மேலும் அறிய

பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

தொடர்ந்து ஆறு நாட்களாக போராட்ட களத்தில் உள்ள ஆசிரியர் கண்ணன், மிகுந்த மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை திடீரென்று எடுத்திருக்கிறார்.

 பணி நிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆசிரியர் கண்ணன் என்பவர் வார்னிஷ் குடித்துத் தற்கொலைக்கு முயன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

தீவிரமடையும் ஆசிரியர் போராட்டம்

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

எனினும் இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கைக்கு அரசு இன்னும் செவி சாய்க்கவில்லை. அதேபோல பகுதி நேர ஆசிரியர்களும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2012-ஆம் ஆண்டில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். குறிப்பாக உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக் கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி ஆகிய கல்வி இணைச் செயல்பாடு பாடங்களை கற்பிக்க 16 ஆயிரத்து 549 பேர் அப்போது 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்கள்.

14 ஆண்டாக பணி நிரந்தரம் இல்லை

இதைத் தொடர்ந்து 15ஆவது கல்வி ஆண்டாகியும் பகுதிநேர ஆசிரியர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இடைப்பட்ட இந்த காலங்களில் படிப்படியாக சம்பள உயர்வு மட்டுமே 7,500 ரூபாய்வரை வழங்கி தற்போது 12,500 ரூபாயாக வழங்கப்படுகிறது. இது இன்றைய காலகட்டத்தில் சிறிதளவு கூடப் போதுமானதாக இருப்பதில்லை. இதில் மரணம், பணி ஓய்வு, ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் தற்போதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் பணியிடங்கள் காலியாகிவிட்டன.

இதனால் தற்போது சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே பணி செய்கின்றார்கள். இவர்களுக்குப் பணி நிரந்தரம் கொடுப்பது மிகவும் சவாலான காரியமில்லை என்று ஆசிரியர்கள் குரல் எழுப்புகின்றனர்.

ஆசிரியர் கண்ணன் தற்கொலைக்கு முயற்சி

இதையடுத்து, பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தொடர்ந்து ஆறு நாட்களாக போராட்ட களத்தில் உள்ள ஆசிரியர் கண்ணன், மிகுந்த மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை திடீரென்று எடுத்திருக்கிறார்.

போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதாகி வானகரத்தில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் ஆசிரியர் கண்ணன், வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். தற்போது ஆபத்தான நிலையில் உள்ள அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஏழை குழந்தைகளை ராஜாக்களாக்கிய முன்னாள் மாணவி; உதவி செய்வதிலும் இப்படியொரு மாண்பா? - திருப்பத்தூரில் நெகிழ்ச்சி
ஏழை குழந்தைகளை ராஜாக்களாக்கிய முன்னாள் மாணவி; உதவி செய்வதிலும் இப்படியொரு மாண்பா? - திருப்பத்தூரில் நெகிழ்ச்சி
விழுப்புரம் நீட் தேர்வர்கள் கவனத்திற்கு.. தேர்வு மையங்கள் மற்றும் பெற்றோர் வாகன நிறுத்தங்கள் முழு விவரம் உள்ளே!
விழுப்புரம் நீட் தேர்வர்கள் கவனத்திற்கு.. தேர்வு மையங்கள் மற்றும் பெற்றோர் வாகன நிறுத்தங்கள் முழு விவரம் உள்ளே!
NEET/JEE புத்தகங்கள்..மாணவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம்... அரசு விடுதிகளில் சேர அரிய வாய்ப்பு!
NEET/JEE புத்தகங்கள்..மாணவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம்... அரசு விடுதிகளில் சேர அரிய வாய்ப்பு!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget