மேலும் அறிய

"243 தொகுதியில் தனித்து போட்டி” தேஜஸ்வி யாதவ் GAME STARTS! என்ன செய்யப்போகிறார் ராகுல்?

243 தொகுதியிலும் போட்டியிடப் போவதாக சொல்லி காங்கிரஸ்-க்கு ஷாக்கை கொடுத்துள்ளார் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ். ராகுல்காந்தி மீது தேஜஸ்வி யாதவ் அப்செட்டில் இருப்பதாகவும், தொகுதி பங்கீட்டில் 2 கட்சிகளும் மோதிக் கொண்டிருப்பதாகவும் சொல்கின்றனர். பீகாரில் காங்கிரஸ்- ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி உடைகிறதா என்ற கேள்வி வந்துள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகி வருகிறது பீகார். நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை இந்த தடவை எப்படியாவது வீழ்த்தி ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என முடிவோடு இருக்கிறார் தேஜஸ்வி யாதவ். ஆனால் தொகுதி பங்கீடு விவகாரத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருகிறது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக இடங்களுக்கு காங்கிரஸ் குறிவைப்பது தான் பிரச்னைக்கான காரணம் என சொல்கின்றனர்.

2020 சட்டசபை தேர்தலில் 144 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அந்த தேர்தலில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதனால் வரும் தேர்தலிலும் காங்கிரஸுக்கு அதிகமான இடங்களை ஒதுக்க தேஜஸ்வி யாதவ் தயக்கம் காட்டுவதாக சொல்கின்றனர். ஆனால் வாக்கு திருட்டை அம்பலப்படுத்திய பிறகு பீகாரில் ராகுல்காந்தியின் கிராஃப் எகிறியுள்ளதால் அதிக இடங்களை கேட்டு காங்கிரஸ் வாதிடுகிறது. அதேபோல் மக்களவை தேர்தலிலும் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் ராகுல்காந்தி அமர்ந்ததை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நேரத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று கேட்ட போது அதற்கு ராகுல்காந்தி பதிலளிக்காமல் நழுவி சென்றார். இது தேஜஸ்வி யாதவிற்கு அப்செட்டை கொடுத்ததாக சொல்கின்றனர். தொகுதி பங்கீடோடு சேர்த்து முதலமைச்சர் வேட்பாளர் விவகாரமும் 2 கட்சிக்குள்ளும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் பிரச்சாரத்தில் பேசிய தேஜஸ்வி யாதவ், ‘நாங்கள் திரும்ப வருவோம். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 243 தொகுதிகளிலும் நாம் போட்டியிடுவோம்” என சொல்லியுள்ளார். அப்படியென்றால் அனைத்து தொகுதிகளிலும் தேஜஸ்வி யாதவ் தனித்து களமிறங்குகிறாரா என்ற கேள்வி வந்துள்ளது. அதிலும் முசாஃபர்பூர், கண்ட்டி உள்ளிட்ட தொகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றுங்கள் என சொல்லியுள்ளார். அதில் முசாஃபர்பூர் தொகுதி காங்கிரஸ் வசம் இருக்கிறது. அதனால் கூட்டணிக்கு குழப்பமா என விவாதம் நடந்து வருகிறது.

மற்றொரு பக்கம் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக தான் தேஜஸ்வி யாதவ் இப்படி பேசியிருப்பதாக சொல்கின்றனர். அதேபோல் தனக்கான பலத்தை காட்டி தொகுதி பங்கீட்டில் தனக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்காகவும் தேஜஸ்வி யாதவ் காங்கிரஸ்-க்கு வார்னிங் கொடுக்கும் வகையில் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள்: 3ஆம் நூற்றாண்டு பாண்டியர் வரலாறு வெளிச்சத்திற்கு!
மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள்: 3ஆம் நூற்றாண்டு பாண்டியர் வரலாறு வெளிச்சத்திற்கு!
குழந்தைகளுக்கான இரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் பிரிவின் ‘மதுரம் 2026’ நிகழ்வு !
குழந்தைகளுக்கான இரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் பிரிவின் ‘மதுரம் 2026’ நிகழ்வு !
கடன் சுமை வேண்டாம் !! 10-ம் வகுப்பு மகனுக்காக தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு
கடன் சுமை வேண்டாம் !! 10-ம் வகுப்பு மகனுக்காக தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு
கீழடி, கல்வி மேம்பாடு: முந்தைய அரசின் நல்ல திட்டங்கள் தொடரும் - அமைச்சர் ராஜ்மோகன் நம்பிக்கை !
கீழடி, கல்வி மேம்பாடு: முந்தைய அரசின் நல்ல திட்டங்கள் தொடரும் - அமைச்சர் ராஜ்மோகன் நம்பிக்கை !

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget