BAN NEET vs FAIR NEET..மாணவர்களிடையே பிளவு?கைவிடுவதா? தொடர்வதா? குழப்பம்
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை அடுத்து நாடு முழுவதும் போராட்டத்தை கைவிடுவதாக கரப்பான் பூச்சி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நடந்த போராட்டத்தை முடித்துக்கொள்ளலாம் என சிஜேபிக்காரர் ஒருவர் மைக்கில் அறிவித்தார்.
இதனையடுத்து ஒரு குழுவினர் போராட்டத்தை கைவிட முடியாது என கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
NEET தேர்வு வேண்டாம் என்பதே தமிழகத்தில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. முந்தைய திமுக அரசும் தற்போதுள்ள தவெக அரசும் நீட்டை ரத்து செய்வதாக கூறியே ஆட்சி அமைத்தன. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததால் மறுதேர்வு நடத்தப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
குறிப்பாக, கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென கரப்பான் பூச்சி மக்கள் கட்சி எனும் இளைஞர் படை திரண்ட்து. முதலில் சாதாரண போராட்டமாக தொடங்கிய இந்த போராட்டம் நாளடைவில் விஸ்வரூபம் எடுத்து நாடு முழுவதும் பெரும் போராட்டமாக வெடித்தது.
தமிழ்நாட்டிலும் இந்த போராட்டத்திற்கு பெரும் ஆதரவு எழுந்தது. ஆனால் நீட் வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளனர் தமிழக மக்கள். ஆனால் சிஜேபியின் இந்த போராட்டமோ முறையாக நீட் தேர்வு நடைபெற வேண்டும் என்பதுதான்!BAN NEET VS FAIR NEET என்ற முரண்பாடு தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதனையடுத்து சிஜேபியினர் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் நீட் வேண்டாம் என்ற மனநிலையில் களத்தில் இறங்கியவர்கள், தற்போது தங்கள் எதிர்ப்பை காட்டத்தொடங்கியுள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என கிளம்பியுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















