதம் காய்ப்புக்கு வந்துவிடுகிறது. ஒரு மரத்தில் ஐம்பது பப்பாளிபழம் வரை காய்க்கிறது. பொதுவாக பப்பாளி என்பது அன்றாடம் உண்ணக்கூடிய பழமாகும்.


குருத்துப்பூச்சி தாக்குதலால் கைக்கொடுக்காத மக்காச்சோளம்.. பப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்!

இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் கூறும்போது, புதிய வகை பப்பாளி விளைந்த காய் பருவத்தில் அதன்தோள்மீது பிளேடால் கீறி விட்டு அதில் சுரக்கும் பால் போன்ற நீரை பாத்திரத்தில் பிடித்து கேனில் நிரப்புகின்றனர். ஒரு ஏக்கருக்கு 50 கிலோ வரை அந்நீர் கிடைக்கிறது. அதை பாடம் செய்து பல்வேறு மருத்துவகுணம் மிக்க மாரடைப்பு, எலும்பு முறிவு, சர்க்கரை நோய், நீர், வாதம் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்த மாத்திரைகள், டானிக், பொடி தயாரிக்கப் பயன்படுகிறது. தவிர முககிரீம், கேசரி பவுடர், கேக் பவுடர் என எண்ணற்ற பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.


குருத்துப்பூச்சி தாக்குதலால் கைக்கொடுக்காத மக்காச்சோளம்.. பப்பாளி சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்!

இம்மரம் நான்கு ஆண்டுகள் வரை காய்த்து கொண்டிருக்கும். பத்தாவது மாதம் முதல் ஒவ்வொரு பதினைந்து நாட்கள் இடைவெளிவிட்டு பப்பாளியை கீறி அதன் நீரை  பாத்திரத்தில் பிடிக்கின்றனர்.ஏக்கருக்கு ஐம்பது கிலோ வரை கிடைக்கிறது. இதன் விலை கிலோ ரூபாய் நூற்று முப்பது விவசாயிகளிடம் விலைக்கு வாங்குகின்றனர். ஓரளவு கட்டுபடியாகக் கூடியதாகும்.தவிர பப்பாளி சாகுபடிக்கு குறைந்த வேலை ஆட்களே போதுமானதாகும். இதனால் முதற்கட்டமாக தோட்ட பாசன விவசாயிகளும் அதன் பின்னர் மானாவாரி விவசாயிகளும் பப்பாளி சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். எனவே அரசு பப்பாளி சாகுபடியை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்கிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Embed widget