மேலும் அறிய

Rahul Gandhi | எகிறி அடிக்கும் திமுக! SILENT MODE-ல் காங்கிரஸ்! வாயை திறப்பாரா ராகுல்? | MK Stalin

மும்மொழிக் கொள்கை விவகாரம், ஹிந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றை தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார்.. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியோ அதுதொடர்பாக வாய்திருக்காமல் இருக்கிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் இந்த விவகாரத்தில் silent mode-ல் இருப்பது அரசியல் களத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மத்தியில் இருக்கும் பாஜக அரசு எப்படியாவது நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. அதேபோல் தொகுதி மறுவரையறை திட்டத்தையும் செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. மத்திய அரசின் இந்த இரண்டு திட்டங்களுக்குமே தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. தமிழ் நாட்டை ஆளும் கட்சியான திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கடுமையாக மத்திய அரசை எதிர்த்து வருகின்றனர். அதேபோல், தமிழ் நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களையும் திமுக எடுத்து வருகிறது. 

ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக எந்த ஒரு நிலைபாட்டையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.  கடந்த முறை நடைபெற்ற  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் கலவரம் தொடர்பாக வீறியமாக முழக்கமிட்டார்.  ஆனால் தற்போது நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் ராகுல் காந்தி மும்மொழி கொள்கை விவகாரம், தொகுதிமறுவரையறை தொடர்பாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகுல் காந்தியோ தமிழக காங்கிரஸ் தமிழக எம்.பிக்களோ இது தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

மும்மொழிக்கொள்கை, தொகுதிமறுவரையறையை தென் மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தாலும் வட மாநிலங்களில் தீவிரமான எதிர்ப்பு இல்லை. எனவே இது தொடர்பாக பேசினால் அது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முடியும் என்று ராகுல் காந்தி நினைப்பதாகவும் அதனால் தான் இதுபற்றி ராகுல் நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை தமிழ் நாடு அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் சந்தித்து தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்தனர். 

பின்னர் ரேவந்த் ரெட்டி பேசுகையில்,”தொகுதி மறுசீரமைப்பை ஏற்கமாட்டோம். முதலமைச்சர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்கிறேன். கட்சி மேலிட அனுமதி பெற்று பங்கேற்பன்” என்று கூறியிருந்தார். இதனடையே மேலிட அனுமதி வேண்டுவதாக ரேவந்த் ரெட்டி கூறியது கங்கிரஸ் டெல்லி தலைமை தொகுதி மறுசீரைப்புக்கு எதிரான கூட்டு குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்காத என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டது.

மும்மொழிக் கொள்கை விவகாரம், ஹிந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றை தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வரும் சூழலில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

Vijay warns Ministers |
Vijay warns Ministers | "ஊழல் வழக்குல சிக்குனா... பதவியில இருந்து தூக்கிருவேன்" எச்சரிக்கும் விஜய்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தவெக மகளிர் அணி நிர்வாகி மிரட்டல் !! அமைச்சர் பெயரை சொல்லி மோசடி !! முதியவர் தற்கொலை
தவெக மகளிர் அணி நிர்வாகி மிரட்டல் !! அமைச்சர் பெயரை சொல்லி மோசடி !! முதியவர் தற்கொலை
ஒலிபெருக்கிகள், ஸ்பீக்கர்கள் வைப்பது நடைமுறைதான், அதற்கு முற்றிலும் தடை விதிக்க முடியாது- உயர் நீதிமன்றம் !
ஒலிபெருக்கிகள், ஸ்பீக்கர்கள் வைப்பது நடைமுறைதான், அதற்கு முற்றிலும் தடை விதிக்க முடியாது- உயர் நீதிமன்றம் !
அதிகாரிகளுக்கே 'ஷாக்' கொடுத்த மின்வாரியம்! - நகர்மன்றக் கூட்டத்தைப் பாதியிலேயே முடக்கிய மின் தடை
அதிகாரிகளுக்கே 'ஷாக்' கொடுத்த மின்வாரியம்! - நகர்மன்றக் கூட்டத்தைப் பாதியிலேயே முடக்கிய மின் தடை
இதற்காக தான் அதிமுகவில் இருந்து வெளியேறி வருகின்றனர் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
இதற்காக தான் அதிமுகவில் இருந்து வெளியேறி வருகின்றனர் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget