மேலும் அறிய

Madurai: அடிக்கடி மின்தடை! வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சோகம் - உசிலம்பட்டியில் பரிதாபம்

உசிலம்பட்டியில் மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் விவசாயிகளால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.

உசிலம்பட்டி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் கிணற்றில் தண்ணீர் இருந்தும் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் உருவாகி, நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

வறட்சியிலும் விவசாய பணி:

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ளது. கடுமையான வறட்சி காரணமாக பல கிராமங்களில் பொதுமக்கள் குடி தண்ணீருக்கு கூட கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த சூழலிலும் சில இடங்களில் விவசாயிகள் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர். கிணறுகள் உதவியால் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்கு மின் தடை மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அடிக்கடி ஏற்படும் மின் தடை:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திடியன், அம்பட்டையன்பட்டி, உச்சப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் கோடை சாகுபடியாக நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது நெற்பயிர்கள் நெல்மணிகள் வைக்கும் பால் பருவத்தில் வளர்ந்துள்ள சூழலில்., கடந்த 20 நாட்களாக உசிலம்பட்டி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடை மற்றும் மின்சாரம் வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகளால் கிணறுகளில் தண்ணீர் இருந்தும் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இரவு நேரங்களில் எந்த நேரம் மின்சாரம் வரும், எந்த நேரம் மின்சாரம் தடைபடும் என விவசாயிகள் கணிக்க முடியாத நிலையும், பெரும்பாலான பகுதிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாததால் நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

நெற்பயிர்கள் கருகி சேதமடையும் நிலை

மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லாத நிலை நீடிப்பதால் ஏக்கர் கணக்கில் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் கருகி சேதமடையும் நிலை ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏக்கருக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்து இன்னும் சில நாட்களில் அறுவடை செய்ய உள்ள நெற்பயிர்கள் மின்தடை மற்றும் மின்சாரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்து மின்தடையை சரி செய்யவும், மின்சாரம் வழங்குவதை முறைப்படுத்தி நெற்பயிர்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Pamban Bridge: புதிய பாம்பன் பாலப் பணிகள் எப்போது முடியும்? ; பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - முழு தகவல் இதோ

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - சிவகங்கை : கண்மாய் மடையை வழிபடும் கிராம மக்கள்.. 280 கிடாய் வெட்டி விருந்துண்டு மகிழ்வு..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget