''லஞ்சம் ஊழல் NO EXCUSE'' சாட்டை சுழற்றும் விஜய் அதிகாரிகள் 6 பேர் SUSPEND
லஞ்சம் ஊழல் செய்தால் இனி NO EXCUSE என்ற முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் லஞ்சம் வாங்கிய புகாரில் 4 உயர் அதிகாரிகள் உட்பட 6 மாநகராட்சி அதிகாரிகள் பணியிடை நீக்கம் மீது சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை பாயும் எனவும் மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
ஊழல் இல்லா தமிழகம் என்ற முழக்கத்துடன் ஆட்சியை தொடங்கியது தவெக அரசு. சமீபத்தில் கரூரில் நடைபெற்ற முதல்வர் விஜய் யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாதுனு சொல்லிருங்க உங்க பின்னாடி நான் இருக்கேன் என மக்களிடம் பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கும் துறை ரீதியாக கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் இந்த மாதத்தில் 6 அதிகாரிகள் மீது லஞ்சம் வாங்கியதற்காக நடவடிக்கை பாய்ந்துள்ளது.லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காண்ட்ராக்டர்கள் உள்ளிட்டோர் சமர்பித்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரூ. 9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வாங்கியதாக போலி ரசீதுகளைச் சமர்ப்பித்த, மணலி மற்றும் மாதவரம் மண்டல சுகாதார அதிகாரி டாக்டர் தேவிகலா கடந்த ஜூலை 9 தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர் ஒருவரிடமிருந்து ₹6 லட்சம் வாங்கியதற்காக, ஷெனாய் நகரிலுள்ள மண்டல துணை ஆணையர் அலுவலகத்தின் முதுநிலை பூச்சியியல் வல்லுநர் சிவ பொற்கொடி ஜூலை 11 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வாங்கிய லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாக சிவ பொற்கொடி கூறிய நிலையிலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிட உரிமையாளரிடம் ₹2.5 லட்சம் லஞ்சம் கேட்டதற்காக, மாதவரம் மண்டல உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை மாநகராட்சி (சாலைப் பணியாளர் பாஸ்கர் உரிய அரசு அனுமதி பெற்றிருந்த ஒரு கட்டிட உரிமையாளரை, பூட்டி சீல் வைக்கப்போவதாக மிரட்டி ₹50,000 லஞ்சம் வாங்கியதற்காக ஜூலை 10 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ராயபுரம் மண்டலத்தில் மெக்கானிக்கல் துறை ஒப்பந்ததாரரிடம் பில்களை பாஸ் செய்ய லஞ்சம் கேட்டதற்காக, பில் கிளார்க் துர்கா மற்றும் (NULM) ஊழியரான அவரது கணவர் கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
வழக்கமாக லஞ்ச புகார்களில் சிக்கிய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர்களை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது ஊழல் செய்வது இனி தனது கவனத்திற்கு வந்தால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















