மேலும் அறிய

Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான பணிகளில் எங்கள் சட்டக் குழு ஈடுபட்டுள்ளது - கர்நாடகா.

தற்போதைய சூழலில் காவிரி படுகையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் உறுதியாக மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவக்குமார், ’’தமிழ்நாடு முதல்வர் விஜயிடம் தொலைபேசியில் பேசினேன். தற்போதைய சூழலில் காவிரி படுகையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான பணிகளில் எங்கள் சட்டக் குழு ஈடுபட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ‘’பாசன விவகாரம் தொடர்பாக நேற்று அவர்கள் சிறிதளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதுபற்றி எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.

இதற்கு முன்பும் அவர்கள் எங்கள் கோரிக்கையை இரண்டு முறை நிராகரித்திருந்தனர். எனவே, அமைச்சர் எம்.பி. பாட்டீல் உள்ளிட்ட நமது அமைச்சர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுடனும் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து நான் பேசினேன்.

நாங்கள் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்து வருகிறோம். அதன் பிறகு, நாங்கள் ஒரு முடிவை எடுப்போம். அது முடிந்ததும், நான் பெங்களூரு சென்ற பிறகு, எதிர்க் கட்சித் தலைவர்களுடனும் பேசுவேன்.

தமிழக அரசு விருப்பம்

இதற்கிடையில், சில விஷயங்கள் குறித்து என்னிடம் வந்து பேச வேண்டும் என்ற விருப்பத்தை தமிழக அரசும் வெளிப்படுத்தியுள்ளது. தலைமைச் செயலாளரும் எனக்குக் கடிதம் எழுதியுள்ளார். சிஎம் விஜய் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.

அவர்களை மரியாதையுடன் நடத்துவதும், அவர்களுக்கு உரியதைக் கொடுப்பதும் நமது கடமையாகும். நான் அவர்களிடம், 'சரி, வாருங்கள்' என்று கூறியுள்ளேன். அதனுடன், நமது மாநிலத்தின் காவிரிப் படுகைப் பகுதி தொடர்பாகவும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளேன். அதை ஆய்வு செய்ய ஹெலிகாப்டர்களை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளேன்’’ என்றும் முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

இது தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழக விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையே காவிரி நதிநீர் விவகாரம் தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
Embed widget