மேலும் அறிய

Chandrayaan-3 Rover: நாடே எதிர்பார்ப்பு..! -200 டிகிரி கடும் குளிர், இன்று மீண்டு வருமா சந்திரயான் 3-இன் பிரக்யான் ரோவர்?

சந்திரயான் 3 திட்டத்தின் பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்று மேற்கொள்ள உள்ளது.

சந்திரயான் 3 திட்டத்தின் பிரக்யான் ரோவர் -200 டிகிரி வரையிலான கடும் குளிரில் இருந்த நிலையில், அது மீண்டும் செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த இந்தியர்களிடையேயும் நிலவுகிறது.

சந்திரயான் 3 திட்டம்:

விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளையுமே ஆச்சரியப்படுத்தும் வகையில், திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக தரையிறக்கியது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதையடுத்து லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றின் மூலம் நடைபெற்ற அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் நிலவில் பல்வேறு கனிமங்களுடன், ஆக்சிஜன் போன்ற வாயுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தூங்க வைக்கப்பட்ட ரோவர்:

அறிவியல் ஆராய்ச்சிகளை தொடர்ந்து நிலவின் சூரிய ஒளி மறையும் சூழல் தொடங்கியதால், கடந்த 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முறையே லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை அடுத்தடுத்து ஸ்லீப் மோடிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 20ம் தேதி முதல் நிலவின் மேற்பகுதியில் மீண்டும் சூரிய ஒளி பட தொடங்கியுள்ளது. இதனால், லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ஆனால், கடந்த 2 வாரங்களில் சூரிய ஒளியே படாத அந்த பகுதியில்  மைனஸ் 120 டிகிரி முதல் மைனஸ் 200 டிகிரி வரையிலான கடும் குளிர் நிலவியுள்ளது. அதனால், ஏற்பட்ட தாக்கத்தை கடந்து பிரக்யான் ரோவர் செயல்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் ரோவரில் உள்ள சாதனங்கள் இந்த கடும் குளிரால் உறைந்து செயலற்று போக அதிக வாய்ப்புள்ளதாகவே அறிவியல் சாத்தியக்கூறுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: Aditya L1: அப்படி போடு.. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து சூரியனை நோக்கி புறப்பட்டது ஆதித்யா எல்1.. அடுத்தது லெக்ராஞ்சியன் புள்ளி தான்..!

எப்படி எழுப்பப்படும்?

நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ளது. APXS மற்றும் LIBS பேலோடுகள் அணைக்கப்பட்டுள்ளன. ​பேட்டரி ஏற்கனவே முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி முதல் நிலவின் மேற்பரப்பில் சூரிய ஒளி விழ தொடங்கியுள்ள நிலையில், சாதனங்களில் உள்ள சூரிய ஒளி தகடுகள் கூடுதல் ஆற்றலை சேமிக்க தொடங்கியுள்ளன.  பூமியிலிருந்து வழங்கப்படும் சிக்னல்களை பெறும் ரிசீவரும் ஆன் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை பூமியிலிருந்து வழங்கப்படும் கட்டளைகளை ஏற்று, ரோவர் உயிர் பெற்று எழுந்தால் அது மீண்டும் நிலவின் மேற்பரப்பில் பயணித்து பல்வேறு கூடுதல் தகவல்களை வழங்கும்.

மீண்டும் வருமா பிரக்யான் ரோவர்?

ஒருவேளை இஸ்ரோ பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பட வைத்தால், அதில் உள்ள சாதனங்கள் மூலம் மேலும் பல்வேறு தகவல்களை சேகரிக்க முடியும். இது இந்தியாவிற்கான போனஸாகவே கருத முடியும். காரணம் ஏற்கனவே இந்த ரோவர் 14 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அது மீண்டும் செயல்பட தொடங்கினால், அடுத்த 14 நாட்களுக்கும் நிலவின் மேற்பரப்பு, வளிமண்டலம் மற்றும் அங்கு உள்ள கனிமங்கள் மற்றும் வாயுக்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை இஸ்ரோவால் சேகரிக்க முடியும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
படப்பிடிப்பில் தாகத வார்த்தையை உபயோகித்த இயக்குநர்..பேச்சுலர் பட நடிகை திவ்யபாரதி பரபரப்பு
படப்பிடிப்பில் தாகத வார்த்தையை உபயோகித்த இயக்குநர்..பேச்சுலர் பட நடிகை திவ்யபாரதி பரபரப்பு
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Embed widget