மேலும் அறிய

Chandrayaan-3 Rover: நாடே எதிர்பார்ப்பு..! -200 டிகிரி கடும் குளிர், இன்று மீண்டு வருமா சந்திரயான் 3-இன் பிரக்யான் ரோவர்?

சந்திரயான் 3 திட்டத்தின் பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்று மேற்கொள்ள உள்ளது.

சந்திரயான் 3 திட்டத்தின் பிரக்யான் ரோவர் -200 டிகிரி வரையிலான கடும் குளிரில் இருந்த நிலையில், அது மீண்டும் செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த இந்தியர்களிடையேயும் நிலவுகிறது.

சந்திரயான் 3 திட்டம்:

விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளையுமே ஆச்சரியப்படுத்தும் வகையில், திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக தரையிறக்கியது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதையடுத்து லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றின் மூலம் நடைபெற்ற அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் நிலவில் பல்வேறு கனிமங்களுடன், ஆக்சிஜன் போன்ற வாயுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தூங்க வைக்கப்பட்ட ரோவர்:

அறிவியல் ஆராய்ச்சிகளை தொடர்ந்து நிலவின் சூரிய ஒளி மறையும் சூழல் தொடங்கியதால், கடந்த 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முறையே லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை அடுத்தடுத்து ஸ்லீப் மோடிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 20ம் தேதி முதல் நிலவின் மேற்பகுதியில் மீண்டும் சூரிய ஒளி பட தொடங்கியுள்ளது. இதனால், லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ஆனால், கடந்த 2 வாரங்களில் சூரிய ஒளியே படாத அந்த பகுதியில்  மைனஸ் 120 டிகிரி முதல் மைனஸ் 200 டிகிரி வரையிலான கடும் குளிர் நிலவியுள்ளது. அதனால், ஏற்பட்ட தாக்கத்தை கடந்து பிரக்யான் ரோவர் செயல்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் ரோவரில் உள்ள சாதனங்கள் இந்த கடும் குளிரால் உறைந்து செயலற்று போக அதிக வாய்ப்புள்ளதாகவே அறிவியல் சாத்தியக்கூறுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: Aditya L1: அப்படி போடு.. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து சூரியனை நோக்கி புறப்பட்டது ஆதித்யா எல்1.. அடுத்தது லெக்ராஞ்சியன் புள்ளி தான்..!

எப்படி எழுப்பப்படும்?

நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ளது. APXS மற்றும் LIBS பேலோடுகள் அணைக்கப்பட்டுள்ளன. ​பேட்டரி ஏற்கனவே முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி முதல் நிலவின் மேற்பரப்பில் சூரிய ஒளி விழ தொடங்கியுள்ள நிலையில், சாதனங்களில் உள்ள சூரிய ஒளி தகடுகள் கூடுதல் ஆற்றலை சேமிக்க தொடங்கியுள்ளன.  பூமியிலிருந்து வழங்கப்படும் சிக்னல்களை பெறும் ரிசீவரும் ஆன் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை பூமியிலிருந்து வழங்கப்படும் கட்டளைகளை ஏற்று, ரோவர் உயிர் பெற்று எழுந்தால் அது மீண்டும் நிலவின் மேற்பரப்பில் பயணித்து பல்வேறு கூடுதல் தகவல்களை வழங்கும்.

மீண்டும் வருமா பிரக்யான் ரோவர்?

ஒருவேளை இஸ்ரோ பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பட வைத்தால், அதில் உள்ள சாதனங்கள் மூலம் மேலும் பல்வேறு தகவல்களை சேகரிக்க முடியும். இது இந்தியாவிற்கான போனஸாகவே கருத முடியும். காரணம் ஏற்கனவே இந்த ரோவர் 14 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அது மீண்டும் செயல்பட தொடங்கினால், அடுத்த 14 நாட்களுக்கும் நிலவின் மேற்பரப்பு, வளிமண்டலம் மற்றும் அங்கு உள்ள கனிமங்கள் மற்றும் வாயுக்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை இஸ்ரோவால் சேகரிக்க முடியும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Tata Nexon: பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
தமிழகத்தை பற்றி தெரியாதவர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியா.? சிஎம் விஜய்க்கு எதிராக சீறிய CPI
தமிழகத்தை பற்றி தெரியாதவர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியா.? சிஎம் விஜய்க்கு எதிராக சீறிய CPI
Selvaperunthagai : காங்கிரஸ் மாஜி தலைவரை தட்டி தூக்கும் திமுக.? ராகுலுக்கு ஷாக் கொடுக்க ரெடியாகும் ஸ்டாலின்.?
காங்கிரஸ் மாஜி தலைவரை தட்டி தூக்கும் திமுக.? ராகுலுக்கு ஷாக் கொடுக்க ரெடியாகும் ஸ்டாலின்.?
Embed widget