மேலும் அறிய

ரூ.7400 கோடியை அள்ளியது Google.. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?

கடந்த ஆண்டு Work From Home முறையால் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளது கூகுள் நிறுவனம்

கடந்த ஆண்டு முதல் கொரோனா என்ற வார்த்தை உலகம் முழுவதும் எதிரொலிக்க தொடங்கியது. கொரோனாவுக்கு பிறகு மக்களின் வழக்கமான வாழ்க்கைமுறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் முக்கியமானது Work from Home. கொரோனா தொற்று காரணமாக வீட்டில் இருந்து பணியாளர்களை வேலை பார்க்க அனுமதிக்கவேண்டும் என நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலைபார்க்க அனுமதி அளித்தது. 



ரூ.7400 கோடியை அள்ளியது Google.. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?

நேரடியாக அலுவலகத்திற்கு வருகைதர தேவையில்லாத, இணையத்தில் இணைந்தே  வேலை பார்க்கலாம் என்ற நிலையில் இருந்த பணியாளர்கள் இந்த முறையில் வேலை செய்தனர். ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், கூகுள் போன்ற பல பெரிய நிறுவனங்கள் இந்த வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் முறையை பல ஊழியர்களுக்கு நிரந்தரமாக்கவும் யோசித்தன. காரணம் லாபம். ஊழியர்கள் அலுவகத்திற்கு வராமல் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதால் நிறுவனத்திற்கு பல வகைகளில் லாபம் வருகிறது. அலுவலக சூழலில் ஊழியர்களுக்கு தேவையான சிறு சிறு தேவைகளும் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால் நிறுவனம் வழங்க தேவையில்லை என்ற நிலை உள்ளது. அந்த வகையில் நிறுவனங்கள் Work from Home முறையை ஆதரிக்கின்றன. இந்நிலையில் கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு வொர்க் ஃப்ரம் ஹோம் முறையால் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாரித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7400 கோடி ரூபாய் ஆகும். 

ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, கொரோனா பரவல் காரணமாக கூகுள் நிறுவனம் சுமார் 1.3 லட்சம் பணியாளர்களை உலகளவில் வீட்டில் இருந்தே வேலை பார்க்க அனுமதி அளித்துள்ளது. இந்த வருடமும் பல ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகின்றனர். 


ரூ.7400 கோடியை அள்ளியது Google.. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?

உணவு, மசாஜ் போன்ற ஊழியர்களுக்கான சொந்த விருப்பங்கள் பலவற்றை சலுகைகளாக கூகுள் வழங்குகிறது. ஆனால்,தற்பொது ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால் சலுகைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால்,கூகுள் அதிக அளவிலான பணத்தை சேமித்துள்ளது. மேலும் தாய் நிறுவனமான Alphabet நிறுவனத்தின் விளம்பரங்கள், பயண செலவு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றின் செலவுகளையும் கூகுள் குறைத்துள்ளது. இதன் மூலம் முதல் காலாண்டில் சுமார் ரூ.1,987 கோடி சேமித்துள்ளது.

கூகுள் இந்த வருடம் செப்டம்பரில் பல அலுவலகத்தை மீண்டும் திறக்கும் திட்டத்தில் இருக்கிறது. ஆனால் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அனைத்து இடங்களிலும் அலுவலகம் திறப்பு சாத்தியப்படுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் கொரோனாவில் இருந்து மீண்டு இயல்புநிலைக்கு திரும்பிய பல நாடுகளிலும் மீண்டும் அலுவலகத்தை கூகுள் திறக்கும் என்றே தெரிகிறது.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget