மேலும் அறிய

பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

தொடர்ந்து ஆறு நாட்களாக போராட்ட களத்தில் உள்ள ஆசிரியர் கண்ணன், மிகுந்த மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை திடீரென்று எடுத்திருக்கிறார்.

 பணி நிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆசிரியர் கண்ணன் என்பவர் வார்னிஷ் குடித்துத் தற்கொலைக்கு முயன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

தீவிரமடையும் ஆசிரியர் போராட்டம்

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

எனினும் இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கைக்கு அரசு இன்னும் செவி சாய்க்கவில்லை. அதேபோல பகுதி நேர ஆசிரியர்களும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2012-ஆம் ஆண்டில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். குறிப்பாக உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக் கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி ஆகிய கல்வி இணைச் செயல்பாடு பாடங்களை கற்பிக்க 16 ஆயிரத்து 549 பேர் அப்போது 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்கள்.

14 ஆண்டாக பணி நிரந்தரம் இல்லை

இதைத் தொடர்ந்து 15ஆவது கல்வி ஆண்டாகியும் பகுதிநேர ஆசிரியர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இடைப்பட்ட இந்த காலங்களில் படிப்படியாக சம்பள உயர்வு மட்டுமே 7,500 ரூபாய்வரை வழங்கி தற்போது 12,500 ரூபாயாக வழங்கப்படுகிறது. இது இன்றைய காலகட்டத்தில் சிறிதளவு கூடப் போதுமானதாக இருப்பதில்லை. இதில் மரணம், பணி ஓய்வு, ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் தற்போதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் பணியிடங்கள் காலியாகிவிட்டன.

இதனால் தற்போது சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே பணி செய்கின்றார்கள். இவர்களுக்குப் பணி நிரந்தரம் கொடுப்பது மிகவும் சவாலான காரியமில்லை என்று ஆசிரியர்கள் குரல் எழுப்புகின்றனர்.

ஆசிரியர் கண்ணன் தற்கொலைக்கு முயற்சி

இதையடுத்து, பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தொடர்ந்து ஆறு நாட்களாக போராட்ட களத்தில் உள்ள ஆசிரியர் கண்ணன், மிகுந்த மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை திடீரென்று எடுத்திருக்கிறார்.

போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதாகி வானகரத்தில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் ஆசிரியர் கண்ணன், வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். தற்போது ஆபத்தான நிலையில் உள்ள அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Ind vs Afg: அசத்திய ஆரோன் ஜார்ஜ்! ஆப்கானை அசால்ட்டாக வீழ்த்திய ஆயுஷ் பாய்ஸ்... U19 உலகக்கோப்பையில் இந்தியா
Ind vs Afg: அசத்திய ஆரோன் ஜார்ஜ்! ஆப்கானை அசால்ட்டாக வீழ்த்திய ஆயுஷ் பாய்ஸ்... U19 உலகக்கோப்பையில் இந்தியா
AIADMK Election Manifesto: கல்வி கடன் தள்ளுபடி.. முதியோர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2000 உயர்வு- கொத்து கொத்தாக வாக்குறுதி அறிவித்த இபிஎஸ்
கல்வி கடன் தள்ளுபடி.. முதியோர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2000 உயர்வு- கொத்து கொத்தாக வாக்குறுதி அறிவித்த இபிஎஸ்
Pariksha Pe Charcha 2026: முதல்முறையாக தமிழ்நாட்டில்... தேர்வு பயம் நீங்க வருகிறது பரிக்ஷா பே சர்ச்சா! பிரதமர் மோடியுடன் லைவ் உரை, எங்கே தெரியுமா?
Pariksha Pe Charcha 2026: முதல்முறையாக தமிழ்நாட்டில்... தேர்வு பயம் நீங்க வருகிறது பரிக்ஷா பே சர்ச்சா! பிரதமர் மோடியுடன் லைவ் உரை, எங்கே தெரியுமா?
Kamal in Rajya Sabha: ''தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்“ மக்களவையில் பொளந்துகட்டிய கமல்
''தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்“ மக்களவையில் பொளந்துகட்டிய கமல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |
US Trade Deal with India | ட்ரம்ப் விரித்த வலை ரஷ்யா நட்பை முறிக்கும் இந்தியா? மோடி முடிவின் பின்னணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ind vs Afg: அசத்திய ஆரோன் ஜார்ஜ்! ஆப்கானை அசால்ட்டாக வீழ்த்திய ஆயுஷ் பாய்ஸ்... U19 உலகக்கோப்பையில் இந்தியா
Ind vs Afg: அசத்திய ஆரோன் ஜார்ஜ்! ஆப்கானை அசால்ட்டாக வீழ்த்திய ஆயுஷ் பாய்ஸ்... U19 உலகக்கோப்பையில் இந்தியா
AIADMK Election Manifesto: கல்வி கடன் தள்ளுபடி.. முதியோர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2000 உயர்வு- கொத்து கொத்தாக வாக்குறுதி அறிவித்த இபிஎஸ்
கல்வி கடன் தள்ளுபடி.. முதியோர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2000 உயர்வு- கொத்து கொத்தாக வாக்குறுதி அறிவித்த இபிஎஸ்
Pariksha Pe Charcha 2026: முதல்முறையாக தமிழ்நாட்டில்... தேர்வு பயம் நீங்க வருகிறது பரிக்ஷா பே சர்ச்சா! பிரதமர் மோடியுடன் லைவ் உரை, எங்கே தெரியுமா?
Pariksha Pe Charcha 2026: முதல்முறையாக தமிழ்நாட்டில்... தேர்வு பயம் நீங்க வருகிறது பரிக்ஷா பே சர்ச்சா! பிரதமர் மோடியுடன் லைவ் உரை, எங்கே தெரியுமா?
Kamal in Rajya Sabha: ''தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்“ மக்களவையில் பொளந்துகட்டிய கமல்
''தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்“ மக்களவையில் பொளந்துகட்டிய கமல்
TN Power Shutdown (5-2-2026): நாளை மின் தடை: சென்னை, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் உட்பட பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்! உங்க ஊர் இருக்கா?
TN Power Shutdown (5-2-2026): நாளை மின் தடை: சென்னை, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் உட்பட பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்! உங்க ஊர் இருக்கா?
Honda Hornet 2.0: ஸ்டைல், பவர், மைலேஜ்; ஹோண்டா ஹார்னெட் 2.0-ன் விலை, அம்சங்கள் என்ன.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
ஸ்டைல், பவர், மைலேஜ்; ஹோண்டா ஹார்னெட் 2.0-ன் விலை, அம்சங்கள் என்ன.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
CUET UG 2026: க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! முக்கிய வழிமுறைகள், பாடத்திட்டம் இதோ!
CUET UG 2026: க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! முக்கிய வழிமுறைகள், பாடத்திட்டம் இதோ!
Edappadi Palanisamy: முதல்ல இதை பண்ணுங்க.. அப்புறம் வந்து பேசுங்க.. விஜய்க்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisamy: முதல்ல இதை பண்ணுங்க.. அப்புறம் வந்து பேசுங்க.. விஜய்க்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
Embed widget